சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும், முத்து. குணசேகரன், உலகத் தமிழாய்ச்சி நிறுவனம், விலை 105ரூ. 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதியை மே தினமாக முதன் முதலாகக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர். அது முதல்தான் “மே தினம்” கொண்டாடப்படுகிறது. பொது உடமை இயக்க முன்னோடி இவர். திராவிட இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார். பெரியாரும், சிங்காரவேலரும் 1932-ல் “சுயமரியாதை சமதர்ம இயக்கம்” என்ற பேரியக்கத்தை தொடங்கினர். அது பற்றி விரிவாகக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 04/5/2016. […]

Read more

வேலூர் மாவட்ட வரலாறு

வேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. சிவத்தலங்கள் பலவற்றுள் […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. சிறுகதை, நாவல் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர், ஜெயகாந்தன். நண்பர்களால் அவர் ‘ஜே.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஜெயகாந்தனின் கே.கே. நகர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடி அடிக்கடி கூடி விவாதிப்பது வழக்கம். அந்த இடத்தை ‘பர்ணசாலை’ என்று அழைத்தனர். ஜெயகாந்தனோடு 50 ஆண்டுக் காலம் பழகிய எழுத்தாளர் நவபாரதி, அவரோடு பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவரிடம் இருந்து பெற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் அவரது சிறுகதைகள் […]

Read more

பாஞ்சாலி

பாஞ்சாலி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 425ரூ. ராமாயணமும், மகாபாரதமும், இந்த நாட்டில் இந்து பெருமக்களால் போற்றப்படுகின்ற பெருங்காப்பியமாகும். இந்து மத சம்பிரதாயங்கள், சடங்குகள், சாஸ்திரங்கள், கற்பு நெறி, நடை உடை பாவனைகள் அனைத்தும் இந்த இரு இதிகாசங்களில் இருந்து பிறந்தவையாகவே கருதப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருட்களையும் தரவல்லது மகாபாரதம். மகாபாரத கதாபாத்திரங்களாகிய துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரை தனித்தனி பாத்திரங்களாகப் பிரித்தெடுத்து ஏற்கனவே நூலாக்கித் தந்தவர் எழுத்தாளர் எஸ். விஜயராஜ். அவர் இப்போது பாஞ்சாலியின் வரலாற்றை […]

Read more

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர்களில் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு தனித்த இடம் உண்டு. 24 வயதில் பாடல் எழுதத் தொடங்கிய அவர் 29 வயதில் மரணத்தைத் தழுவினார். 5 ஆண்டு காலத்தில் 57 திரைப்படங்களுக்கு சுமார் 201 பாடல்களை எழுதியுள்ளார். காதல் பாடல்களில் கண்ணியத்தையும், பக்திப் பாடல்களில் பகுத்தறிவையும், சமூகப் பாடல்களில் பொதுவுடைமை கருத்துக்களையும் புகுத்தியவர். ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’, ‘தூங்காதே […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், முனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், திருராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், விலை 200ரூ. தொல்காப்பியம், தமிழில் கிடைத்துள்ள மிகவும் தொன்மையான இலக்கண நூலாகும். தமிழ் அமைப்பையும், பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் பெருமையுடைய நூலாகும். இத்தகைய சிறப்பு பெற்ற தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படித்து நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அதில் உள்ள கலைச்சொற்களுக்கு முனைவர் இரா.இளங்குமரனார் அழகிய முறையில் பொருள் விளக்கம் அளித்துள்ளார். உண்மை என்ற சொல்லை விளக்குகையில், உள்> உண்>உண்மை. இதற்கு “உள்ளத்தே உள்ளதாம் தன்மை […]

Read more

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள்

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள், வில்லியனூர் தியாகி முத்து. சுந்தரமூர்த்தி, விலை 200ரூ. பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. அய்யர், நாகசாமி ஆகியோர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் (1908-1918) அவர்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பற்றி விவரிக்கிறது, “இவர்களின் புதுச்சேரி தோழர்கள்” என்ற இந்த புத்தகம். பாரதிக்கும், மற்றவர்களுக்கும் நண்பர்களாக இருந்தவர்கள் பொதுமக்களிடம் புகழ் பெற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள். தேசத்தொண்டு செய்தவர்கள், அவர்களைப்பற்றி இளைய தலைமுறையினர் அறிய இந்நூல் உதவும்.  சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளையும் […]

Read more

கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில்

கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில், சீ. வசந்தி, கோ. சசிகலா, ஹெரிடேஷ் டிரஷர் வெளியீடு, விலை 65ரூ. சோழர் கலைக்கோவில்கள் என்ற வரிசையில் திருச்சென்னம் பூண்டி சடையார்கோவில், கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில் ஆகியவை பற்றி தொல்லியல் ஆய்வாளர்களான சீ. வசந்தி, கோ. சசிகலா ஆகியோர் இணைந்து இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் தொல்லியல் ஆய்வாளர்கள் என்பதால் இந்த கோவில்களின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களுடனும் அபூர்வ படங்களுடனும் தந்து இருப்பதால் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவை பெரிதும் துணையாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 11/5/2016. […]

Read more

கல்லோ காவியமோ

கல்லோ காவியமோ, மருத்துவர் வ. இன்பசேகரன், ஏ.வி.எஸ். வடிவேல்-ஜெயலட்சுமி பதிப்பகம், விலை 150ரூ. ஊர் சுற்றினாலும் உலகம் சுற்றினாலும் இன்றளவும் மக்களிடையே கல்வி, பண்பாட்டு ஊடாட்டங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. வரலாறுகளையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. பயணம் என்பது மகிழ்வுக்காக மட்டுமல்ல, அறிவு மற்றும் புரிதல் பகிர்வுக்குமாகவே, இப்பயண நூல் அதற்கு சான்றாக உள்ளது. இந்நூல், கம்போடியா நாட்டின் இயற்கை மற்றும் பூகோள அமைப்பு, தொன்மை வரலாறு, மன்னர்தம் மாண்பு, நுண்மையான கலையியல் சான்றுகள், அங்கு திகழும் கட்டங்களின் மாட்சி என பல்துறை செய்திகளை தாங்கி […]

Read more

இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 1300ரூ. எந்த ஒரு தொரீல் என்றாலும், ஏன் விவசாயம் என்றாலும் அதில் மேலாண்மை இருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய உலகில் அழுத்தம் திருத்தமாக கூறப்படும் உண்மையாகும். மேலாண்மை பண்புகளை எல்லோரிடமும் வளர்ப்பதற்கு 105 தலைப்புகளில், ஒரு வழிகாட்டும் நூலாக திகழும் இந்த நூலை, சிறந்த இலக்கியவாதியும், சிறந்த பேச்சாளரும் மற்றும் அரசு பணியின் நிர்வாகி என பன்முகத் தன்மையை தன்னகத்தை கொண்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வே. இறைவன்பு எழுதிய […]

Read more
1 92 93 94 95 96 223