கடல் கிணறு

கடல் கிணறு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மௌனமாய் மரணத்தைப் பேசும் கதைகள் கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ்க் கதைகள் அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள் போன்ற கதைகளில் முக்கியமான பாத்திரம் அரசியல் அல்ல. மரணம்தான். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம். தொகுப்பின் அநேகக் கதைகளில் மரணம் […]

Read more

அன்பின் நடுநரம்பு

அன்பின் நடுநரம்பு, அகச்சேரன், தக்கை பதிப்பகம்,சேலம், விலை ரூ. 10 கவிதைகளாகும் மனிதர்கள் பராக்குப் பார்த்தல் ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம். பெரும்பாலான இன்றைய நவீனத் தமிழ்க் கவிதைகள் பராக்குப் பார்த்தலை அடிப்படையாகக் கொண்டவை எனலாம். பராக்குப் பார்ப்பதற்கு வழியமைத்துத் தருபவை முக்கியமாகப் பேருந்துப் பயணங்கள்தாம். இம்மாதிரியான பயணங்கள் குறித்துத் தமிழ்க் கவிதைகளில் ஏற்கனவே பதிவுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது சமீபத்தில் வெளிவந்துள்ள அகச்சேரனின் அன்பின் நடுநரம்பு. விற்பனைப் பிரதிநிதியாக இருக்கும் அகச்சேரனின் பேருந்துப் பயணங்களில் அவர் தன் முழு ஆளுமையையும், […]

Read more

தாய்மை

தாய்மை, பத்மா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-368-1.html பேறு கால பராமரிப்பும், குழந்தை வளர்ப்பும் குறித்து டாக்டரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வெ. குழந்தைவேலு எழுதிய நூல். கருவுற்ற காலம் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கருவுற்ற நாளில் இருந்து அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்பன போன்ற நலம் பயக்கும் அறிவுரைகள். இதைத் தொடர்ந்து குழந்தையை […]

Read more

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள்

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள், நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-561-4.html ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக்கொலைக்கு ராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்துக்கு உரியவை. சிங்கள அரசின் இரவல் […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது […]

Read more

ஜெயந்திசங்கர் சிறுகதைகள்

ஜெயந்திசங்கர் சிறுகதைகள், ஜெயந்திசங்கர், காவ்யா, சென்னை, பக். 965, விலை 880ரூ. சிறுகதை, சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சமூக இலக்கியம். அவசர உலகில் பயணிக்கும் இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்றவாறு, இதழ்களில் ஒரு பக்க கதைகளாகப் புதிய பரிணாமம் பெற்றிருக்கும் சிறுகதையின் உலகத்தில், ஜெயந்தி சங்கரின் சஞ்சாரம் சிறுகதை இலக்கியத்துக்கான மைல் கல்லாக இருக்கிறது. வாசகன் புரிந்து கொள்ளும்படியான ஒரு படைப்பாளிக்கான இலக்கணத்தையும் முன்வைத்துள்ளது. அன்றாடம் நம் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களை, இவரது கதைகளின் மூலம் மீண்டும் நாம் பெற முடிகிறது. அங்கங்கே […]

Read more

முதலாம் இராசராச சோழன்

முதலாம் இராசராச சோழன், கே.டி. திருநாவுக்கரசு, விகடன் பிரசுரம், சென்னை, பக். 326, விலை 135ரூ. முதலாம் இராசராசனின் வரலாற்றை சொல்லும் நூலாக இது இருந்தாலும் நூலின் இரண்டாவது பகுதியில்தான் இராசனின் வரலாறு தொடங்குகிறது. முதலாம் இராசராசசோழனின் முன்னோராகிய மன்னர்கள் திருமாவளவன், முதலாம் பராந்தகன், விசயாலயன், ஆதித்தன், பராந்தகன் பரகேசரி, கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன் போன்றோரின் ஆட்சிக் காலச் சாதனைகள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இராசராச சோழன் வரலாறு, காந்தளூர் போர், ஈழப் படையெடுப்பு, கலிங்க வெற்றி போன்ற பகுதிகளோடு தொடங்கி, இராசராசனின் ஆட்சி […]

Read more

திருவரங்கன் உலா

திருவரங்கன் உலா, ஸ்ரீ வேணுகோபாலன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-377-8.html ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து பெரும் பகுதியை கைப்பற்றிய துருக்கியர்களின் ஆட்சியின்போது பெரும்பாலான கோவில்களும் அங்கு இருந்த சிலைகளும் நாசப்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட அழிவில் இருந்து தப்பிக்க ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த திருவரங்கன் விக்ரகம், பலரது உயிர் தியாகங்களுக்கு ஊடே எவ்வாறு பாதுகாப்பாக தென் இந்தியா முழுவதும் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற வரலாறு பின்னணியுடன் எழுதப்பட்ட […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-217-0.html அறிவியல் மட்டுமே வரலாற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இளைய சமுதாயத்தினரின் இதயங்களை அறிவியலைக்கொண்டு ஆழ உழுதால் மட்டுமே அவர்கள் ஆற்றல் மிக்க, கற்பனைத்திறன் மிக்க விளைநிலங்களாக மாறும் என்பதால் அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக 12 விஞ்ஞானிகளை நூலாசிரியர் தேவிகாபுரம் சிவா தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.   —- மருத்துவ நாடி ரகசியங்கள், கோகிலா […]

Read more

சோர்விலாச் சொல்

சோர்விலாச் சொல், பாராளுமன்ற உரைகள் 1991-2011, பசீர் சேகுதாவூத், விளிம்பு, புத்தாநத்தம், விலை 250ரூ. முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல்பாட்டாளர் பஷீர் சேகுதாவூதின் நாடாளுமன்ற உரைகள் சோர்விலாச்சொல் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. அவரது சமூகம், அறம் சார்ந்த அணுகுமுறை, சமூக, அரசியல் நோக்கில் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல், இயங்குதளம், ஒரு இஸ்லாமியராக அவர் எதிர்கொண்ட மானிடச் சிக்கல்கள் என்பவற்றின் சான்றாக இவை உள்ளன.  இன்றுவரை அறியப்பட்டிருந்த பஷீரின் ஆளுமையின் பன்முகத்தன்மையைச் சோர்விலாச் செல் வெளிச்சமிட்டுக்காட்கிறது. முஸ்லிம்களின்மீது படிந்த வரலாற்றுக் […]

Read more
1 168 169 170 171 172 336