தேவதையின் பிள்ளைகள்

தேவதையின் பிள்ளைகள், அல்லிநகரம் தாமோதரன், மேன்மை வெளியீடு, விலை 120ரூ. உணர்ச்சிவசத்தால் மட்டும் கதைகள் தோன்றிவிடாது. சிறு சிறு உணர்வுகளைக் கோர்த்து அதற்கிடையில் ஒருமுறை வாழ்ந்து பார்த்த பிறகு தான் முழுக் கதையும் மனதுக்குள் வந்து தவழும். அதுவரை அந்தக் கதையின் கண்ணி அகப்படாமலே இருக்கும். தேவதையின் பிள்ளைகள் என்கிற இந்த சிறுகதைத் தொகுப்பும் உணர்வுகளை உரசியே எழுதப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் துயரங்களை வைத்தே மனிதர்களின் உயர்ந்த பண்புகளையும், அவர்களது உள்ளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதனால்தான் தொகுப்பு முழுக்க பணக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. ஆசிரியரின் சொந்த […]

Read more

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு, இரா.நடராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 130ரூ. அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்த நூல் படம் பிடித்து காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா, டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. சில குழந்தைகள், பிறந்ததும் இறப்பது ஏன்? விபத்துகளில் மரணம் ஏற்படுவதற்கு காரணம் என்ன? இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து ஒருவருடைய ஆயுளை அறிய வழிகாட்டுகிறது இந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

மாயவனம்

மாயவனம், இந்திரா சவுந்தர்ராஜன், அமராவதி பதிப்பகம், விலை 120ரூ. மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது. என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று […]

Read more

காப்பியங்கள் அணிந்த காலணிகள்

காப்பியங்கள் அணிந்த காலணிகள், தாமல் கோ.சரவணன், கோமல் பதிப்பகம், விலை 50ரூ. கம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த நூல், பல விவாதங்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ராமாயணத்தில் பாதுகை பற்றிய இடங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதை எந்தெந்த கோணங்களில் வெளிப்படுத்த முடியும் என்பதை தடைவிடைகளோடு ஆழமாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர். பரதன் பாதுகையை ராமனிடத்திருந்து பெற்றமை பற்றி நுணுக்கமாக ஆராயும் நூலாசிரியர், பாதுகையும், காற்சிலம்பும் என்ற முதல் கட்டுரையில், ‘பாதுகை என்ற காலணி மனிதனாய் பிறந்து தெய்வத்திற்கு உரியது. […]

Read more

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்)

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்), மறைமலையடிகள், சிவாலயம் வெளியீடு, பக். 432, விலை 280ரூ. திருவாசகத்தின் 51 பதிகங்களுள் முன்நான்கு அகவல்களான சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவற்றிற்கான உரைவிளக்கம் இந்நூல். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும், சைவ சித்தாந்தத்திலும் ஆழங்காற்பட்ட மறைமலையடிகள், திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். ;சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து' படித்து, இவ்விளக்க உரையை எழுதியுள்ளார். மறைமலையடிகளார் தாம் எழுதிய இந்நான்கு அகவல்களுக்கான உரை நூலை, 1902இல் ஞானசாகர வெளியீடாகக் கொண்டுவந்தார். அதன்பின் மூன்று பதிப்புகள் வந்துள்ளன. இது நான்காவது […]

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை ரூ.160. புறநானூறு தொடர்பான நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள கட்டுரைகள் பன்முக நோக்கு, வாழ்க்கை வெளிச்சங்கள், சான்றோர் அலைவரிசை, கண்ணீர் ஓவியங்கள், உரை வளமும் பா நலமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டிருக்கின்றன. புலவர் பொன்முடியார் பாடிய ஒரு பாடலுக்கு, அற்புதமான விளக்கம் கூறுவதுடன் பொன்முடியார் கூறாத ஒரு கருத்தையும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலுக்கு சூஃபி கதையும், கவிஞர் கண்ணதாசனின் […]

Read more

பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு

பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு,  மருத்துவர் ச.இராமதாசு, வழுதி வெளியீட்டகம், பக்.240, விலை ரூ.200. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, ‘கல்கி’வார இதழில் தொடராக எழுதியவற்றின் நூல் வடிவம் இது. திண்டிவனத்துக்கு அருகில் உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், ஆதி திராவிடர் காலனியில் இருந்த பள்ளியில் படித்தது, ஆறாம் வகுப்பில் இருந்து சென்னையில் உள்ள அக்கா வீட்டில் தங்கிப் படித்தது, ஒரு செட் உடையைத் தினமும் துவைத்துப் போட்டு அணிந்தது, தினமும் 6 கி.மீ. நடந்து […]

Read more

இந்திய சீனப் போர்

இந்திய சீனப் போர், நெவில் மாக்ஸ்வெல், தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம்,  பக்.416, விலை ரூ.350. 1962 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்னையின் காரணமாக போர் நடந்தது. போருக்கு முன்பும், போரின்போதும், அதற்குப் பிறகும் நடந்தவை பற்றி, தான் செய்தியாளராக வேலை செய்த ‘தி டைம்ஸ்’ நாளிதழுக்கு நிறைய எழுதி அனுப்பினார் நூலாசிரியர். போர் முடிந்த பிறகு, இந்திய – சீன அரசுகளிடம் இருந்து கிடைத்த, திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், இருநாடுகளின் பிரமுகர்களிடம் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலும் […]

Read more

உலகப் பணக்காரர் விஸ்வநாதன்

உலகப் பணக்காரர் விஸ்வநாதன், பி. விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், விலை 90ரூ. தலைப்பைப் பார்த்தால், ‘பில்கேட்ஸ்’ போல உலகப்புகழ் பெற்ற ஒரு பெரிய பணக்காரர் விஸ்வநாதன் என்றும், இது அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் எண்ணத் தோன்றும். அப்படியல்ல. இது ஒரு நாவல். இதை எழுதியவர் பெயர் பி.விஸ்வநாதன். அவர் எழுதியுள்ள 7 நாவல்களின் தலைப்புகளிலும் விஸ்வநாதன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. நாவலைப் படிக்கும்போது, அவர் ஒரு புதுமையான எழுத்தாளர் என்பது புரிகிறது. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more
1 355 356 357 358 359 505