செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரைகள்

செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள், பதிப்பாசிரியர் இராம. குருநாதன், முதல் தொகுதி பக். 416, விலை 275ரூ., இரண்டாம் தொகுதி விழிகள் பதிப்பகம், பக். 416, விலை 275ரூ. தருமை ஆதினத்தினத்தின் மூலம் செந்தமிழ் காவலர் என்ற பட்டம் பெற்ற சிதம்பரநாத செட்டியார், மாணவர் பருவத்திலேயே தான் பயின்ற கல்லூரியில், ஆகிலத்திலேயே எழுதப்பட்டு வந்த அறிக்கைகளைக் கண்டித்து, பல எதிர்ப்புகளையும் தாண்டி தமிழில் எழுதி, மாணவர்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர். பிராங்க்ளின் கெல், ஜி.யு.போப், நினைவு தங்கப் பதக்கங்களைப் […]

Read more

இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள்

இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள், தமிழ் உயராய்வு மையம், நாகர்கோவில். இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரு குடும்பக் கதையாக அமைந்தாலும், அதனுள் மூவேந்தர்கள், மூன்று நாடு, மூன்று தமிழ் என பல மூன்றின் தன்மைகள் காணப்படுகின்றன. இரண்டு நூலையும் சேர்த்து, இரட்டைக் காப்பியங்கள் என்று உரைப்பது மரபு. இதனுள் பல மதிப்பீடுகள் பேசப்படுகின்றன. சமயம், நாடு, மன்னன், குலம், தனிமனிதன் என பல நிலைகளை […]

Read more

கல்லாடம்

கல்லாடம், முனைவர் பழ. முத்தப்பன், உமா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையாரின் 100 துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருள் அமைப்பினைக் கொண்டு பாடப்பட்ட நூல். பாடியவர் கல்லாடர். இதனால் இந்த நூலுக்கு கல்லாடம் என்ற பெயர் வந்தது. எட்டுத்தொகை நூலான கலித்தொகைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அகப்பொருள் இலக்கியம் கல்லாடம் ஆகும். பாடல்களில் இடம் பெற்றிருக்கும் சொற்களும், தொடர் அமைப்புகளும் சங்க இலக்கிய மரபையொட்டித் திகழ்கின்றன. கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே என்ற பழமொழி, இந்த நூலின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இந்தப் பாடல்களுக்கு முனைவர் […]

Read more

பஞ்ச நாராயண கோட்டம்

பஞ்ச நாராயண கோட்டம், வானதி பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. டைரக்டர் சித்ராலயா கோபுவின் மகனும், இந்து நாளிதழின் மூத்த இணையாசிரியருமான காலச்சக்கரம் நரசிம்மா, புகழ் பெற்ற எழுத்தாளராகவும் விளங்குகிறார். பொன்னியின் செல்வனின் வரும் சில கதாபாத்திரங்களை வைத்து, இவர் எழுதிய சங்கதாரா என்ற நாவல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தன் மகள் வசந்திகாவை பிடித்த பேயை விரட்டியடித்த இராமானுஜாசாரியருக்கு, தாசனாக மாறிய சமண மன்னன் பிட்டிதேவன், விஷ்ணு வர்த்தனன் என்கிற வைஷ்ணவனாக மாறுகிறான். இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த சரித்திர நாவலை […]

Read more

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. கே.டி.கே. தங்கமணியின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக இந்த வரலாற்று பெட்டக நூல் வெளிவந்துள்ளது. அவரது சட்டப் பேரவை உரைகளில் தெறிக்கிற மேதைமையும், வாதத்திறனும், சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து முன்வைக்கிற எளிய சொல் பயன்பாடும் பிரமிக்கத்தக்கதாய் இருக்கின்றன. கே.டி.கே. தங்கமணி பன்முகத் திறன் கொண்டவர். சட்டத்தை பெரிதும் மதிப்பவர். சிங்கப்பூரிலும் இலங்கையிலும் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். தோற்றத்தில் எளிமையானவர். தொழிலாளர்களுக்கா போராடுபவர். அவர் அறிவுஜீவயாகவும், அர்ப்பணிப்பு மிகுந்தவராகவும், வாதங்களில் வல்லுனராகவும் திகழ்ந்தார் என்பதை படம் […]

Read more

தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி, அமுதசுரபி விக்கிரமன், இலக்கியப்பீடம், பக். 544, விலை 450ரூ. தமிழ் இலக்கிய உலகிலும் இதழியல் வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்கதோர் இதழ், அமுதசுரபி என்பது அனைவரும் ஏற்கும் ஒன்று. அதன் துவக்கால அருஞ்சாதனைகளின் முதல் தொகுப்பு நூலாக மலர்ந்துள்ளது இந்த, தமிழ்ச்சுரபி. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, அமுதசரபி ஆசிரியராகப் பணியாற்றிய விக்கிரமனே, இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார். பிஸ்ரீ,இ பெ.நா.அப்புசாமி, எஸ். வையாபுரி பிள்ளை, க.நா.சு., டாக்டர் மு.வ., தி.ஜ.ரா., மா.ராசமாணிக்கனார், க.அ. நீலகண்டசாஸ்திரி, கி.வா.ஜ., பரலி. […]

Read more

வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 145ரூ. ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரைமுறைகள், காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்ற முன்னுரையோடு ஆசிரியர், படிப்பவர்களை சுவர்ந்திழுக்கிறார். ப்ரா, காண்டம், சானிடரி நாப்கின் முதல் பால்வினை நோய்கள், மலட்டுத் தன்மை வரை, 22 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தந்திருக்கிறார். சோவியத் யூனியன் காலத்தில், சிறையிலிருந்த கைதிகளுக்கு, ரகசியமாக சாராயம் எடுத்துச் செல்ல, காண்டம் பயன்பட்டிருக்கிறது. ஒரு சராசரி சைஸ் காண்டத்தில், 3.79 […]

Read more

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம், முருகு பாலமுருகன், ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உலகில் ஒப்பற்ற செல்வம், உடல் ஆரோக்கியம்தான். நம்மில் தினம் தினம் ஏதாவது நோய் நொடியால் அவதிப்படுவோர், அவ்வப்போது, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து குணமாவோர், எப்போதுமே பெரும் பாதிப்பு ஏதுமின்றி நல்ல ஆரோக்கியமாகவே வாழ்வோர்கள் உண்டு. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுSககு ஏற்ப நோய்களும் உண்டாகின்றன என்பது தான் இதற்கு காரணம். ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு […]

Read more

அப்பாவின் கதை

அப்பாவின் கதை, நடின் கார்டிமர், தமிழில் பட்டு எம். பூபதி, ராஜராஜன் பதிப்பகம், பக். 328, விலை 125ரூ. நடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற, புகழ்மிக்க தென் ஆப்பிரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவல் அப்பாவின் கதை. இது நிறவெறி காலனி ஆதிக்க அதிகாரக் கொடுமையை எதிர்த்துப் போராடும் ஆப்பிரிக்க மக்களின் கதை. ஓர் ஆணுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையில் மலரும் அன்பு, ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் உள்ள அன்பு, ஒரு மனிதனை அவன் தேசத்தின் இனத்தின் அடிமைத்தளையினை […]

Read more

பாரம்பரிய மருத்துவம்

பாரம்பரிய மருத்துவம், டாக்டர் சக்தி சுப்பிரமணி, ஸ்ரீ லக்ஷ்மி பதிப்பகம், விலை 325ரூ. ஆயுர்வேதம், சித்தா, ஜோதிடம் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், பாரம்பரிய மருத்துவம் என்ற தலைப்பில் நமது முன்னோர் எழுதியுள்ள தமில் நூல்களிலுள்ள மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்து M.Phil பட்டமும் பெற்று, சிறந்த சித்த மருத்துவராகவும் திகழ்கிறார். இவர் தனது மருத்துவ ஆய்வு மற்றும் அனுபவத்தின் பலனை பொதுமக்களும் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், தினமும் தொலைக்காட்சி வாயிலாகவும் அவற்றை எடுத்துரைத்து வருகிறார். அவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், […]

Read more
1 74 75 76 77 78 336