வாழ்க்கை ஒப்பந்தம்

வாழ்க்கை ஒப்பந்தம், தந்தை பெரியார், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. தந்தை பெரியார் 1940-41ஆம் ஆண்டுகளில் 3 திருமணங்களில் நிகழ்த்திய அரிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். வாழ்க்கை துணை ஒப்பந்தத்திற்கு உறுதிமொழியும் அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்? எனக் கேட்கிறார் தந்தை பெரியார். மேலும் வாழ்க்கை ஒப்பந்தம் பற்றிய அனைத்து கருத்துகளும் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளந்தலைமுறையினர் படித்து உணரவேண்டும். நன்றி: […]

Read more

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும்

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும், சுஹைனா பதிப்பகம், விலை 100ரூ. இது சிறந்த ஆராய்ச்சி நூல். வடலூரில் வாழ்ந்த சமுதாய சீர்திருத்தவாதியான ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள், “திருவருட்பா” என்று அழைக்கப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் “அப்பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பா” என்று வாதிட்டார். வள்ளலாரும், ஆறுமுக நாவலரும் மறைந்த பின்னர், ‘அருட்பா, மருட்பாவா?’ என்ற சர்ச்சை மீண்டும் மூண்டது. அப்போது ‘வள்ளலார் பாடியவை அருட்பாதான்’ என்று வாதாடியவர் செய்குத்தம்பி பாவலர். வள்ளலார் பற்றியும், பாவலர் பற்றியும் முழு விவரங்களும் இதில் […]

Read more

கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், முத்துலிங்கம், விகடன் பிரசுரம், விலை 155ரூ. உலக அகதிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அகதிகள். அவர்களுக்கு இன்னொரு நாடு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் பாதி வழியில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். சிலர் காடுகளிலோ, கடலிலோ, பனியிலோ, ஆற்றிலோ அகப்பட்டு இறந்துவிடுவார்கள். இந்த நூல் அகதிகள் அலைவதை சொல்கிறது. சரித்திரம் நிலைப்பது புனைவுகளின் மூலம்தான். அகதிகள் பயணத்தை பதிவு செய்யும் இந்த புதினம் ஒரு வரலாற்றை உலகத் தரத்தோடு […]

Read more

கவிக்கோ கருவூலம்

கவிக்கோ கருவூலம், கவிக்கோ அறக்கட்டளை, சென்னை, விலை 1000ரூ. கவிக்கோ என்று அனைவராலும் அன்புடனும், பெருமிதத்துடனும் அழைக்கப்பட்டவர் கவிஞர் அப்துல் ரகுமான். வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேஷடும் என்று கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன் என்று கலைஞர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பட்டவர் அவர். அவரது பவள விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வழங்கிய கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு. தமிழ் கவிதைகளின் உச்சம் தொட்ட கவிக்கோவை தமிழ் ஆர்வலர்கள் வியந்தும், புகழ்ந்தம் […]

Read more

நிகழ்வுகள் நினைவாக

நிகழ்வுகள் நினைவாக, ஆ. செந்தில்வேலு, காந்தகளம், சென்னை, விலை 75ரூ. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும், கண்ணில் பார்த்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து கதை எழுதும் எழுத்தாளர்கள், சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். “நிகழ்வுகள் நினைவாக” என்ற இந்த சிறுகதைத் தொகுதியை எழுதியுள்ள ஆ. செந்திவேலு, அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் எழுதியுள்ள 11 கதைகள், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. நல்ல நடையில், விறுவிறுப்பாக எழுதுவதில் ஆ. செந்தில்வேலுவுக்கு உள்ள ஆற்றலை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/12/2015.   —- […]

Read more

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இலங்கையைச் சேர்ந்த கே.எஸ். சிவகுமாரன் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த உலகப் பட விழாக்களில் பங்கு கொண்டு அங்கு திரையிடப்பட்ட சிறந்த படங்களை பார்த்து ரசித்தவர். அவர் தமது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளா புத்தகம் இது. உலகப் பட விழாக்களில் பாராட்டப்பட்ட சிவகுமார், ராதா நடித்த ‘மறுபக்கம்’, கமல்ஹாசன், ரேவதி நடித்த ‘மகளிர் மட்டும்’, அஜித், தேவையாணி நடித்த ‘காதல் கோட்டை’ ஆகிய தமிழ் படங்கள் […]

Read more

நட்பை வழிபடுவோம் நாம்

நட்பை வழிபடுவோம் நாம், கற்பக புத்தகாலயம், சென்னை, விலை 45ரூ. நட்பிலே நல்ல நட்பு, போலி நட்பு, தீய நட்பு, கூடா நட்பு என்று பலவகை இருக்கின்றன. இலக்கியங்களும் அதை நமக்கு எடுத்து சொல்கின்றன. அத்தகைய நட்பையெல்லாம் இப்புத்தகத்தின் வாயிலாக விளக்குவதுடன் நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில சான்றுகளை காட்டி அதன் வாயிலாக நட்பின் பெருமை உணர்த்தப்படுகிறது. கபிலர் – பாரியின் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, அவ்வையார் – அதியமான் நட்பு ஆகிய சங்க காலச் சான்றோர்களின் […]

Read more

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா.

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா., எஸ். கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த, மதுரை மாநகரம் எண்ணற்ற தியாக சீலர்களை தந்துள்ளது. அவர்களில் ஒருவர், ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’எனபவம், தோழர் ஐ.மா.பா., எனவும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என, பன்முகத் திறமை கொண்ட அவரை பற்றி, அனைத்து தகவல்களும் ஒருங்கே இடம் பெற்றிருக்கின்றன இந்த நூலில். அவரது […]

Read more

அமுதும் தேனும்

அமுதும் தேனும், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 242, விலை 150ரூ. முப்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘மூத்தோர் சொல்’ என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர், ரமண முனிவர், ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியன், ஏர்வாடியார் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். ‘இலக்கிய அமுது’ என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் அறிவுக்கு சான்றாய் அலங்கரிக்கின்றன. இக்கால கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனி ஒரு அத்தியாயம். அதில் புதுக்கவிதை, மரபுக்கவிதை, […]

Read more

வண்ண மலர்த் தோட்டம்

வண்ண மலர்த் தோட்டம், மா.பா. குருசாமி, காந்திய இலக்கிய சங்கம், பக். 116, விலை 50ரூ. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவை கதைகள். அதனால் கதை புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன. கதை சொல்வோரும், எழுதுவோரும் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி, ‘வண்ண மலர்த்தோட்டம்’ தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார், முனைவர் மா.பா. குருசாமி. குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதுவது என்பது காற்றில் பறக்கும் பஞ்சுப் பொதிகளை கையில் பிடிப்பது போலத்தான். சுதந்திரமாய் சோலையில் சுற்றித்திரியும் வண்ணத்துப் பூச்சிகள்போல் வலம் வரும் குழந்தைகளுக்காக எழுத நினைப்போருக்கு எளிமையும், மனத்தூய்மையும், […]

Read more
1 14 15 16 17 18 336