வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், கவிஞர் பொன். செல்வமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 500ரூ. சினிமா பற்றிய புத்தகங்களில் இது புதுமாதிரியானது. திரைப்பட பாடல்களை எல்லாம் அலசி ஆராய்ந்த கவிஞர் பொன். செல்வமுத்து, “அழகு” என்று தொடங்கும் பாடல்கள், “ஆசை” என்று தொடங்கும் பாடல்கள், “தமிழ்” என்ற சொல் இடம் பெற்ற பாடல்கள், திருமணம் பற்றிய பாடல்கள் என்று அந்தப் பாடல்களை தொகுத்து தந்துள்ளார். அது மட்டுமல்ல, பாடல் இடம் பெற்ற படம், பாடிய பாடகர்கள் பற்றிய விவரம் ஆகியவற்றையும் தந்துள்ளார். அதுமட்டுமல்ல, “ஒரே ஒரு […]

Read more

கவிதை ஓர் ஆராதனை

கவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ. கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய […]

Read more

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள்

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள், பி.வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 50ரூ. நடிக மன்னன் பி.யூ. சின்னப்பா, திரைப்பட டைரக்டர் ப. நீலகண்டன், கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள். அவர்களின் நூற்றாண்டு விழா ஒரே நேரத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே மூவரின் சிறப்பை விவரிக்கும் இந்த நூலை எழுதியுள்ளார் பி. வெங்கட்ராமன். இவரும் புதுக்கோட்டைக்காரரே! இன்னும் நிறைய தகவல்களுடனும், படங்களுடனும் இதை பெரிய புத்தகமாக வெளியிடலாமே! நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- சிவரகசியம், கீர்த்தி, சங்கர் பதிப்பகம், […]

Read more

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக். 544, விலை 500ரூ. இந்த நூல், தமிழ்த் திரைப்படப் பாடல்களை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இனம் பிரித்து தொகுத்தளித்திருக்கிறது. நூலாசிரியரின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின், பொருளடக்கத்தில் உள்ள தலைப்புகளைப் படிப்பதுவே ஒரு சுவையான அனுபவமாகத்தான் இருக்கிறது. பல தலைப்புகளை உட்பிரிவாகவும் பிரித்து, அதில் அடங்கக்கூடிய பாடல்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். உதாரணமாக இசைக்கருவிகள் என்ற தலைப்பில் தோல் இசைக்கருவிகள், துளை இசைக்கருவிகள், நரம்பு இசைக்கருவிகள், […]

Read more

காமராஜ் புதிரா? புதையலா?

காமராஜ் புதிரா? புதையலா?, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், பக். 193, விலை 70ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்வு, அவரின் சாதனை, வாழ்க்கை நிகழ்வுகள், அறிவுரைகள் ஆகியவற்றை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி, புரிந்தவர்களுக்கு அவர் புதிராகவும், புரிந்தவர்களுக்கு அவர் புதையலாகவும் இருப்பதை நல்ல விளக்கங்களுடன் தந்திருப்பது சிறப்பு. மற்ற தலைவர்கள்போல் அவர் தலைவர் மட்டுமல்ல, நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ இறைவன் அனுப்பி வைத்த தவப்புதல்வன் என்கிறார் நூலாசிரியர். அதாவது காமராஜரை கல்வி, அணைக்கட்டுகள், மின்சாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை இத்தமிழ்மக்களுக்கு வழங்க […]

Read more

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன்

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன், சீ.பிரமிளா, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 100ரூ. தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடாகி தற்போது நூலாகியிருக்கிறது. பிற மொழி இலக்கியத் திறனாய்வுகளை விடத் தமிழ் இலக்கியத் திறனாய்வு மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கவிதை நூல்கள் எனப் பலவற்றுக்கும் திறனாய்வுகளை மேற்கொண்டவர் சு. செல்லப்பன். சங்க இலக்கியத் திறனாய்வு, […]

Read more

தேர்விலும் வெல்வோம்

தேர்விலும் வெல்வோம், கவி முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 30ரூ. மாணவர்கள் வெற்றி என்ற இலக்குநோக்கி பயணம் செய்வது எப்படி என்று எளிய நடையில் பல உதாரணங்களுடன் சொல்லித்தரும் நூல். தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பதன் அவசியத்தைக் கூறி, நூற்றுக்கு நூறு எடுப்பதற்கான பத்து வழிகளையும் தருவது சிறப்பு. மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை பளிச்சென விளக்கி, மாணவர் சமூகத்தை வல்லமைப்படுத்த முனைந்துள்ளார் ஆசிரியர் கவி. முருகபாரதி. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இந்நூலைப் படித்தால் அவர்கள் […]

Read more

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன்

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன், இராம. குருமர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. கடந்த 45 ஆண்டுகளாக கண்ணியம் என்ற பத்திரிகையை நடத்தி வருபவர் முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன். 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இவர் தொழிற்சங்கவாதி. அதனால் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலை நீக்க உத்தரவை கொடுத்தனர். அது ஆங்கிலத்தில் இருந்ததால், அதை வாங்க மறுத்து தமிழ் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று போராடி, தமிழில் பெற்றார். இது இவருடைய தமிழ்ப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. அவரைப் பற்றி தமிழறிஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் […]

Read more

மகா அவதார் பாபா

மகா அவதார் பாபா, வாசு. இராதாகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலை 60ரூ. சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் கி.பி. 203ம் ஆண்டில் பிறந்தவர் பாபா. பெற்றோர் சுவேதநாத அய்யர் – ஞானம்பிகை. பெற்றோருக்கு 8வது பிள்ளையாகப் பிறந்த பாபாவின் இயற்பெயர் நாகராஜ். சிரஞ்சீவியான பாபா, இன்னமும் இமயமலையில் வாழ்வதாகக் கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதும், அவர் வாழ்க்கை வரலாற்றை பாபா என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிவர். நூலாசிரியர் வாசு. இராதாகிருஷ்ணன், பாபா பற்றி […]

Read more

நம் நாயகம்

நம் நாயகம், ஜெஸிலா பானு, அல்லாப் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளை, திருவாரூர் மாவட்டம், விலை 300ரூ. இறுதி இறைத் தூதராய் இந்த அவனியில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். நபிகளாரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனித சமுதாயம் பின்பற்றி நடக்க வேண்டிய போதனைகளாகும். அதே குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக […]

Read more
1 4 5 6 7 8 13