ஒரு பிடி மண்

ஒரு பிடி மண், ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. கல்யாண பரிசு மூலம் தமிழ்த் திரை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர். 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூண்டபோது மக்களுக்கு வீரத்தையும், தேசபக்தியையும் உண்டாக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டார். அதற்காக அவர் எழுதிய கதைதான் ‘‘ஒரு பிடி மண்’’. இப்படத்தில் சிவாஜிகணேசன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், கே.ஆர்.விஜயா, பாரதி ஆகியோர் நடிக்க இருந்தனர். இந்த நிலையில் திடீரென்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, யுத்தம் நிறுத்தப்பட்டது. அதனால், […]

Read more

அழகிய பாடல் வடிவில் சிலப்பதிகாரம்

அழகிய பாடல் வடிவில் சிலப்பதிகாரம், கிள்ளை வே. முனுசாமி, மணிமேகலைபிரசுரம், விலை 135ரூ. ஐம்பெரும் காப்பியங்களில் தலையாய காப்பியமாக சிலப்பதிகாரம் முழுவதையும் இனிய பாடல் வடிவில் வடிக்கப்பட்ட நூல். சிலப்பதிகாரம் பெரும்பான்மை தமிழ் மக்களிடையே இன்னும் சென்றடையவில்லை என்றே சொல்லலாம். பள்ளிப் பாடத்தில் ஒரு பாடலையே திரும்பத் திரும்ப சுட்டி, ‘சிலப்பதிகாரமே இவ்வளவுதானா’ என்று இளைய தலைமுறை என்னும் வண்ணம் நிலைமை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இளங்கோவின் செய்யுளாக்கம் கடினச் சொற்கள். பாரதியார், பாரதிதாசன் பாடலைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு, சங்க இலக்கியங்களைப் […]

Read more

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1, புலவர் மா. நன்னன், ஏகம் பதிப்பகம், இரண்டு தொகுதிகள் சேர்ந்து விலை 1250ரூ. தமிழைப் பிழை இல்லாமல் எழுத வேண்டும். பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்பதில் பெரு விருப்பம் கொண்டவர் பேராசிரியர், புலவர் மா. நன்னன் ஆவார். எழுத்தாளர்கள், தாம் ஆளும் சொற்களின் திறத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தக்க இடத்தில், தக்க சொல்லைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே அந்த உரைநடையின் பயன், தரம் போன்றவை விளங்கும். அந்த வகையில் நல்ல உரைநடையை எழுதுவதற்கு இந்த […]

Read more

பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன்

பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன், லேண்டு ரெக்கார்ட்ஸ் அண்டு பில்டிங் அப்ரூவல் புரசீஜர்ஸ் பாலோடு இன்வேரியஸ் ஸ்டேட்டஸ் இன் இண்டியா (ஆங்கிலம்), வழக்கறிஞர் ஜி. ஷியாம் சுந்தர், ஸ்ரீ வித்யாதேவி பப்ளிஷர்ஸ், பக். 341, விலை 499ரூ. பத்திரப் பதிவு பற்றிய தெளிவான நூல் நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் பத்திரப்பதிவு நடைமுறைகள், முத்திரைத் தீர்வை, கட்டணம் குறித்த விவரங்கள், எளிதான மொழிநடையில், இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. சென்னையை விட நெருக்கடியான டில்லி, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிகபட்ச அளவில், கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 159, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023754.html பத்திரிகைகள், வலைதளங்களில் தற்போதைய கல்விமுறை பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. விளையாடினால் தண்டிக்கும் பள்ளிகளையும், மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாணவர்களை உருவாக்கும் பள்ளிகளையும் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். (பக். 77). ‘மதிப்பெண்களைத் துரத்துவது எப்படி என, சொல்லித் தருகின்றனரே தவிர, மனிதர்களைப் படிக்க யாரும் சொல்லித் தருவதில்லை. நாளைய மன்னர்களாகிய மாணவர்கள், வாழ்க்கையைத் துவங்கும் […]

Read more

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன், புல்லாங்குழல் வெளியீடு, விலை 150ரூ. பாமர மக்களுக்கு பாட்டு வழியாக மருத்துவம் பார்த்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் எம். எஸ். விசுவநாதன், டி.எம். சவுந்தராஜன், பி. சுசீலா, இளையராஜா ஆகியோருடன் இணைந்து பாடல் உருவாக்கிய விதம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பாடலில் எளிமை, கவிதையில் இனிமை, சொற்களை நெய்யும் நேர்த்தியில் எழுத்தின் வன்மை குறித்து விவரித்து அதிகமான படங்களுடன் தொகுத்தளித்திருக்கிறார் கவிபாஸ்கர். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதியில் […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், கவிஞர் பிரியசகி மற்றும் அருட்பணி, ஜோசப் பெஜயராஜ், அரும்பு பப்ளிகேஷன்ஸ் மற்றும் நிறைவகம், விலை 270ரூ. வகுப்பறையில் பாடம் பயிலும் மாணவர்களில் 5-ல் ஒருவருக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குறைபாட்டை கண்டறிந்து, அந்த குழந்தைகளை முன்னேற்றுவதில்தான் இன்றைய சமூகம் தவறிழைக்கிறது. அந்த வகையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை இனங்கண்டு, அவர்களை கையாள்வது எப்படி? அவர்களுக்கு கசப்பாய் தெரியும் கல்வியை, கற்கண்டு போல இனிமையாக்குவது எப்படி? என பாடம் நடத்துகிறது இந்த நூல். […]

Read more

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, சந்தியா பதிப்பகம், விலை 160ரூ. பத்து வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளி இறுதி வகுப்பில் இடை நீக்கம் செய்யப்பட்டவர், 42ம் ஆண்டு நடந்த ஆகஸ்டு புரட்சியில் கைதானபோது, திருவாடனை சிறையை உடைத்து ஊர் மக்களால் விடுதலையானவர், சின்ன அண்ணாமலை. அவர் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களைச் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —- ஜெயகாந்தன் உரைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ. ஈரோட்டில் ஜெயகாந்தன் ஆற்றிய […]

Read more

இலக்கிய சிற்பி மீரா

இலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, விலை 50ரூ. சாகித்திய அகாதெமியின் சார்பில் வெளிவரும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் கவிஞர் மீரா குறித்து எழுதப்பட்ட நூல். ‘மீரா கவிதைகள்’ (மரபு கவிதை), ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ (வசன கவிதை), ‘ஊசிகள்’ (அங்கத கவிதை), ‘மூன்றும் ஆறும்’ (கவியரங்க கவிதை), ‘குக்கூ’ (குறுங்கவிதை), ‘வா இந்தப்பக்கம்’ (கட்டுரை) என்பன என்றென்றும் அவரது பெயர் சொல்லும் முத்திரை நூல்கள். கல்லூரி பேராசிரியர், முதல்வர், போராளி, இதழாசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் என்றாற்போல் […]

Read more

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், மணிமேகலைப் பிரசுரம், விலை 185ரூ. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். சமூகத்தின் மீது சினிமா தாக்கம் ஏற்படுத்துவதையும், குறிப்பாக (வீதி) சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பெரிய நாயகம் ஜேசுதாஸ் எழுதியுள்ளார். சினிமா மூலம் கற்றுக்கொள்கின்ற சாதகமான நிலையையும், கலாச்சார சீரழிவு என்ற பாதகமான நிலையையும் அலசி ஆராய்ந்துள்ளார். நற்பயனளிக்கக் கூடிய கற்றல் சூழ்நிலையைச் சிறுவர்களுக்கு கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பதை முடிவாகக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   […]

Read more
1 13 14 15 16 17 336