வேத கணிதம்

வேத கணிதம், அன்பழகன், நோஷன் பிரஸ், பக். 187, விலை 220ரூ. வேத கணிதம் எனப்படும் கணித சிந்தனையில், எளிய முறையில் எண்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 30 ஆண்டு காலமாக பிரபலமாக விளங்கி வரும் இந்த சிந்தனைகளையே நூலாசிரியர், ‘வேத கணிதம்’ என்ற தலைப்பில், இந்த நூலில் வழங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இந்த கருத்துகளை குறிப்பிட்டிருந்தாலும், தமிழில் அவ்வளவாக புத்தகங்கள் அமையவில்லை. அந்த குறையை இந்த புத்தகம் நீக்கி உள்ளது. அதற்கு நூலாசிரியரை பாராட்டலாம். வேத கணித கருத்துகளில் […]

Read more

ரெகுராரத்தம்மா

ரெகுராரத்தம்மா, இரா. இராம் மோகன், இரா. இராம் மோகன் வெளியீடு, பக். 116, விலை 60ரூ. பதினோரு சிறுகதைகள் உள்ள இந்தத் தொகுதியில், பல கதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. ‘நீ யாதுமாகி நின்றாய் ரமணா’ என்ற கதை முதலிடம் பெறுகிறது. காதல் மனைவியின் கல்வி ஆர்வத்தை மதித்து, அவள் மேற்படிப்பு ஆசை நிறைவேற தாம்பத்ய சுகத்தையே தள்ளி வைக்கிறான், கதையின் நாயகன் ரமணன். பெண் சிசுக் கொலைக்கு எதிராகக் குரல் கொடுத்து, பெண் சிசுவின் பெருமையைப் பேசும் கதை, ‘அபாமிப் பாப்பாவும், அபிராமிப் பாட்டியும்’. […]

Read more

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2)

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2),  டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், பக். 672, 440, விலை 550ரூ, 400ரூ. அந்நாளில், வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்கு வரும் கப்பல்கள், சரக்குகளை துறைமுகத்தில் இறக்கிவிட்டு, புதுச்சேரியிலிருந்து பல பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும், துறைமுகப் பகுதியை ஒட்டி இருந்த மணற்குளங்களில், குடிநீரைச் சேமித்து வைத்திருப்பர். அந்த நீரை கப்பல்கள் சேகரித்து, தங்கள் பயணத்தை துவங்கும். இந்த மணற்குளங்களுள், விநாயகர் வீற்றிருந்த சிறிய கோவிலை ஒட்டிய மணற்குளமும் ஒன்று. மக்கள் அடையாளத்திற்காக, மணற்குளத்து விநாயகர் என்று அழைக்க […]

Read more

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர்

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர், கவிஞர் இளங்கண்ணன், ராமையா பதிப்பகம், பக். 320, விலை 160ரூ. ‘அந்தணரானாலும் அன்பால் அனைவரையும்/சாந்தமாய்க் கொண்டநல் ஆத்திர தாரியம்/சீரார் இராமானுசர்த் தொண்டைச் சிந்தை கொள்/ஓராயிரத் தாண்டாம் வாழ்த்து’ என்னும் வாழ்த்துடன் துவங்கும் நூலாசிரியர், 36 தலைப்புகளில், ராமானுஜரின் வரலாற்றை சிறுசிறு தலைப்புகளில், தக்க திருக்குறள் மேற்கோள்களுடன், வைணவச் சுவை குன்றாமல் திறம்படத் தந்துள்ளார். ‘அங்கத்தில் பஞ்ச சம்ஸ்காரம் தரித்தவரே அய்யங்கார். அது சாதியன்று (பக். 75). ஒருவன் தன் சமயத்தில் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தூற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல் (பக். […]

Read more

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கம், (எழுத்தியல், சொல்லியல், புணரியல், பொருளியல், யாப்பியல், அணியியல் ஆறு தனி நூல்கள்), கலாநிலையம் கே. இராஜகோபாலாச்சாரியார், கண்ணப்பன் பதிப்பகம், ஆறு நூல்களின் மொத்த விலை 570ரூ. இலக்கண விளக்கம் என்ற பெயரில் வந்துள்ள, இந்த ஆறு நூல்களும், தமிழுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன. எளிய, இனிய நடையில், தமிழ் இலக்கணத்தை தெரிவிக்கின்றன. தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும் இலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. சொல்லுக்குஅடிப்படையான எழுத்து இலக்கணமும், சொல்லின் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கையும் விளக்கும் சொல் இலக்கணமும், சொற்கள் […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 212, விலை 120ரூ. கழிவுநீர் வடிகால இணைப்பிற்குக் கூட, வார்டு கவுன்சிலருக்குக் கமிஷன் தர வேண்டியுள்ளது என்கிறார், பழ. கருப்பையா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் ஊழலைப் பற்றி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் தீய உறவைப் பற்றி அவர் பேசுகிறார். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? அவருக்கு, ப. சுப்பராயன் வரலாற்றைப் பரிந்துரைக்கிறோம். சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர். மாநில முதன்மை அமைச்சர், அரசியல் […]

Read more

நினைவில் நிற்கும் ஆசிரியர்

நினைவில் நிற்கும் ஆசிரியர், டாக்டர் ஆர். நடராஜன், ஆதாரம் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. லட்சியவாதிகளாய் திகழ்ந்த ஆசிரியர்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன், தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருந்த ஆசிரியர்களில் பலர், மிகுந்த அறிவாளிகளாகவும், லட்சியவாதிகளுமாய் திகழ்ந்தனர். தம் ஆசிரியப் பணியில் மிக மிக ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் விளங்கினர். தம்மிடம் பயிலும் மாணவர்களுக்குத் தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது போன்ற அக்கறையுடன் பாடம் நடத்தினர். நூலாசிரியர், அப்படிப்பட்ட ஆசிரிய ரத்தினங்களிடம் பயின்று, இன்று சமூகத்தில் மிக உயரிய நிலையில் இருப்பவர். […]

Read more

ஊரங்கு உத்தரவு

ஊரங்கு உத்தரவு, பி.என்.எஸ். பாண்டின், வெர்கோபேஜஸ் பதிப்பகம். புதுச்சேரியை உலுக்கிய 10 நாட்கள் புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும், ‘ஊரடங்கு உத்தரவு’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். பி.என்.எஸ். பாண்டியன் எழுதிய இந்த நூலை, வெர்கோ பேஜஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது நடந்த போராட்டம். அவர் எழுத்தாளர் ஆன பின், ஒரு வரலாறாகப் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, புதுச்சேரியை, 1979ல் ஆண்டது. மத்தியில் ஜனதா ஆட்சி நடந்தது. புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், சீத்தாகந்த் மகாபாத்ரா, தமிழில் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, பக். 208, விலை 125ரூ. பழங்குடி மக்களை விவரிக்கும் சிறுகதைகள்! இந்த நூல் 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க கோபியாத் மொகந்தி, பழங்குடி மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் படம் பிடித்துக் காட்டுவதில் ஈடுபாடுடையவர். இந்த நூலிலும், ஒன்றிரண்டு கதைகள் அந்த பின்புலத்தில் அமைந்துள்ளன. இருப்பினும் குடும்பப் பாங்கான கதைகளும் இதில் உள்ளன. ‘அம்புப் படுக்கை, இருவீரர்கள், வீடு […]

Read more

ஒரு பிடி மண்

ஒரு பிடி மண், ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. கல்யாண பரிசு மூலம் தமிழ்த் திரை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர். 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூண்டபோது மக்களுக்கு வீரத்தையும், தேசபக்தியையும் உண்டாக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டார். அதற்காக அவர் எழுதிய கதைதான் ‘‘ஒரு பிடி மண்’’. இப்படத்தில் சிவாஜிகணேசன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், கே.ஆர்.விஜயா, பாரதி ஆகியோர் நடிக்க இருந்தனர். இந்த நிலையில் திடீரென்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, யுத்தம் நிறுத்தப்பட்டது. அதனால், […]

Read more
1 12 13 14 15 16 336