செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,

செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,முனைவர் கோ.எழில் ஆதிரை, ரோகிணி பதிப்பகம், பக். 156, விலை 100ரூ. தமிழக வரலாற்றில் செம்பியன் மாதேவி செய்த அறப்பணிகளும், கலைத் தொண்டும் அளவிற்கரியன. இந்நூலாசிரியர் செம்பியன் மாதேவி எடுப்பித்த கோவில்களையும், செப்புத் திருமேனிக பற்றிய செய்திகளையும் முன்னரே பெருநூலாக எழுதியுள்ளார். இந்நூலில், செம்பியன் மாதேவி ஊரில் உள்ள கைலாசநாதர் கோவில் பற்றித் தனித்து ஆராய்ந்து உள்ளார். அங்கு அவர் அமைத்த சிற்பங்கள், கட்டடங்கள், கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றோடு வரலாற்றுச் செய்தியையும் தக்க சான்றுகளோடு தந்து […]

Read more

கடல் முற்றம்

கடல் முற்றம், அருள் சினேகம், கடல்வெளி, விலை 80ரூ. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், உள்ளிட்ட வேணாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் முக்குவர்கள் பேசும் வழக்கு மொழியில் எழுதப்பட்ட 9 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் இந்நூலுக்கு எழுதியுள்ள 18 பக்க சற்றே பெரிய முன்னுரை. கதைமாந்தர்களின் வாழ்க்கையோட்டங்களை புரிந்துகொள்ள நமக்கு வழித்துணையாக உள்ளது. ஊம சேசய்யன், பாதர் டாமி, கஞ்சிக் கலயம் உள்ளிட்ட கதைகள் தனித்த கவனிப்பை கோருகின்றன. வழக்கு மொழியிலேயே நகரும் கதையை வாசிப்பவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள பின்னிணைப்பில் […]

Read more

மாலைகள்

மாலைகள், போந்தூர் கனகசுந்தரம், மேன்மை வெளியீடு, விலை 170ரூ. மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வைகள் இன்னும் பெரிதாக மாறிவிடவில்லை. மிகை அலங்காரத்தோடு நின்றபடி, சாலையில் செல்வோரிடம் கைதட்டிக் காசு கேட்பவர்கள் என்கிற ஒற்றைப் புரிதலிலிருந்து நாம் முதலில் விடுபட்டாக வேண்டும். சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’, திருநங்கைகளின் வாழ்வை இலக்கிய வெளியில் பரவலான பேசுபொருளாக மாற்றிய நாவல். போராட்டக் களத்திலிருந்து வேர்பிடித்துக் கிளம்பி, திருநங்கைகளின் மீதான வெற்று கரிசனங்களைப் புறந்தள்ளி, ஒழுங்கற்ற சமூக அமைப்பை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைத் திருநங்கைகள் வாழ்வின் வழியாக முன்மொழிந்துள்ள […]

Read more

சிவகங்கைச் சரித்திரக் கும்மி

சிவகங்கைச் சரித்திரக் கும்மி, முனைவர் ஆ.மணி, காவ்யா, விலை 750ரூ. இந்திய மண்ணில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தைக் கண்டு பொறுக்காமல், விடுதலைக்காக போராடியவர்களில் முன்னோடியானவர் மருதுபாண்டியர். முக்குளத்தில் பிறந்து, சிவகங்கைக்கு வந்த மருது சகோதரர்கள் வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்து, அவரை ராணியாக அரியணையில் ஏற்றி, தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தனர். அரசியல் மோதலினால் 1799ல் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு, 1801-ல் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கும்மிப் பாடல்களாக மக்கள் கொண்டாடினார்கள். அவ்வகையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கை சரித்திரக்கும்மியை 63 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் […]

Read more

எங்கேயும் எபோதும்

எங்கேயும் எபோதும், பொள்ளாச்சி அபி, ஒரு துளிக்கவிதை வெளியீடு, விலை 160ரூ. ஊடகவியலாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய எழுத்தாளர் அபியின் சிறியதும் பெரியதுமான 27 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிது. ‘நேத்து சாயங்காலம் நான் ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும்… சார்’ என்று மெல்லிய அதிர்வோடு தொடங்கும் ‘நீயே சொல்லு சார்’ கதையாகட்டும். ‘ஏய்… சரசு… மின்னல் வெட்றாப்புலே இருக்குது’ என்று இரைச்சலான அழைப்போடு தொடங்கும் ‘ஒரு ஊருல ஒரு இராஜகுமாரி’ கதையாகட்டும், எல்லாக் கதைகளிலுமே வற்றிப் போகாத நம்பிக்கை சுரந்துகொண்டேயிருக்கிறது. […]

Read more

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள்

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், வே.குமரவேல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.508, விலை 415ரூ. சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணல்கள், பங்குகொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். சிறப்பு நேர்காணல்களாக அரசியல், சமூகம், பொது ஆகிய தலைப்புகளில் மூன்று நேர்காணல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலை அவர் எழுதியிருப்பதால், பெரும்பாலான நேர்காணல்களில் சுதந்திரப் போராட்டம் பற்றியும், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் நிறைய கேள்விகள் […]

Read more

கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், சி.பிரதாபசிங், காவ்யா, பக்.432, விலை 430ரூ. கன்னியாகுமரிக் கோயில் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் இந்நூல். கன்னியாகுமரிக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி தெய்வத்தின் கோயிலின் வரலாற்றை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே கன்னியாகுமரிக் கோயில் இருந்திருக்கலாம் என்று கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் கோயிலைப் பற்றி ஆய்வு செய்கிறார். கோயில் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் கோயில்களில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார். இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளை […]

Read more

தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தமிழில் தொ.மு.சி. ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. 1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்கிறான். அவனுடைய தாய்க்கு தொடக்கத்தில் இது உடன்பாடில்லை என்றாலும், சிறிதுநாளில் மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள். […]

Read more

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வித்வான் வே.லட்சுமணன், வானதி பதிப்பகம், பக்.288, விலை 150ரூ. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது 1985-ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது 5-ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளது. புகழுக்கு ஒருவர்  எடுத்ததை முடிப்பவர் எதிர்ப்பினை வெல்பவர் ஆகிய தலைப்புகளில் முதல் மூன்று பாகங்களில் எம்.ஜி.ஆர். நாடக அனுபவங்கள், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அடைந்த ஏமாற்றங்கள், திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் பெற்ற வெற்றிகள் தொடர்பான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் நல்ல தங்காள் நாடகத்தில் ஏழாவது பையன் வேடத்தில் […]

Read more

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 136, விலை 130ரூ. இவ்வூருக்கு இவ்வளவு பெருமைகளா என்று வியக்க வைக்கும் செய்திகள் ஏராளம். குறிப்பாக, நம் தேசப்பிதா காந்தி, நான்கு முறை ஈரோடுக்கு வந்துள்ளார் என்ற செய்தி, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒன்று. இந்தியாவின் தொன்மையான பாலங்களில் காளிங்கராயன் வாய்க்காலும் ஒன்று உள்ளிட்ட தகவல்களைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 8/10/2017.

Read more
1 357 358 359 360 361 505