மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்,  வெ. இறையன்பு, விகடன் பிரசுரம், விலை 140ரூ. மனித உடல் பல விசித்திரங்களின் தொகுப்பு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அவசியமான பணி ஒன்றை ஏற்றுக்கொண்டு ஓயாமல் உழைக்கின்றன. அந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கும் விதத்தில் இந்த நூலை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ. இறையன்பு எழுதியுள்ளார். கண்கள் பேசும் மொழி, முடியைப் பற்றி நாம் இதுவரை அறியாத சில செய்திகள், புருவத்தின் […]

Read more

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல்

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறள் எண்ணற்ற மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் மு. வரதராசனார் வரை ஏராளமானோர் உரை எழுதியுள்ளனர். இப்போது அருணா பதிப்பகம் 6 இன் 1 என்ற வகையில், திருக்குறள் மூலம், ஆங்கிலம் எழுத்துப் பெயர்ப்பு, ஜி.யு. போப் உரை, லாசரஸ் ஆங்கில விளக்கம், பரிமேலழகர் உரை, கீர்த்தியின் தமிழ் விளக்கம் என்று புதிய உரை நூலை வெளியிட்டுள்ளது. பின்னிணைப்பாக செய்யுள் முதற்குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது போற்றத்தக்க, பாராட்டத்தக்க […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் உரை

தாயுமான சுவாமிகள் பாடல் உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், விலை 450ரூ. இந்திய தத்துவ ஞான மரபில் தாயுமான சுவாமிகளுக்கென்று தனியிடம் உண்டு. தாயுமானவர் ஒரு ஞானக்கடல். அதில் தத்துவ முத்துக்களும், தரங்குறையா பவழங்களும் நிரம்ப உண்டு. அத்தகைய தாயுமான சுவாமிகளின் பாடல்களை அரிய பழைய உரையுடன் க. இலம்போதரன் தொகுத்துள்ளார். “கல் எறியப் பாசி கலைந்து நன்னீர் காணும், நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே” என்று எளிய உவமையைக் கூறி தாயுமானவர் நம்மைத் தெளிவுபடுத்துகிறார். மலரின் […]

Read more

தோன்றியது எப்படி?

தோன்றியது எப்படி?, தனலெட்சுமி பதிப்பகம், விலை 375ரூ. காகிதம், பேனாக்கத்தி, காலனி, கத்தரிக்கோல், காக்குலேட்டர் (கணக்கிடும் கருவி), போன்ற எண்ணற்ற பொருட்களை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்படி, யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்ற விஷயம் தெரியாது. இந்த நூலில் நாம் பயன்படுத்தும் 137 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை வாண்டு மாமா தருகிறார். இவை வெறும் பொழுதுபோக்காக படிக்கப்படும் விஷயங்கள் அல்ல. அறிவை வளர்க்கும் சுவாரசியமான தகவல்கள். மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —-   பாதச்சுவடுகள், பா. சிவன்பாரதி […]

Read more

தமிழின் பெருமை

தமிழின் பெருமை, முனைவர் மூ. இராசாராம், அல்லயன்ஸ் கம்பெனி, விலை 390ரூ. இந்த நூலின் முன்னுரையில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதியதுபோல, தமிழரின் தொன்மை முதல் புதிய கற்காலம் வரை தமிழ் மற்றும் தமிழர்தம் வளர்ச்சியை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த நூலை படித்தால் போதும். பண்டைய தமிழகம் என்றால் எது? என்று தொடங்கி தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ் பண்பாட்டின் தொன்மையை வரலாற்றுச் சான்றுகளோடு, 71 தலைப்புகளில் இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மூ. ராஜாராம் விளக்கி உள்ளார். இந்த நூலை […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு. இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை […]

Read more

இஸ்லாத்தில் முன்னுரிமைகள்

இஸ்லாத்தில் முன்னுரிமைகள், மௌலவி நூஹ்  மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் நம் முன்னே நிற்கின்றன. இதில் எதற்கு முன்னுரிமை கொடுபப்து? இடம், பொருள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்க வேண்டிய அம்சங்களை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் இஸ்லாத்தில் எந்தெந்த செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நூஹ் மஷ்ழரி இந்த நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார். தனி மனித நலனா? சமுதாய நலனா? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றால், சமூக நலனுக்கே முன்னுரிமை […]

Read more

மயில்

மயில், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், விலை 350ரூ. அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இசை, இலக்கணம், இலக்கியம், சமயம், சமூகவியல், செவ்வியல், இலக்கியம், தகவலியல், நாட்டுப்புறவியல், புதினம், வரலாறு என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் சமுதாய மக்களுக்குப் பயன் தருவனவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பதிப்பித்து இருக்கிறார்கள் முனைவர் இராச. கலைவாணியும், முனைவர் வாணி அறிவாளனும். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- மு.வ. […]

Read more

இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!

இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!, ப. திருமலை, முன்னேற்ற பதிப்பகம், பக். 192, விலை 130ரூ. தமிழகம் அறிந்த பத்திரிகையாளர் ப. திருமலை எழுதிய அரசியல், பொருளாதாரம், தேசிய பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகளின் அருமையான தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதியவை இவை. ‘நடுங்க வைக்கும் சீனா, நடுக்கத்தில் நாம்’ என, இந்தியா சார்ந்த சர்வதேச பிரச்னையையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் தானே என்று நினைத்து நாம் படித்தால், அதில் பல சம்பவங்கள் […]

Read more

நான் கண்ட அருட்செல்வர்

நான் கண்ட அருட்செல்வர், முனைவர் ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 121, விலை 100ரூ. அருட்செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த பெகாள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் நினைவை போற்றம் வகையில், தன்னுடன் அவர் கொண்டிருந்த நட்பையும், பொது தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். ஆசியிவியல் நிறுவனத்தில் நடந்த, முதல் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு, அருட்செல்வர் வழங்கிய ஒத்துழைப்பு முதற்கொண்டு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில், அவர் கொண்டிருந்த ஈடுபாடு ஒவ்வொன்றும் விளக்கப்பெற்றுள்ளன. அருட்செல்வர் பற்றிய செய்திகளுடன், தமிழ் ஆய்வுச் சிந்தனைகளும், அரிய தமிழ்த் தரவுகளும் […]

Read more
1 10 11 12 13 14 336