எம்.ஜி.ஆர். எழுதிய நான் ஏன் பிறந்தேன்

எம்.ஜி.ஆர். எழுதிய நான் ஏன் பிறந்தேன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை முதல்பாகம் ரூ.460, இரண்டாம் பாகம் 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-1.html திரைப்படத்துறையிலும், அரசியலிலும் சாதனைகள் புரிந்து, வரலாற்றில் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். எமனுடன் இருமுறை போராடி வெற்றி பெற்றவர். அவர் தன் வாழ்க்கை நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் ஒரு வார இதழில் தொடராக எழுதிவந்தார். சுவையான தொடர். எனினும் அது முற்று பெறவில்லை. எம்.ஜி.ஆர். எழுதிய சுயசரிதை 2 பாகங்களாக நூல் வடிவில் […]

Read more

தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் புதுத்தகம், சென்னை, பக். 200, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-1.html நேர்காணலை எந்த ஒரு இலக்கிய வகையுடனும் அவ்வளவு எளிதாக சேர்த்துவிட முடியாது. அது ஒரு புதுவகை இலக்கியமுமல்ல, எனென்றால் நேர்காணல் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டதோ, உட்படாததோ அன்று. அது ஒரு கட்டற்ற வடிவத்தின் தன்னிச்சையான ஆளுமை வெளிப்பாடு. குமுதம் தீராநதியுல் வெளிவந்த நேர்காணல்களின் தொகுப்பு என்றாலும் இன்றைக்கும் அதன் வீச்சும் அவை பேசும் விஷயமும் பொருத்தமாக இருப்பதை உணரமுடிகிறது. இலக்கியவாதிகளுடனான […]

Read more

முள்வாங்கி

முள்வாங்கி, சொற்கோ கருணாநிதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பக். 128, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-259-9.html புதுக்கவிதைகளின் ராஜ்ஜியத்திலும் மரபுக் கவிதைகளை ராஜ நடைபோட வைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் கவிதைகளின் தொகுப்பு இது. புதுக்கவிதைகளுக்கான வீச்சை மரபுக் கவிதைக்குள்ளும் கொணர கவிஞர் எடுத்திருக்கும் முயற்சி புதுமை இதயமும் நுரையீரல், சிறுநீரக பாகங்கள் யாவுமே, கருவியாய்க் கிடைக்கட்டும் என்பதில் உள்ள நவீன அறிவியல் கருத்தாக்கம் கவிதைகளை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கின்றது. […]

Read more

தாதுமணல் கொள்ளை

தாதுமணல் கொள்ளை, முகிலன், ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், விலை 160ரூ. இயற்கையின் கொடையை சுயநலச்சக்திகள் சூறையாடவதை அம்பலப்படுத்தும் ஆவணம் இது. தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலோரப் பகுதியில் இருக்கும் தாதுவளம், கடந்த 20 ஆண்டுகளாக கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. பேருக்கு அரசின் அனுமதியை வாங்கிகொண்டு பெருமளவு அள்ளி கணக்கில்லாத கோடிகளைக் கொண்டுபோய்விடுகிறார்கள். இவை அரசின் சொத்து, அதாவது நாட்டின் சொத்து. இன்னும் சொல்லப்போனால் மக்கள் சொத்து. ஆனால் இதனைத் தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி காக்கிச் சட்டைகள் […]

Read more

வியாசர் அருளிய மகாபாரதம்

வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், […]

Read more

சுவாமி ராமாவுடன் எனது பயணம்

சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஐஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-336-9.html அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் ஓ பிரையன், தொடக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியராக இருந்தவர். இந்தியாவில் இமயமலையைச் சேர்ந்த ஆன்மிகவாதி சுவாமி ராமா, அமெரிக்காவில் பக்தி பிரசங்கம் செய்தபோது, அவரிடம் முரட்டுத்தனமான கேள்விகள் கேட்ட ஜஸ்டின் ஓ பிரையன், பின்னர் படிப்படியாக சுவாமி ராமாவின் முக்யி சீடராக மாறி, அவருடன் பயணித்தபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை […]

Read more

எந்த வானமும் உயரமில்லை

எந்த வானமும் உயரமில்லை, ரமணன், ரீம் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட், புதுடெல்லி, விலை 25ரூ. சொந்தச் சிறகுகளால் தன்னடக்கம், எளிமை, பரிவு ஆகியவை ஆன்மிகத்துக்கான அடையாளங்கள், அல்லல்களுக்கு இடையே ஆள்தொலைந்து போகாமல் இருப்பதே வாழ்வதாகும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ரமணன். புல்லினும் அற்பமானது கவலை என்கிற அவர், கவலையைச் சரவெடி போல உருவகிக்கிறார். ஒரே ஒரு திரி, நூறு வெடிகள் என விளக்கவும் செய்கிறார். ஒருபோதும் நம்மை நாமே கைவிடலாகாது என்று உற்சாகமும் ஊட்டுகிறார் அவர். சாதாரண மனிதர்களை ஆன்மிகத்தை நோக்கி அடியெடுத்து […]

Read more

நேசமணியின் வாழ்வும் பணியும்

நேசமணியின் வாழ்வும் பணியும், ஜி. ஐசக். அருள்தாஸ் வெளியீடு, சென்னை, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-336-3.html தமிழக போராட்ட வரலாறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த தெற்கெல்லைப் போராட்டத்தின் தளகர்த்தர் மார்ஷல் நேசமணி. இவருடைய முழுமையான ஆளுமையை வெளிக்கொணரும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பெண்ணடிமைக்கும், சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகத் தொடங்கிய அவரின் சமூகப் பணி, குமரி மாவட்டம் உருவாவதற்கான உணர்வுப் போராட்டம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தமிழக எல்லைக்களை […]

Read more

தோட்ட காட்டீ

தோட்ட காட்டீ, இரா. வினோத், அறம் பதிப்பகம், பெங்களூர், விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-862-3.html தேசம் சுமந்த மீட்பனுக்கு தலை சாய்க்க காணியில்லை இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்கள் குறித்து, இரா. வினோத் எழுதிய தோட்ட காட்டீ என்ற கவிதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். பெங்களூர் அறம் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். மலையகத் தமிழர்களின் வாழ்வைப் பற்றிய தகவல்கள், முழுமையாக இத்தொகுப்பில் உள்ளன. கேள்விப்பட்டதை, படித்ததைக் கொண்டு கவிதை எழுதமால், நேரடியாக இருமுறை, இலங்கை சென்று மலையகத் […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை), டாக்டர் கே.வி. இராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 164, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-321-4.html சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய டாக்டர் கே.வி.ராமன், தென் மாநிலங்களில், தான் பங்கேற்ற, பல முக்கிய அகழ்வாய்வுகள் பற்றி, இந்த நூலில் விவரித்துள்ளார். தென் மாநிலங்களில் நடந்த அகழாய்வு தொடர்பாக, தொல்லியல் துறை மூலம், அவ்வப்போது ஆசிரியர் வெளியிட்ட ஆங்கில ஆய்வறிக்கைகள், […]

Read more
1 5 6 7 8