நான் மருத்துவம் மற்றவை

நான் மருத்துவம் மற்றவை, டாக்டர் வி.வி. வரதராசனின் தன்வரலாறு, ராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 240, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-7.html சிக்கல்களில் மாட்டினால் எப்படி மீள வேண்டும்? எறும்பாகப் பிறந்தபோது, அடி சறுக்கவில்லை. யானையாக வளர்ந்தபோது அடி சறுக்கியது. ஆனால் வாழ்க்கை அனுபவங்கள், சறுக்கலில் எக்கச்சக்கமாய் விழுந்து விடாமல் காப்பாற்றின என்பதை, நேரடியாக உணர்ந்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வெற்றியுடன் சாதித்து உள்ளார் டாக்டர் வரதராஜன். இதை, எளிமையாக, சுவையாக எடுத்துரைத்ததில் […]

Read more

உடையும் இந்தியா

உடையும் இந்தியா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html அரவிந்தன் நீலகண்டன் எழுதிய உடையும் இந்தியா நூலை சமீபத்தில் படித்தேன். கிழக்குப் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. மதம், அது சார்ந்த விளைவுகளை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. மதம் ஒருவரை சார்ந்த விஷயம். அதை அவர் தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தனக்குள் இருக்கும் மதத்தை, ஒருவன் உரக்கச் சொல்கிறான் என்றால், அதைப் பொருட்படுத்தாமல் போகும் பெருந்தன்மை, மற்றவர்களுக்கு வேண்டும் […]

Read more

உயிர்த்துளி உறவுகள்

உயிர்த்துளி உறவுகள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 90, விலை 70ரூ. To buy this Tamil book  online: https://www.nhm.in/shop/100-00-0002-203-2.html முட்டைகளை அடைகாக்கும் அப்பா பெங்குயின்கள் பள்ளி மாணவர்களுக்காக புன்னகை உலகம் மாத இதழில் வெளியான கட்டுரைகளுடன், சில புதிய கட்டுரைகள் சேர்த்து இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வாசகர்களாக கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் ஆழ்ந்து படிக்கும் வகையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பனிப்புயல், கடுங்குளிருக்கு நடுவில் பென்குயின்களில் அப்பாக்கள்தான் முட்டைகளை அடைகாக்கும். கூடு கட்ட தெரியாத இரு வாட்சி […]

Read more

கானகம்

கானகம், லட்சுமி சரவணக்குமார், சென்னை மலைச்சொல் பதிப்பகம். வெற்றிக்காக போராடும் இரக்கமற்ற மிருகங்கள் இளம் எழுத்தளர் லட்சுமி சரவணக்குமார் எழுதிய, கானகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சென்னை மலைச்சொல் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். முழுக்க காடு மற்றும் வேட்டையைப் பற்றி வெளிவந்த நாவல் இது. வேட்டையாடுதல் தொடர்பான நூல்கள், தமிழில் மிகக் குறைவு. 1950களில் ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை தொடர்பான நூல்கள்தான் இங்கு பிரபலமாக இருந்தன. இந்நிலையில் கானகம் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. வேட்டைக்காரனின் மனநிலை, வேட்டையாடும் முறை ஆகியவற்றோடு, அன்றாடம் […]

Read more

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள், புதுக்கவிதை வடிவில், கிருஷ்ண பிரசார், காவ்யா, பக். 1354, விலை 1300ரூ. சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையாக இடம்பெற்றள்ள பட்டினத்தார் பாடல்களும், பட்டினத்தாரின் ஏனைய பாடல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களும், புதுக்கவிதை வடிவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்ட பட்டினத்தார், தம் பாடலுள் கூறும் அரிய சைவ சித்தாந்த கருத்துகளை, எளிய, இனிய கவிதை வடிவில் இந்நூல் தந்துள்ளது. சித்ததர் என்போர் யாவர், மூடநம்பிக்கைகளை வேரறுத்து, உருவ வழிபாட்டை எள்ளி நகையாடிய இவர்கள், பின் ஏன் பல தலங்களின் இறைவனை […]

Read more

விடியலை நோக்கி

விடியலை நோக்கி, க. ராகிலா, வாசகன் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். 18 சிறுகதைகள், இந்தத் தொகுதியில் இருக்கின்றன. எல்லாமே, மணி மணியான கதைகள். முதியோர் இல்லங்களில், பெற்றோரை தவிக்க விடாதீர்கள் என்று சொல்லும் முதல் கதையான, உறவுகள் பிரிவதற்கல்ல கதை அருமை. பல சிறுகதைகளில், அருமையான குணச்சித்திர வார்ப்புகள். குட்டச்சிக் கிழவி என்ற கதையில் வரும் […]

Read more

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால்

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால், உரையும் உரைவும், உரையாசிரியர் தி.முருகரத்தனம், தமிழ்ச்சோலை வெளியீடு, பக். 145, விலை 100ரூ. உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்குத்தகுதியுடைய திருக்குறளை, பலரும் தத்தம் போக்கில் வெளியிடுகின்றனர். இந்நூலை வெளியிட்டுள்ள இந்த உரையாசிரியர், முதல் நாற்பது குறட்பாக்களை (பாயிரம்) வள்ளுவர் இயற்றவில்லை என கருதுகிறார். திருக்குறளை முப்பால் என்றுதான் கூற வேண்டும் என்றெண்ணும் ஆசிரியர், காரணம் கூறாமல் தம் விருப்பப்படி குறட்பாக்களை புதிய முறையில் வரிசைப்படுத்தி எண்கள் கொடுத்துள்ளார். இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 124, விலை 90ரூ. காந்தியம் எனும் காயகல்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிமன்ற, இலக்கியமன்ற மேடைகளில், தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர். தேச தந்தை மகாத்மா காந்தி பற்றி, லட்சக்கணக்கான புத்தகங்கள் உலகெங்கும் பதிப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்புத்தகத்தில் மொத்தம் 31 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர், தன் நண்பர் புகழ் மதியிடம் உரையாடியபோது, எழுந்த கேள்விகளுக்கு, காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தை விவரித்து, அதன் மூலம் விடை சொல்கிறார். […]

Read more

போட்டுத்தள்ளு

போட்டுத்தள்ளு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 200, விலை 170ரூ. தொழிலில், விற்பனையில் போட்டியை வெல்லும் கலையை சொல்லி தருகிறார் சதீஷ். நாம் செய்யும் தொழிலின் அடிப்படையை நாமே சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், போட்யை எப்படி சரியாகக் கணிப்பது? போட்டியாளர் யார் என்பதை எப்படி அறுதியிடுவது, நம் தொழிலின் துவக்கமே நான் யார், எந்தத் தொழிலில் இருக்கிறேன், யார் என் வாடிக்கையாளர், அவரின் எந்தத் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்ற ஆதார கேள்விகளுக்கு விடை காண்பதுதான். நீங்கள் சுய தொழில் […]

Read more

எண்ணுகிறேன் எழுதுகிறேன்

எண்ணுகிறேன் எழுதுகிறேன், டாக்டர் நா. மகாலிங்கம், ராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ. தொழிலதிபர் நா. மகாலிங்கத்தின் 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். காஷ்மீ பிரச்னைக்கு ஒரு தீர்வு என்பது முதல், வீழ்ந்த விவசாயம் விருத்தியடைய என்ற கட்டுரையோடு 21 தலைப்புகளில் நூல் நிறைவடைகிறது. மகாலிங்கம் அவ்வப்போது, ஓம் சக்தி இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். கட்டுரைகள் அனைத்திலுமே அருட்செல்வரது நாட்டுப்பற்று, ஆன்மிகச் சிந்தனை, ஆழ்ந்த அறிவியல் கண்ணோட்டம், பரந்துபட்ட உகறிவு, சமுதாய அவலங்களையும், வன்முறைகளையும் […]

Read more
1 182 183 184 185 186 240