முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புதிய எண் 76, பாரதீஸ்வரர் காலனி, 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 350ரூ. எந்தவொரு தேவைக்கும் அரசை அணுகும்போது, அதற்குரிய விண்ணப்பத்துடன் அணுக வேண்டும். அந்த விண்ணப்பப்படிவங்கள் முறையாக இல்லையென்றாலோ, சரியாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அவை நிராகரிக்கப்பட்டுவிடும். இவ்விஷயத்தில் படித்துப்பட்டம் பெற்றவர்களே திணறும் நிலை உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை எளிதாக்கும் வகையில், அரசுத் துறைகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய விண்ணப்பங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் இந்நூலாசிரியர். பொதுவாக, […]

Read more

அவளது பாதை

அவளது பாதை, சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. பெண்களின் அவலநிலையை கூறும் நூல். தெலுங்கு இலக்கிய உலகில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் அப்பூரி சாயாதேவி தெலுங்கில் எழுதிய இந்த நூலை ஆசிரியர் கொ.மா.கோதண்டம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் 28 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெண் சமுதாயத்தால் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள் என்பதை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். இக்கதைகளை படிக்கும்போது பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா? என்று வியக்க வைக்கிறது. இதில் […]

Read more

அவ்வையார் அருளிய நல்வழி

அவ்வையார் அருளிய நல்வழி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயர் நகர், சென்னை 17, விலை 150ரூ. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு அவ்வையார் கூறி சென்ற வழியில் தெளிவு காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் விடையளிக்கும் நூல் இது. பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் 41 தலைப்புகளில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் செயல்களை எளிமையான நடையில் தந்துள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள தத்துவ கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனித மாண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அவ்வையார் பற்றி ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கும் […]

Read more

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார்

புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி தந்தைபெரியார், டி.வி. சுப்ரமணியன், செந்தூரன் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 150ரூ. உலகில் தோன்றிய முக்கியமான சமூகப் புரட்சியாளர்களுள் ஒருவர், தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆரம்பகால வாழ்க்கை, சமுதாய சிந்தனைகள், மதம், இதிகாசம் பற்றிய அவரது கருத்துகள், சுவாரசியமான சம்பவங்கள், மேடைப் பேச்சு, பொன்மொழிகள் என்று எளிய நடையில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஈ.வெ.ரா. என்ற மனிதரைப் பற்றி அறிய விரும்புவர்களுக்கும், அவர் எப்படி சமுதாயத்தைப் புரட்டிப் போடுபவராக மாறினார் […]

Read more

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, சாய்சூர்யா, 204/43, டி7, பார்சன் குருபிரசாத் ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, விலை 450ரூ. இது புதுவிதமான நாவல். 1947 ஆண்டு 15ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்குமுன், 1922 ஆகஸ்ட் 15ந்தேதி பிறந்த கல்யாணம், பின்னர் மகாத்மா காந்தியின் காரியதரிசியாக இருந்திருக்கிறார். 2000வது ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி பிறந்த சத்யா இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம். பொதுவாக சரித்திரக் கதை என்றால், சரித்திரம் குறைவாகவும், கற்பனை அதிகமாகவும் இருக்கும். இதில் கற்பனை குறைவாகவும், […]

Read more

நாடாளுமன்றத்தில் வைகோ

நாடாளுமன்றத்தில் வைகோ, பிரபாகரன் பதிப்பகம், 26, மூன்றாவது முதன்மைச்சாலை, கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை 400ரூ. டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல் சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் […]

Read more

வாழ்க்கைக் கோயில்கள்

வாழ்க்கைக் கோயில்கள், மயன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 115ரூ. கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. அவற்றில் இந்நூல் வித்தியாசமானது. முக்கியமானது. திருமணத்தடை நீக்கும் கோயில்கள் பிரிந்தவர் கூடிட வழி செய்யும் தலங்கள், வம்ச விருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள், கண்ணொளி தரும் திருத்தலங்கள் இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் ஆலயங்களின் சிறப்பை விவரித்திருப்பது சிறப்பாக உள்ளது. இந்தப் பரிகார கோயில்கள் எங்கே உள்ளன. அங்கு எப்படிப் போவது என்பவை போன்ற பயனுள்ள குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. படங்கள் கண்ணைக் […]

Read more

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை, அந்திமழை, ஜி4, குரு வைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 75ரூ. தமிழ்நாட்டில் 1967 பொதுத்தேர்தலில், காங்கிரஸை தி.மு.கழகம் தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான். தி.மு.கவும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதுபற்றிய விவரங்களை தெளிவாகவும், நடுநிலையுடனும் இந்நூலில் எழுதியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ராவ். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்ட […]

Read more

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, ஆர்.டி.எ(க்)ஸ், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 125ரூ. புதுமுக நடிகைகள், சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது? எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது? உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி குளு கொடுத்திருக்கிறார்கள். சினிமாவின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் புத்தகம்.   —- தன்னம்பிக்கை ஒரு […]

Read more

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு, ரேமண்ட் கார்வர், தமிழில் செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ்மொழி பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை […]

Read more
1 173 174 175 176 177 223