அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. ஏழைகள் நிலவில் இருந்தால், அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத்தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைத்த தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூல். தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது, சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப்பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான், பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் […]

Read more

ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 300ரூ. படிக்க படிக்க தீராத அதிசய பிறவி! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022658.html இந்த 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், தன்னை கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தையே உருவாக்கி, உலக வரலாற்றை மாற்றியமைத்த வல்லமை பொருந்திய ஒரு தனி நபரின் ஆளுமையையும், வன்மத்தையும் பற்றிய சுவாரசியமான நூல் இது. ஹிட்லர் பற்றி எத்தனை நூல்கள் வரலாற்றில் வந்தாலும் அத்தனையையும் படிக்கத் தோன்றும் அதிசயப் பிறவி அவர். எத்தனை சர்ச்சைகள், […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 120ரூ. ஒரு நாட்டுக் கலாசார பண்பாட்டு வரலாற்றை கணிப்பதற்குத் தொல்லியல் ஆய்வுகள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. இதுகுறித்து குறிப்பாக தமிழகத்தில் பூம்புகார், காஞ்சி முதலான தொன்மைச் சிறப்புமிக்க நகரங்களில் கல்வெட்டு, நாணயம் பற்றியவை குறித்து செய்த அகழ்வராய்ச்சிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பூம்புகாரில் செய்த அகழ்வாய்வுகள், அந்நகரம் முழுமையும் அழிந்துவிட்டது என்ற எண்ணத்தைப்போக்கி, பல பகுதிகள் புதையுண்டுக் கிடக்கின்றன என்னும் உண்மையைக் காட்டுகின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகள், தொண்டை மண்டலத்தில் […]

Read more

தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம், ஆங்கிலத்தில் எஸ். ஹுசைன் ஸைதி, தமிழில் கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. மும்பை மாபியா என்றதும் நினைவுக்கு வரும் பெயர் தாவூத் இப்ராகிம். ஆனால் அவனுக்கு முன்பே மும்பை பல தாதாக்களை உருவாக்கி இருக்கிறது. ஹாஜி மஸ்தான், வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார், கரீம் லாலா ஆகியோர் தாவூத் இப்ராகிமின் முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர் எஸ். ஹுசேன் ஸைதி ஆங்கிலத்தில் சுவையாக எழுதியுள்ளார். இதைத் தமிழில் கார்த்திகா குமாரி மொழிபெயர்த்துள்ளார். மும்பையில் தாதாயிசம் […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 225ரூ. தமிழில் சரித்திர நூல்கள் பல எழுதியிருக்கும் முகில், உலக வரலாற்றில் நடந்த சில சம்பவங்களை, உணவோடு சேர்த்து எளிய நடையில் படைத்துள்ள நூல்தான் உணவு சரித்திரம். ஆதிமனிதன் முலம் அவசரயுக மனிதன் வரை ருசிக்கும் சில உணவுகளையும், அவை பெற்றுள்ள மாற்றங்களையும் எழுத்தில் சுவையூட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். உப்பு, மிளகு, பெருங்காயம், எள், மரவள்ளி ஆகியவற்றின் பின்னால் இப்படியொரு உலக வரலாறு இருப்பதைப் படிக்கும்போது வியப்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறோம். உணவு சரித்திரம் […]

Read more

மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 150ரூ. சிறந்த சிறுகதைகள் பலவற்றை எழுதி விருதுகள் பெற்றவரான பாரதி வசந்தன் எழுதியுள்ள கட்டுரைத் தொகுதி மக்கள் சமூகத்தின் மனசாட்சி. இலக்கியம், கலை, அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்று பல்வேறு பொருள்கள் பற்றிய 17 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல்கலைக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. சுதந்திரப் போரில் பங்கு கொண்ட நாடகக் கலைஞர் விஸ்வநாததாஸ், மணிலாசனத்தில் அமர்ந்தபடி தேசபக்திப் பாடல்களை பாடிக்கொண்டே உயிர்நீத்த சம்பவத்தைப் படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. மகாகவி பாரதியார் உயிர் நீத்தபோது […]

Read more

பொன் வேய்ந்த பெருமாள்

பொன் வேய்ந்த பெருமாள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. சடையவர்மர் சுந்தரபாண்டியர், மூன்றாம் ராகவேந்திர சோழர், விசயகண்ட  கோபாலன் ஆகிய சரித்திர நாயகர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்வேய்ந்த பெருமாள். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படைத்தேவை கம்பீரமான நடை. கோவி. மணிசேகரன் இயற்கையாகவே கம்பீர நடையை கைவரப்பெற்றவர். காட்சிகளை வர்ணிப்பதிலும், அசகாய சூரர். அவருடைய இந்த முத்திரைகள், இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளன. இதைப் படிக்கும் எல்லோருமே, நல்லதொரு சரித்திர நாவலைப் படித்தோம் என்ற மன நிறைவைப் பெறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 27/5/2015. […]

Read more

சின்னாலும் ஒரு குருக்கள்தான்

சின்னாலும் ஒரு குருக்கள்தான், ஆ. சிவராஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 236, விலை 150ரூ. திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது. பள்ளர், பறையர், அருந்ததியினர் என, மூன்று முக்கியமான ஜனத்தொகை அதிகமுள்ள தலித் உட்பிரிவுகளில், அருந்ததியினரே எல்லா விதத்திலும் மிக மோசமாகப் பின்தங்கி உள்ளனர் என்பது, இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் புரியும் கசப்பான உண்மை. மண்ணின் மைந்தர்களான சின்னான், குப்பாயி, வெள்ளச்சி, நல்லச்சி, அருக்காணி முதலிய குகைச்சித்திரங்களும், மாதாரிகளை ஆட்டிப் […]

Read more

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள்

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 285ரூ. தமிழ் சினிமாவுக்கு தனி சிறப்பு உண்டு. தலை சிறந்த நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், கதை-வசன ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் ஏராளமானவர்கள் தமிழ் சினிமாவின் பெருமையை வளர்த்திருக்கிறார்கள். அவர்களில் 99 கலைஞர்களின் வரலாற்றை இதில் சுவைபட எழுதியுள்ளார் எழுத்தாளர் பி.எல். ராஜேந்திரன். கலைஞர்களுடைய வரலாற்றைப் படிக்கும்போது, திரை உலகத்தின் வளர்ச்சியையும் அறிந்துகொள்கிறோம். நிறைய படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/2/2015.   —-   வேங்கையின் சபதம், ந. […]

Read more

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 452, விலை 300ரூ. எம்.ஜி.ஆரின் பிறப்பில் தொடங்கி, இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை இந்நூல் சுவைபட விவரிக்கிறது. நூலின் முகப்பில் சொல்லியிருப்பதைப்போல், திரையுலகம் அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய அவரின் மலைப்பூட்டும் சரித்திரத்தில், அதிகம் வெளிவராத, ஆனால் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இந்நூலில் நிரம்பவே இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவத்தையே விவரிக்கும் முதல் அத்தியாயத்திலேயே, அரை வயிற்றுச் சாப்பாடாவது கிடைக்கட்டும் என்று நாடகக் கம்பெனியில் அவரைச் சேர்த்து விடுவதும், நாடக வாத்தியார் அவரைச் சேர்த்து விடுவதும், […]

Read more
1 2 3 4