ஒன்பதாவது வார்டு

ஒன்பதாவது வார்டு, கோட்டயம் புஷ்பநாத், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-284-5.html டாக்டர் ஆகும் தனது கனவை கலைத்தவர்களை பழிவாங்கும் பெண் ஆவியின் கதை தான் இந்த நாவல். கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆவி இன்னொரு பெண்ணின் உடலில் புகுந்து பழிவாங்கும் கதையை விறுவிறுப்புடனும், திகில் கலந்தும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் கதையின் போக்கு அமைந்துள்ளது. மலையாளத்தில் […]

Read more

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், ச. தில்லை நாயகம், சாகித்ய அகடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110 001, பக். 304, விலை 155ரூ. அறிஞர்களின் முக்கிய குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம் (பக். 44). ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசு, சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசகம் அளித்து விடக் கூடாது என்பதை, என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக, நான் […]

Read more

கமலின் கலைப்படங்கள்

கமலின் கலைப்படங்கள், பி.ஆர். மகாதேவன், நிழல், சென்னை 78, பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-800-4.html அறிவுஜீவி என்று ஒரு குறுகிய வட்டத்தினரும் விவரமறிந்தவர் என்று பொதுவாக பத்திரிகைகளும் கேள்வி கேட்பாமல் ஒப்புக் கொண்டுள்ள கமல்ஹாசனின் முக்கியமான, வித்தியாசமான திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றில் தர்க்கரீதியான ஓட்டைகள் மலிந்துள்ளன என்று இப்புத்தகத்தின் ஒரு பகுதி கூறுகிறது. கதை சொல்லும் சினிமாவை தீவிரமாக நேசிக்கும் நூலாசிரியர், ஹேராம், விருமாண்டி, தேவர்மகன், அன்பேசிவம், குருதிப்பஉல், குணா ஆகிய படங்களை பார்ட் […]

Read more

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை 14, பக். 296, விலை 150ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. பாரத நாட்டில் 1975 ஜுன் 25ந்தேதி நள்ளிரவு தொடங்கி 1977 மார்ச் 21ந்தேதி காலையில் முடிவடைந்த நெருக்கடிநிலையின் போது நடந்த போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நூல். நெருக்கடி நிலை அமுலாக்கப்பட்டது சுதந்திர பாரதத்தின் இருண்ட காலம். அடக்கு முறைக்கு எல்லையே இல்லாமல் இருந்து வந்த காலம் என்று வர்ணிக்கப்பட்டது. நாட்டில் புரட்சி பற்றி பேசியும், எழுதியும் வந்த கட்சிகள் இந்திரா காந்தியின் […]

Read more

பிரபலங்களின் திருமண அனுபவங்களும் கருத்துக்களும்

பிரபலங்களின் திருமண அனுபவங்களும் கருத்துக்களும், பொன். முருகேசன், சஞ்சீவியார் பதிப்பகம், டி1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 11 கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15, விலை 150ரூ. பிரபலங்களே ஆனாலும் அவர்கள் பலரின் திருமண அனுபவங்கள் போராட்டம் நிறைந்தவைதான். சிலருக்கு காதலிக்கும் போதே எதிர்ப்பு. சிலருக்கோ காதல் கைகூடி திருமணம் வரை வந்தபின் எதிர்ப்பு. இந்த மாதிரியான தடங்கல்களை தாண்டி அவர்கள் எப்படி வெற்றிகரமாக தங்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்கள் என்பதை இந்த நூலில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். மேஜர் சுந்தர்ராஜன், வி.கே,ராமசாமி, தங்கர் […]

Read more

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம்

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 440, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ். பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ். பாலசந்தர். சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்கத் திரும்பிவிட்டார். அவருடைய […]

Read more

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், பக். 560, விலை 350ரூ. ஆடுவதும், ஓடுவதும் அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது. சீர்திருத்தமும், விவேகமும் நிறைந்த அவரது ஒவ்வொரு யதார்த்த வசனமும் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்துள்ளது என்பதை, 214 தலைப்புகளில், 560 பக்கங்களில் இந்த நூல் […]

Read more

வரும் போலிருக்கிறது மழை

வரும் போலிருக்கிறது மழை, மு. முருகேஷ், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 64, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-4.html தன்னைச் சுற்றி இருப்பவை, நடப்பவை என்று எதையும் விட்டுவிடவில்லை முருகேஷ். அத்தனையையும் தன் கவிதைப் பொருளாக்கியுள்ளார். அதுவும் ஹைக்கூ வடிவத்தில். மழைவாசம் தொட்டு, விரிசல் சுவரில் விழும் விதைகள் வளர்வதுகூட அவரது ஹைக்கூ பயணத்தில் அடக்கம். ஆகாயத்தையும் வானத்தையும் அளக்க இவரது கவிதைத் தடம் போதும். அத்தனை விஷயங்கள். படிப்பவர் யாராக […]

Read more

அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்

அரச பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதிநகர், வியாசர்பாடி, சென்னை 39, பக். 385, விலை 170ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-2.html ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புப் படுகொலைகளை பட்டியலிடுவதோடு, அதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கி, ஈழத்துயர் குறித்து தமிழகத்தில் நடந்தேறிய அரசியல் நாடகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். தமிழ், தமிழர் உரிமைகள், பண்பாடு, கல்வி, சாதிவெறி, இனஅழிப்பு, முல்லைப் பெரியாறு, மீனவர் கொலை, கச்சத்தீவு தாரை வார்ப்பு, […]

Read more
1 25 26 27 28 29 30