சித்தர் களஞ்சியம்

சித்தர் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. சித்தர்களின் கோட்பாடுகள் மக்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமநிலையையும், சீரான வளர்ச்சியையும் தர வல்லன. அத்தகைய சித்தர்களின் குறிக்கோள்களையும், சிந்தனைகளையும், அற்புதங்களையும் இந்த நூலில் முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ் விரிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் சித்தர்கள் குறித்த பிற நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. சித்தர்கள் பற்றிய ஆய்வு பூர்வமான, அறிவியல் பூர்வமான பல செய்திகள் மிக நுணுக்கமாக கூறி இருக்கிறார். சித்த ஆர்வலர்களுக்கும், நெறியாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, […]

Read more

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள்

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள், வசந்தா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நாடகத்துறையிலும், சினிமா துறையிலும் சாதனை படைத்தவர் கே.ஆர். ராமசாமி. பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போல, சொந்தக் குரலில் பாடி நடித்தவர். அறிஞர் அண்ணா வசனம் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல் முதலான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி.மு. கழகத்தில் உறுப்பினராக இருந்ததால், புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர். சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை கட்சி நலனுக்காக செலவிட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவரோடு நாடகத்தில் நடித்தவரும், […]

Read more

தமிழில் அறிவியல் புலம்

தமிழில் அறிவியல் புலம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், இதழ்களும் தமிழ் மொழியில் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, இடித்துரைத்துத் தெளிய வைக்கிறார். நூலைப் படிப்போர் தமிழின் சிறப்புகளை உணர்வர். தெ.பொ.மீ., மு.வ., ராதாகிருஷ்ணன் ஆகிய பேராசிரியர்கள், கவிஞர் வாலி ஆகியோர் பற்றிய அவர்தம் கருத்துகள் நூலில் ஒளிர்கனிற்ன. பன்மொழிப் புலமைமையில் மு.வ., அவர்களைத் தெ.பொ.மீ. யோடு நிகராக்க இயலாது என, குறிப்பிட்டுள்ளமை, மனத்தை தொடுகிறது. ஆங்காங்கே நூலாசிரியரின் தன் வரலாற்றுச் செய்திகளையும் காண்கிறோம். பெயர் சுட்டப் […]

Read more

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம், உமா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான உதயணகுமார காவியம் சமண காப்பியத்தை குறிப்பது. இது விருத்தப்பாவில் அமைந்தது. ஆறு காண்டங்களில் 367 பாடல்களைக் கொண்டது. அப்பாடல்களுக்கு விளக்கவுரை கொடுத்திருக்கிறார் முனைவர் பழ. முத்தப்பன். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- திருக்குறள் சீர் ஏழுக்கு ஏழு வியனுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. இதுவரை திருக்குறளுக்கு அரிய பெரிய சான்றோர்கள் உரை எழுதியுள்ளனர். ஒருவரி உரையும் எழுதியுள்ளனர் சிலர். இன்னும் எளிய […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. மரபுக் கவிதைகள் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கும் முன்னாள் அமைச்சர் கா. வேழவேந்தன், கட்டுரைகள் தீட்டுவதிலும் வல்லவர். தித்திக்கும் தீந்தமிழ் என்ற இந்த நூலில், எத்திக்கும் போற்றும் தித்திக்கும் தீந்தமிழ், திருக்குறள் ஏன் தேசிய இலக்கியம்? காந்தி அண்ணாவின் தமிழ்த் தொடர்புகள், அறிஞர் அண்ணாவின் உயர் தனிப்பண்புகள், டாக்டர் மு.வ. அவர்களின் தனிப்பெருமைகள், கலைஞரின் நகைச்சுவை தோரணங்கள், பாவேந்தர் விதைத்த புரட்சிக் கவிதைகள் உள்பட 24 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தமிழின் பெருமையையும், […]

Read more

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. புதுக்கோட்டை வெங்கட்ராமன் தமக்கு வயதாகிவிட்டது என்பதையே உணராமல், சென்னையிலும் வெளியிடங்களிலும் நடைபெறுகிற இலக்கிய நிகழ்வுகளில் எப்போதும் இளமை உற்சாகத்தோடு பார்வையாளராகப் பங்கேற்கிறவர் பி.வி. என்று நண்பர்கள் வட்டத்தில் அறியப்படுகிற கண்ணபிரான் அச்சகம் வெளியிட்டது டிங்டாங் சிறுவர் வார இதழ். இதன் ஆசிரியராக இருந்த வடமலையழகன்தான் இந்த பி.வி. டி.வி.எஸ். நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.வி. இவர் கேரள மாநிலம் கொச்சினிலும் புதுக்கோட்டையிலும் மதுரையிலும் பணியாற்றியபோது, […]

Read more

இறையன்புவின் சிறுகதைகள்

இறையன்புவின் சிறுகதைகள், வெ. இறையன்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. இன்றைய இளைஞர் உலகத்துக்கு எதிர்காலத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள இவருடைய பேச்சும், எழுத்துகளும் ஒன்றுபோல உத்வேகம் அளிக்கிறது, என்றால் அது ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்புதான். இதுவரை 40 நூல்கள் எழுதியுள்ள இறையன்புவின் 16 சிறுகதைகளின் தொகுப்புதான் நின்னினும் நல்லன். புத்தகத்தை புரட்டும் முன்பே ‘அம்மாவிற்கு காணிக்கை, என்னை எப்போதும் குழந்தையாகவே பார்த்த அந்த மகராசிக்’ என்ற வரிகள் கண்களில் கண்ணீரை ததும்ப வைக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொரு கதையாக படிக்கும் போது, […]

Read more

தென்றல் வீசிய திரை வானம்

தென்றல் வீசிய திரை வானம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2 புத்தகங்கள் விலை ஒவ்வொன்றும் ரூ. 500. தமிழ்த்திரைபட வரலாற்றை 2 புத்தகங்களில் விவரிக்கும் நூல். இதன் ஆசிரியர் டி. ஸ்ரீனிவாஸ், நிறைய விஷயங்களைக் கூறுகிறார். இடையிடையே, இந்திப்பட வரலாறு, தெலுங்குப்பட வரலாறு ஆகியவற்றையும் புகுத்தி உள்ளார். படங்கள் மிகச்சிறியவையாக உள்ளன. சற்று பெரிதாக்கி இருக்கலாம். நன்றி: தினத்தந்தி, 6/5/2015. —-   கற்க கசடற விற்க அதற்குத்தக, விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கல்வி இப்போது வணிகமாகிவிட்டது. அதுவும் அதிக வருமானம் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more
1 5 6 7 8 9 13