நான் கண்ட அருட்செல்வர்

நான் கண்ட அருட்செல்வர், முனைவர் ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 121, விலை 100ரூ. அருட்செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த பெகாள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் நினைவை போற்றம் வகையில், தன்னுடன் அவர் கொண்டிருந்த நட்பையும், பொது தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். ஆசியிவியல் நிறுவனத்தில் நடந்த, முதல் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு, அருட்செல்வர் வழங்கிய ஒத்துழைப்பு முதற்கொண்டு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில், அவர் கொண்டிருந்த ஈடுபாடு ஒவ்வொன்றும் விளக்கப்பெற்றுள்ளன. அருட்செல்வர் பற்றிய செய்திகளுடன், தமிழ் ஆய்வுச் சிந்தனைகளும், அரிய தமிழ்த் தரவுகளும் […]

Read more

முல்லை மண் – மக்கள் – இலக்கியம்

முல்லை மண் – மக்கள் – இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழகத்தின் ஐவகை திணைகளில், முல்லைத் திணை பற்றிய ஆய்வாக, இந்த நூல் திகழ்கிறது. முல்லை பற்றிய 233 பாடல்கள் பாடிய, 82 புலவர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளனர். கிரேக்க, லத்தீன் உலக இலக்கியங்களுடன், முல்லைப் பாக்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. முல்லை மலர்களால் இத்திணைப் பெயர்கள் அமைந்ததும், முல்லைப்பண், முல்லை யாழ் பற்றிய விளக்கமும் தரப்பட்டுளள்ன. கற்பை முல்லையோடு மட்டும் சேர்த்து ‘முல்லை சான்ற கற்பு’ என்பதன் […]

Read more

தூக்குமர நிழலில்

தூக்குமர நிழலில், சி.ஐ. மலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 120ரூ. மரண தண்டனைணை எதிர்கொண்ட நெஞ்சுரம் மிக்க போராளியின் மனநிலையை பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம். கொலைக்குற்றவாளியாக 12 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலே இருந்தபோதுதான் வாழ்வின் ஒளியமயமான பொன்மயமான வாழ்வின் வசந்த காலம் அனைத்தும் சி.ஏ. பாலனிடமிருந்து பிரிந்து சென்றது. வேதனை நிறைந்த உடலோடும், மனதில் குமுறியெழுந்த போராட்டங்களோடும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து தூக்குமேடைக்கு செல்வது வரையிலான அவஸ்தையை, பாலன் உருக்கம் பெருக சொல்லியிருக்கும் பக்கங்களை எந்தவொரு வாசகரும் எளிதில் கடந்து விட […]

Read more

இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம்

இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம், ஏவியன், பத்திரிகையாளர் பதிப்பகம், விலை 200ரூ. மனிதனில் புதைந்திருக்கும் கெட்ட குணங்களை சுட்டிக்காட்டி அவனை திருத்த முயற்சிக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஏவியன். உலக மனித ஒட்டு மொத்த சமூகத்தின் சரியான விடியலைத் தேடும் முதல் தொடக்கமாக இதனைப் பிரகடனப்படுத்துகிறேன் என்கிறார் ஆசிரியர். பாராட்டுக்குரிய லட்சியம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- வங்கமொழி சிறுகதைகள் தொகுதி 3, சாகித்ய அகாடமி, விலை 400ரூ. வங்க மொழியில் எழுதப்பட்ட 27 சிறுகதைகளின் தொகுப்பு நூல். […]

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பதிப்பகம், விலை 120ரூ. தமிழகத்தில் நடிகையாக அறியப்பட்ட குஷ்பு, தற்போது அரசியல் களத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடும் அவர் பெண்ணியப் போராளியாகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகம், அரசியல், சினிமா தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அருமையாக அலசி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- I.A.S. தமிழ் முதல் தாள், பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், மீனாட்சி புத்தக நிலையம், விலை 150ரூ. இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவோருக்காக […]

Read more

ப்ளிங்க்

ப்ளிங்க், சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்து கொள்ளும் உத்திகளையும், வேக உணர்திறன் சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியதுதான் என்பதையும் உளவியல் ரீதியாக கற்றத் தருகிறார் நூலாசிரியர் மால்கம் கிளாட்வெல். ஆங்கிலத்திலிருந்து எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- குறுந்தொகை மலர்கள், ரமணி பதிப்பகம், விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் தனிச்சிறப்பு பெற்ற குறுந்தொகையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல். பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவரான பேராசிரியை ப. அனுராதா, […]

Read more

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கவுதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 175ரூ. கோபுரங்களின் வழியே வரலாறு ‘கவிதையின் உட்பொருளாகக் கவிஞரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை கவனிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரம் காவியங்களைக் கற்பதால் என்ன பலன்’ என்று சொன்னார் மஹாகவி பாரதியார். ஒரே நாளில் ஒன்பது கோவில்கள், பத்துவிதமான பரிகார ஸ்தலங்கள், முக்கோண தரிசனம், நாற்கோணப் பயணம் என்கிற ரீதியில், இப்போது விளம்பரப்படுத்தப்படும் யாத்திரைகளுக்கும், பரபரப்போடு ஒவ்வொரு தலமாக ஏறி இறங்குவோருக்கும் பாரதியின் வரிகளைப் பொருத்திக் கொள்ளலாம். எந்தத் தலத்தையும் முழுமையாகப் […]

Read more

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், பொன். வாசுதேவன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 488, விலை 400ரூ. புலன் விசாரணையில் தெரியாத புதிர்கள் ‘இரண்டாம் வகுப்பிலேயே பாட்டியிடம் இலக்கணம் படித்தேன்’ என்ற பிரகாஷின் முகப்பு வரிகளுக்குப் பின், தொகுப்பின் கதைகள் துவங்குகின்றன. முப்பத்தியொரு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது, அதை நம்பித்தான் ஆகவேண்டும். கதையின் இரண்டாம் வாக்கியத்துக்குப் போகும்போதே, வாசகர்கள் எங்கே நின்று, கதை மாந்தர்களைத் தொடரவேண்டும் என, கடிவாளம் கட்டி விடுகிறார் பிரகாஷ். வாசகர்களுக்குத் தான் கடிவாளமே தவிர, கதை மாந்தர்களுக்கு இல்லை. […]

Read more

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம், தமிழில் கார்த்திகை பாண்டியன், எதிர் பதிப்பகம். ஒரு முகமூடிக்குப் பின்னால் ஜப்பான் மொழியில், ‘யுகுயோ மிசிமா’ எழுதி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பின் தமிழில், ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ என வெளியான நாவலை, சமீபத்தில் படித்தேன். கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த இந்த நாவலை, எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. மூன்றாம் பாலினத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லை. நாவல் ஆசிரியர் யுகுயோ மிசிமாவுக்கும் இதுபோன்ற பிரச்னை […]

Read more

பின்நவீனத்துவம்

பின்நவீனத்துவம், தொடக்கநிலையினருக்கு, ஜிம் பவல், தமிழில க. பூரணசந்திரன், அடையாளம், பக். 164, விலை 160ரூ. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு புதிய சிந்தனை முறை பின்நவீனத்துவம். எனினும் இந்தப் பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதே பலருக்கு மிக மிகச் சிரமமான ஒன்று. பின்நவீனத்துவத்தை எளிய முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் கேள்வி – பதில் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூல் முழுக்க ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மார்க்சியம், கிறிஸ்தவம் அல்லது அறிவியல் என்பதன் உலகப் பொதுவான கொடியின் கீழ் எல்லா உலகமும் ஒரு […]

Read more
1 11 12 13 14 15 336