ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், வர்த்தமானன் வெளியீடு, பக். 900, விலை 300ரூ. மகாபாரதத்தை அருளிய பின்னரும் வியாச முனிவருக்குச் சாந்தி ஏற்படவில்லை. தம் மனக் குறையை நாரதரிடம் தெரிவித்தார். நாரதர், மகாபாரதத்தில் பகவானின் கல்யாண குணங்களைவிடத் தர்மங்களை அதிகமாக விவரித்துள்ளீர். கிருஷ்ண பரமாத்மாவின் மகிமைகளைச் சொல்லவில்லை. அவற்றை விரிவாக வருணிக்கும் நூல் ஒன்றைச் செய்தால் தங்கள் மனம் சாந்தி அடையும் என்றார். வியாசரும் மனமகிழ்வுடன் இந்தப் பாகவதத்தை உண்டாக்கித் தம் தவப் புதல்வரான சுக முனிவருக்கு அருளினார். அவர், மோட்சத்தை விரும்பிய பரீட்சித்து மன்னனுக்கு இதனை […]

Read more

ஜுலியஸ் சீஸர்

ஜுலியஸ் சீஸர், எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 160ரூ. கிரேக்கத்தின் அலெக்சாண்டர், மங்கோலிய செங்கிஸ்கான், பிரெஞ்ச் நெப்போலியன், ரோமானிய ஜுலியஸ் சீஸர் ஆகியவை மறக்க முடியாத வீரப்பெயர்கள். இதில் சீஸர் பற்றியப் புத்தகம் இது. சீஸரை விலக்கிவிட்டு, வீரம் பற்றிப் பேச முடியாது. சீஸரை தவிர்த்துவிட்டு, பண்பு பற்றி பேச முடியாது. சீஸரை விட்டுவிட்டு வெற்றியின் சூட்சமங்களை ஆராய முடியாது என்ற கம்பீரத்துடன் இந்தப் புத்தகத்தை எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியிருக்கிறார். சீஸரைப் பற்றி எழுதுவதாலேயே சொற்களும் கூர்மையாக இருக்கின்றன. வரலாறு ஆர்வலர்களுக்கு அகஸ்ட்டஸ் சீஸர், […]

Read more

தி மியூசிக் ஸ்கூல்

தி மியூசிக் ஸ்கூல், செழியன், தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சென்னை 33. The Music School எளிமையான, குழப்பம் இல்லாத தமிழ் நடை. வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுப்பதுபோலவே எழுதப்பட்ட வடிவமைப்பு.உதாரணத்துக்கு ஒரு பகுதி இதோ- இது வெறுமனே தொடர்ச்சியாக வாசிக்கிற புத்தகம் அல்ல. இதில் இருக்கிற பல விஷயங்களுடன் நீங்கள் இணைந்து பயிற்சி செய்ய வேண்டும். கண்களால் பார்த்து இந்தப் பாடங்களை நினைவில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. பாடத்தை வாசிக்கும்போது, எப்போதும் அருகில் பென்சில் வைத்திருங்கள். முக்கியமான விஷயத்தை அடிக்கோடு இடுவதற்கு […]

Read more

பக்கம் பக்கமாய்

பக்கம் பக்கமாய், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கவிதை உறவு இலக்கிய இதழில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய ஒரு பக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வரலாற்றில், வாழ்க்கையில், நடைமுறையில் கண்டறிந்த உயர்ந்த சிந்தனைகளை கருவாக்கி, தன்னம்பிக்கையை எருவாக்கி, நல்ல எண்ணங்களை பயிராக்கி இருக்கிறார். இந்த நூலில் உள்ள 44 கட்டுரைகள் மூலம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பண்புகளை கற்றுத் தருகிறார். இதமாக நடந்து கொண்டால் இமயமாக உயரலாம். எளிமையாக இருந்தால் எவரையும் கவரலாம் என்பதை […]

Read more

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள்

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள், தொகுப்பாளர்-மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 140ரூ. கவிஞர், இதழாசிரியர், சினிமா வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கவியரங்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர் சுரதா. அவர் பாடல்களில் உவமைகள் அதிகம் இருப்பதால் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். கவிஞர் சுரதாவின் தெரிந்தெடுத்த கதைகளை சாகித்ய அகாடமி தொகுத்து வெளியிட்டுள்ளது. இவர் மிகக் குறைவான சினிமா பாடல்களையே எழுதி இருக்கிறார் என்ற போதிலும் அவை கருத்தாழமும், பலமை வீச்சும் நிறைந்தவை. அமுதும் தேனும் எதற்கு நீ […]

Read more

போராளிகள்

போராளிகள், மு. செந்திலதிபன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 90ரூ. சமுதாய நலனுக்காக, தம்மை அர்ப்பணித்து கொள்பவர்களையே, போராளிகள் என்றழைக்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் விடுதலை, பெண்ணுரிமை, கல்வி உரிமை என, சமுதாயத்திற்காக, போராடுபவர்கள் வெகுசிலரே. அந்த வகையில் இந்த நூலில் ஒன்பது போராளிகளின் சமகால வரலாறுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து, காந்திய வழியில் போராடி, தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூச்சி. மணிப்பூரில் உண்ணாநிலை அறப்போரில், ஏறக்குறைய 13 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். […]

Read more

பணம் விரும்புதே உன்னை

பணம் விரும்புதே உன்னை, டி.ஏ. விஜய், புதிய பறவை பதிப்பகம், பக். 204, விலை 555ரூ. தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்து, பின் புத்தக வடிவில் வெளியாகி, பலரது பாராட்டுதல்களை பெற்ற புத்தகம். தற்போது 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது. பங்கு வர்த்தம் என்றாலே, வேப்பங்காயாக கசக்கும். அதில் புழங்கும் நடைமுறைகள், சொற்கள் ஆகியவை எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். மொத்தத்தில், பலாப்பழ மேல்தோல்போல், பார்வைக்கு கடினமாக காணப்படும் பங்கு வர்த்தகத்தில் பக்குவமாக நுழைந்தால், பணம் என்னும் தேன் சுவை கொண்ட பழத்தை […]

Read more

நீளும் கனவு

நீளும் கனவு, கவின்மலர், கயல்கவின் பதிப்பகம். அண்ணன் மனதில் மறைந்திருக்கும் வக்கிரம் நீளும் கனவு என்ற சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். எழுத்தாளர் கவின்மலர். பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகள் இவை. கயல் கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் பல கதைகள் இருந்தாலும் அண்ணன், இரவில் கரையும் நிழல்கள் என்ற இரு சிறுகதைகள் என்னை மிகவும் பாதித்தவை. பெண்ணுடன் பிறக்கும், ஆண்களை அண்ணன், தம்பி என அழைக்கிறோம். அதேநேரத்தில் உடன் பிறவாத மூன்றாம் நபராக இருக்கும் ஒரு ஆணையும் அண்ணன் என அழைப்போம். […]

Read more

நெருப்பில் பூத்த ஆசிரியர்

நெருப்பில் பூத்த ஆசிரியர், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ. ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்த இந்நூலாசிரியர் கலைமாமணி எப்.சூசைமாணிக்கத்தின் வாழ்க்கை வரலாறு, ஒரு நாவலைப்போல் அமைந்துள்ள வியப்பளிக்கிறது. அவர் ஆசைப்பட்டு அமைத்த வாழ்க்கையுமல்ல. திறமைகளால் அமைந்த வாழ்க்கையும் அல்ல. தானே அமைந்த ஆசிரியர் வாழ்வை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டு வாந்தார். ஆனால் எதிர்கொண்ட அனுபவங்கள் வித்தியாசமானவை, விறுவிறுப்பானவை, திருப்பங்கள் நிறைந்தவை, திடுக்கிட வைப்பவை, சூழ்ச்சிகள் சூழ்ந்தவை, சுவையானவை. இந்த அனுபவங்களே அவரை தனித்துவம் பெற்ற வரலாற்று நாயகராக்கி இவ்வரலாற்றின் மையப்புள்ளியாய் திகழ்கிறார். உண்மைச் […]

Read more

ஆறாம் திணை

ஆறாம் திணை, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 230, விலை 125ரூ. கைக்குத்தல் அரிசிக்கு ஈடாகுமா ஆஸ்திரேலிய ஓட்ஸ்? மருத்துவம் என்றால் மருத்துவம் மட்டும் தெரிந்தால் போதாது. சரிவிகித உணவை, எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும் என்ற கொள்கையில் தீராத பற்று உடையவர் போலும் புத்தகத்தில் புகுந்து விளையாடிவிட்டார் மருத்துவர் சிவராமன். மருத்துவத்தினூடே, உணவு பொருட்களின் பயன்பாட்டையும், அதை பக்குவப்படுத்தும் விதத்தையும் சொன்னவர், மேலை நாட்டு நாகரிக மோகத்தில் விழுந்து, மக்கள் புரள்வதை கண்டு சகியாதவராய், […]

Read more
1 159 160 161 162 163 336