வந்தாராங்குடி

வந்தாராங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி, சென்னை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல். குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். […]

Read more

புதியதேசம்

புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை. சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை […]

Read more

அடைபட்ட கதவுகளின் முன்னால்

அடைபட்ட கதவுகளின் முன்னால், மலையாளத்தில்-அனுசிரீ, தமிழில்-யூமா. வாசுகி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை, விலை 60ரூ. மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப் பாட்டு இது. எல்லாத் தாயும் தன் பிள்ளைகளை சில ஆண்டுகாலம்தான் சுமப்பார்கள். 24 ஆண்டுகளாகச் சிறையில் சுமக்கும் தாய் அற்புதம் அம்மாள். சிறையின் கொடும் தனிமையிலும் எனக்குப் போராடுவதற்கான சக்தி என் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. வெயில் மழையைப் பொருட்படுத்தாது எனக்காக நீதிமன்றத்திலும் சிறையிலும் ஏறி தளரும் போதெல்லாம் ஒருக்கால் தூக்கு மரத்தின் கீழே நிற்க வேண்டி […]

Read more

தவிக்குதே தவிக்குதே

தவிக்குதே தவிக்குதே, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 223, விலை 110ரூ. ஜீவராசிகளின் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீர் உலகமயச்சூழலில் வணிகமயமாகிப் போனதைக் கவலையுடனும், தீர்வுகளுடனும் முன் வைக்கும் நூல். இயற்கையின் கொடையாள தண்ணீரை வணிகமயமாக்கியதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியலை நூலாசிரியர் விளக்கியுள்ளார். நாடு முழுவதும் அரசு தனியார் கூட்டில் உருவாகும் குடிநீர்த் திட்டத்தில் கொள்ளை லாபம் அடிக்கும் பன்னாட்டு, தனியார் நிறுவனங்களின் முகத்திரையைக் கிழிக்கும் ஆசிரியர், அதற்குத் துணை போகும் மத்திய, மாநில அரசுகளையும் சாடியுள்ளார். அடிப்படைத் தேவையான குடிநீரை […]

Read more

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடி தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ. தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் பின்புலம். அரசியல், சமூக, பொருளாதாரம், ஆன்மிகம் உள்ளிட்ட பல சிந்தனைகள். கேள்விகளுக்கான விடையாக இந்நூல் அமைந்துள்ளது. பெரிய கோயில் கோபுரத்தின் விமான நிழல் தரையில் விழாதா? விமானம் 80 டன் எடையுள்ள ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டதா? கருவூர்த் தேவர் இராசராசசோழனின் அரசகுருவா? உள்ளிட்ட பல நூறு வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் உரிய சரியான விடையை நூலாசிரியர் வழங்கி, தஞ்சை பெரிய […]

Read more

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம், குலாம் ரசூல், காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர், பக். 420, விலை 120ரூ. அண்ணல் முஹம்மத் நபி சரிதையை புதிய பாணியில் கூறும் நூல். நபி அவர்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் வந்திருந்தாலும், அவரைப் பற்றிய சரித்திர சம்பவங்கள், நிகழ்வுகள், அவற்றிற்கு ஆதாரமான நூல்களைக் குறிப்பிட்டு இச்சரிதத்தை உருவாக்கி இருப்பதால் கவனத்திற்குரிய நூலாகிறது. முஸ்லிம் சமூகத்தார்மட்டுமல்லாது, பிற சமூக அன்பர்களும் படித்துப் பயனடையும் வகையில் படைத்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள், […]

Read more

ஆயிரம் ஆண்டு ரகசியம்

ஆயிரம் ஆண்டு ரகசியம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் வீரத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும், ஆன்மிகத்திலும் சிகரம் தொட்டவர் ராஜராஜசோழன். வானளாவிய தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டி வான்புகழ் பெற்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளை அரிய செய்திகளை நாம் அறியும் வகையில் ஆயிரம் ஆண்டு அதிசயம் என்ற தலைப்பில் ஆசிரியர் அமுதன் அழகுபட விவரித்துள்ளார். இன்றைய பொறியியல் திறனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்குக் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் தொழில்நுட்பம், நாட்டியக் கலையில் […]

Read more

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, விலை 880ரூ. சிங்கப்பூர் சூழ்நிலையில் உருவான சிறுகதைகள் உலகப் பெண்களின் உள்ளார்ந்த வலிகளையும், நகர எந்திரங்களுக்கு இடையே நசுங்கிவிடாமலும் உலகமயமாதலால் உடைந்து நொறுங்கிப் போகாமலும் மனிதனை நூலாசிரியர் ஜெயந்தி சங்கரின் கதைகள் காப்பாற்றுவதுடன், கை கொடுக்கும் வகையில் 99 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைகளிலும் ஈரம் அதிக அளவில் இருப்பதால் அனைவருடைய மனதையும் எளிதாக தொட்டுவிடுகிறது. நூலாசிரியர் மதுரையில் பிறந்து, சிங்கப்பூரில் வசித்தாலும், தனது நாட்டையும், மக்களையும் தனது படைப்புகள் மூலம் […]

Read more

நூறு வயது வாழவேண்டுமா?

நூறு வயது வாழவேண்டுமா?, திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ. புரியாதவர்களுக்கு புதிராகத் தெரியும் சித்தர்கள், புரிந்தவர்களுக்கோ புதையலாகத் தெரிபவர்கள். மனித சமூகத்தின் மீது அவர்கள் காட்டிய அக்கறை கொஞ்ச நஞ்சமல்ல. எது வாழ்க்கை என்பதையும், அதை எப்படி முறைப்படி வாழவேண்டும் என்பதையும் வகுத்துக் காட்டிய சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சைதை முரளி. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- எனை வெறுப்பவன் எனக்களித்த பரிசு, தமிழ்பிரியன்(எ) பெ.வை.மணிகண்டன், அறம் பதிப்பகம், புதுச்சேரி, விலை 65ரூ. காதலிக்கு காதல் வருவதற்காக சற்று […]

Read more

கல்குதிரை

கல்குதிரை, இளவேனிற்கால இதழ், எழுத்தாளர் கோணங்கி,  கோவில்பட்டி 628502. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி போன்ற இதழ்கள் நவீன இலக்கியத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக வெளிவந்த இந்த இதழ்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய கருத்தியல் ஆளுமைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றின. இன்றைய காலகட்டத்தில் வெகுஜன இதழ்களுக்கு இணையாக அதிக அளவில் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஆனால் அவை தொடர்ந்து வெளிவர முடியாமல் பொருளாதாரக் காரணங்களால் நின்றுபோய்விடுவதும் நடக்கிறது. […]

Read more
1 166 167 168 169 170 336