இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ. இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் […]

Read more

உலக அரசியல்

உலக அரசியல், சுப்பிரமணியன் சந்திரன், பாரதி புத்தகாலயம். தன்னலம், சமுதாய நலம், தேசிய நலன் ஆகியவற்றை கடந்து, ஓர் உலக அரசியலுக்கு இலக்கணம் தேடும்வகையில், தத்துவ அறிஞர்கள் சிந்தித்தனர். ஆனால், நடைமுறையில் இந்த நலன்களை பலப்படுத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சியே உலக அரசியலாக மாறியுள்ளது. தேசிய நலனையும், தேசிய நலனுக்காக சமுதாய நலனையும், சமுதாய நலனுக்காக தன்னலத்தையும் துறந்துவிட முடியுமா என்ற கேள்வி, முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்மிடத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்த நூலில், இந்திய விடுதலை, முதல் உலகப்போர், இரண்டாம் உலக போர், அமெரிக்க விடுதலை, இங்கிலாந்து […]

Read more

மாமனிதர் நரேந்திரமோடி

மாமனிதர் நரேந்திரமோடி, திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குஜராத் முதல் மந்திரி – பிரதமர் வேட்பாளர் இப்படி பல சிறப்புகள் பெற்ற நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அழகாகவும் எழுதியுள்ளார் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.   —- ஸ்ரீ அருணாசல பஞ்சரத்தினம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீரமண பக்த சமாஜம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ. ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை. புலமையும் பக்தியும் […]

Read more

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. பல நூல்களைப் படித்த திருப்தியை தரக்கூடிய அளவுக்கு பல்வேறு செய்திகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும்போது, அவற்றிலுள்ள பலம், பலவீனங்களையும் ஆரோக்கியமான விமர்சனத்துடன் குறிப்பிடுவது இந்நூலாசிரியரின் தனிப் பணியாகும். இந்நூலின் முதல் கட்டுரையான காந்தியடிகளுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? என்ற காரணங்களை படிக்கும்போது, தேர்வு கமிட்டியினர் இப்படியெல்லாமா யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் மிகச் சரியான […]

Read more

உலகும் தமிழும்

உலகும் தமிழும், சவிதா பிரசுரம், தஞ்சாவூர், விலை 150ரூ. தமிழ் மொழி, தமிழின் சிறப்பு, தமிழர் பெருமை, தமிழர் பண்பாடு ஆகியவை பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட நூல். மற்ற மொழிகளின் எழுத்துக்களோடு ஒப்பிட்டும், கல்வெட்டுச் சான்றுகளோடும் நிறுவியுள்ளதோடு, இன்றைய தமிழின் நிலையையும், தமிழ் மொழி மேம்படச் செய்ய வேண்டிய பணிகளையும் நூலாசிரியர் சி. பவுன்ராஜ் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/8/2014.   —- இன்னொரு கிரகத்திற்கு, வடிவம் பதிப்பகம், திருச்சி, விலை 300ரூ. அமெரிக்காவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த […]

Read more

அபாய வனம்

அபாய வனம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 180, விலை 320ரூ. அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். பரணி, குரு என்ற இரு இளைஞர்கள் வாழ்வில் புகும், சித்தர் சிவப்பிரகாசம் என்னென்ன ஆச்சரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார் என்பதையும், அவர்கள் தேடிச்செல்லும், சித்தரின் ஜீவசமாதியும், ஏடுகளும் கிடைத்ததா என்பதையும், இறுதிவரை பரபரப்பு குன்றாமல் எழுதி உள்ளார். ஒவ்வொரு அத்தியாய முன்னுரையாக, கொல்லிமலை, சதுரகிரி உள்ளிட்ட […]

Read more

காலத்தின் குரல்

காலத்தின் குரல், மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 258, விலை 210ரூ. பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், புதிய தலைமுறை வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். கடந்த 2011-2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின்  பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத்தேர்தல்களும், […]

Read more

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம், காவ்யா, சென்னை, விலை 1400ரூ. கவிதை, உரைநடை, சினிமா பாடல், நாவல் என அனைத்து துறையிலும் தனக்கென தனி நடை வகுத்துக் கொண்டு இலக்கிய வானில் உச்சத்தைத் தொட்டவர் கவிபேரரசு வைரமுத்து. ஆண் பெண், சிறியோர் பெரியோர், படித்தோர்-பாமரர், உள்நாட்டினர்-வெளிநாட்டினர் என அனைத்துத் தமிழர்களும் உச்சி முகர்ந்து பாராட்டும் உன்னத கவிஞர் அவர். அவரது படைப்புகளை ஆய்வு செய்து எண்ணற்றோர் பி.எச்.டி. மற்றும் எம்.பில். பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 300 பி.எச்டி ஆய்வேடுகளும் 700க்கும் மேலாக எம்.பில். ஆய்வேடுகளும் […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 350ரூ. தமிழ்நாட்டில் புகழின் சிகரத்தைத் தொட்ட எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர். ஆரம்பத்தில் சிறு பத்திரிக்கைகளில் எழுதி வந்த அவர், 60களில் ஆனந்த விகடனில் எழுதினார். அவருடைய கதைகள் ஒவ்வொன்றும் முத்திரைக்கதைகளாகப் பிரசுரிக்கப்பட்டன. அதன் மூலம் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் 80வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜெயகாந்தனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், விகடன்பிரசுரம் அவருடைய கதைகளைப் புதுமையான  முறையில் வெளியிட்டுள்ளது. அதாவது 50 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் கதைகள் எந்த […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 1092, விலை 650ரூ. பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் வெளியான 100 சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார். இந்தக் கதைகளைத் தேர்வு செய்தது பற்றியும், கதைகளின் சிறப்பு பற்யும் விளக்கி, ராமகிருஷ்ணன் எழுதியுள்ள 22 பக்க முன்னுரை நன்றாக உள்ளது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் உள்பட சில எழுத்தாளர்களின் 3 கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில எழுத்தாளர்களின் 2 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் ராமகிருஷ்ணனின் 2 […]

Read more
1 2 3 4 8