சிந்தனைக் கீற்றுகள்

சிந்தனைக் கீற்றுகள், கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. மாணவப் பருவம் முதல் கவிதைகள் எழுதி வருபவர் கா. வேழவேந்தன். தமிழ் இலக்கியப் பூங்காவில், புதுக்கவிதை என்ற சூறாவளி வீசியபோதும், இவருடைய மரபுக் கவிதைகள் தென்றலாய்த் தவழ்ந்தன. அதனால் ‘கவிவேந்தர்’ என்று போற்றப்பட்டார். அமைச்சர் பதவி வகித்தபோதும், இவருடைய கவிதைத் தொண்டு தொய்வில்லாமல் தொடர்ந்தது. “சிந்தனைக் கீற்றுகள்” என்ற இந்த நூல் அவருடைய சிந்தனைச் சிறப்புக்கும், கவிதைப் புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மொத்தம் 147 கவிதைகள் உள்ள இந்த நூலில், முதல் […]

Read more

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி, தமிழில் சிவசங்கரி, வானதி பதிப்பகம், விலை 800ரூ. ஆந்திராவில் எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டில் குடியேறி உலக சாதனை புரிந்தவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி. ஒரு காலத்தில் அரசாங்க ஆஸ்பத்திரிகளும், நகரசபை ஆஸ்பத்திரிகளும்தான் இருந்தன. இந்நிலையில் சர்வதேச தரத்துக்கு ஆஸ்பத்திரிகளை அமைத்தார், பிரதாப் சி.ரெட்டி. இன்று அவருடைய அப்போலோ ஆஸ்பத்திரிகள், உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. வெளிநாட்டவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அப்போலோ மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 60,000 பரிசோதனைகளைச் செய்கின்றன. 3000 அவசர நிலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. 2200 […]

Read more

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்

தமிழில் பிழைகள் தவிர்ப்போம், புலவர் அ.சா. குருசாமி, நர்மதாபதிப்பகம், விலை 70ரூ. தமிழில் பிழை இன்றி எழுதுவதற்கான வழிகளைச் சொல்கிறார், புலவர் அ.சா. குருசாமி. இந்தப் புத்தகத்தைப் படித்தால் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதலாம். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 300ரூ. கலை, இலக்கியம், வரலாறு குறித்து நூலாசிரியர் எஸ்.வி. ராஜதுரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக பிரச்சினைகளையும், அரசியல் கட்சிகளின் மக்கள் விரோத போக்குகுளையும் விரிவாக […]

Read more

அங்காடித் தெரு

அங்காடித் தெரு, வசந்தபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ. அங்காடித் தெரு திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகளைப் பேசிய படம் ஆகும். தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையைப் பொத்தம் பொதுவாக பேசாமல் வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதலிடம் மட்டுமல்ல, முக்கியமான இடத்தையும் பெற்றது. அதனால்தான் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த சினிமா வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் திரைக் கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இயக்குநர் ஜி. வசந்தபாலன் எழுதிய இந்தத் திரைக்கதை மெருகு குறையாமல் […]

Read more

கலாம் என்னும் கலங்கரை விளக்கு

கலாம் என்னும் கலங்கரை விளக்கு, ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், விலை 160ரூ. ஒப்பற்ற குடியரசு தலைவராக விளங்கி இணையற்ற புகழ் படைத்தவர், அப்துல் கலாம். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தன் எளிமையால், நேர்மையால், இயல்பான மானுடத் தன்மையால் காந்தம்போல ஈர்த்தவர். வாழ்க்கையின் அடித்தட்டு நிலையில் இருந்து உழைத்தும், போராடியும் இந்தியாவில் உயர்ந்த பதவியாகிய ஜனாதிபதி பதவி என்னும் உச்சம் தொட்டவர். அவரது வாழ்க்கை வரலாற்று குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகளுக்கும் பாடப்புத்தகமாக விளங்கக்கூடியது. எட்டு வயதில் வீடு வீடாகச் […]

Read more

இன்றைக்கும் ஆராய்ச்சி மணி

இன்றைக்கும் ஆராய்ச்சி மணி, தி. இராஜகோபாலன், வானதி பதிப்பகம், விலை 120ரூ, மன்னர்கள் காலத்தில் அடிக்கப்பட்ட ஆராய்ச்சி மணி இன்றைய காலத்திற்கும் அவசியம் என்பதை தனது ஆய்வு கட்டுரைகளில் வலியுறுத்துகிறார் பேராசிரியர் தி. ராஜகோபாலன். சிங்கப்பூரை உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கு மறைந்த பிரதமல் லீ குவான் இயூ எடுத்துக்கொண்ட கடின முயற்சி, அயராத உழைப்பு இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தாரா? என பாராட்ட வைக்கிறது. பண்பாடு படும்பாடு கட்டுரைகளில் தொழில்நுட்ப துறை இளைஞர்களின் காதலின் முத்தம் குறித்து கடுமையாக சாடியிருக்கிறார். இப்படி […]

Read more

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை, பருத்தியூர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், விலை 35ரூ. சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடராக இந்தியாவிற்கு வந்து சேவையாற்றிய அயர்லாந்து பெண்மணி மார்கரெட் இசபெல் நோபிள், நிவேதிதையாக மாறிய வரலாறு சுருக்கமாக எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —– இளநீர்க்காரி, அ.ஏ. பார்த்திபன், கலாநிதி ஸ்ரீநிதி பதிப்பகம், விலை 240ரூ. கவிஞர் அ.ஏ.பார்த்திபன் எழுதிய நாவல் இளநீர்க்காரி. பூ ஒன்று புயலாக மாறிய கதையை, விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், விலை 310ரூ. இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூகநீதிக்கான முதல் குரல் ஒலிக்கத் தொடங்கிய பின் புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், நம்பிக்கைக்கும் துரோகத்துக்கும் இடையில் ஊசலாடும் மனிதர்களின் தவிப்பை வெளிக்காட்டும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- தைராய்டு, மரு.கு.கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 100ரூ. மிகினும் குறையினும் நோய் செய்யும் தைராய்டு நோய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூலாகும். அனைவரும் படித்து […]

Read more

தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும்

தமிழ் அகராதிகளும் குற்றங்களும் குறைகளும், “திருத்தம்” பொன். சரவணன், சைபர்நெட் சேவை மையம், விலை 200ரூ. அகராதிகளில் காணப்படும் குற்றங்களையும், குறைகளையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார், நூலாசிரியர் “திருத்தம்” பொன். சரவணன். சில சொற்களுக்கு புதிய அர்த்தங்களை கூறுகிறார். ஆசிரியர் ஆராய்ச்சித்திறன் பாராட்டத்தக்கது. ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- நேர்மையாக சிந்திப்போம் நன்மைகள் பெறுவோம், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாறுபட்ட எண்ணங்கள் இருக்கக்கூடும். இவ்வெண்ணங்கள் முரண்பட்டும் இருக்கும். இருப்பினும் எதிர்மறை எண்ணங்களைத் […]

Read more

போராட்டம்

போராட்டம், முனைவர் பெ. சரஸ்வதி, காவ்யா, விலை 250ரூ. இந்தி இலக்கிய உலகில் ‘பிரேம்சந்த்’ என்ற பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. முப்பதாண்டு கால அவரது இலக்கியப் பணியில் 12 நாவல்களையும், கிட்டத்தட்ட 300 சிறுகதைகளையும், 3 நாடகங்களையும் எழுதியுள்ளார். அவது படைப்புக்காகவே அவரது காலம் ‘பிரேம்சந்த் யுகம்’ என்று அழைக்கப்பட்டது. அவரது போராட்டம் என்ற நாடகத்தை தமிழில் முனைவர் பெ. சரஸ்வதி மொழிபெயர்த்துள்ளார். இந்த நாடகம் 93 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாய, பொருளாதார நிலையையும், மனித வாழ்வின் போராட்டத்தையும் நமக்குப் படம் பிடித்து காட்டுகிறது. […]

Read more
1 90 91 92 93 94 223