யாருக்காக இந்தியா

யாருக்காக இந்தியா?, ஆர். நடராஜன், ஆதாரம், பக். 367, விலை 225ரூ. டாக்டர் ஆர். நடராஜன், தினமலர், துக்ளக் ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். இதில் பிரதமருடன் பேட்டி என்ற கட்டுரை துவங்கி, மொத்தம் 80 கட்டுரைகள் உள்ளன. இவை 2012, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. நூலின் துவக்கத்தில் சர்வ வீரிய சர்வாக்ரக, சர்வ வியாபியான இத்தாலிய ஜனன, இந்திய பிரஜா ஸ்நான சோனியா காந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம் என ஆசிரியர் தனி கட்டம் போட்டு குறிப்பிட்டுள்ளார். […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், தொகுப்பு-தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக்குழு, பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கை, யாழ்ப்பாணத்துக்கு அருகில் பிறந்த தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய படைப்புகளின் அரிய தொகுப்பு ஒன்றை வெளியிட்டு மொழிக்கும் பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அடிகளார் ஒன்றே உலகம் என்னுந் தலைப்பில் தாம் பயணம்போய் வந்த 21 நாடுகளைப்பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை இன்றைய தலைமுறையினர் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும். பொழுதுபோக்காக ஊர் சுற்றிப் பார்ப்பதைவிட ஆவணப்பதிவாக […]

Read more

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 250ரூ. மறுபிறப்புத் தொடர்பான பல உறுதியான ஆவணங்களையும், செய்திகளையும் ஆழமாகவும் விரிவாகவும் நூலாசிரியர் எஸ். குருபாதம் தேடித் தொகுத்துள்ளார். குறிப்பாக மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டு என்ற கருத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது. சாக்ரட்டீஸ், காளிதாசர், திருவள்ளுவர், சேக்ஸ்பியர், சுப்ரமணிய பாரதியார் போன்றவர்களின் ஞானம், அறிவு, புத்திக்கூர்மை, திறமை போன்ற ஆற்றல்களுக்கு உந்து சக்தியாக, அவர்களின் ஞாபக கலங்களில் பதிவாகியிருந்த முந்தைய பிறப்புகளில் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியே காரணமாக இருக்க வேண்டும் […]

Read more

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம். சூழலியல் எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன், புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.  தமிழகத்தில் சுற்றுச்சூழலில் மீதான ஆர்வம் பரவலாக, இந்தக் கட்டுரைகளும் ஒரு காரணம். நன்றி: தி இந்து, 22/4/2014.   —-   அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி. மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட வல்லரசு நாடுகள் எடுத்துள்ள புதிய ஆயுதம் விதைகள் என்பது போன்ற அதிர்ச்சியளிக்கும் […]

Read more

இயற்கை செய்திகள் சிந்தனைகள்

இயற்கை  செய்திகள் சிந்தனைகள், ச. முகமது அலி, இயற்கை வரலாற்று அறக்கட்டளை. இயற்கை, காட்டுயிர்கள், பறவைகள், தாவரங்கள், எனச் சூழலியல் சார்ந்த அனைத்தைப் பற்றியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் தகவல்களைக் கொண்ட களஞ்சிய நூல் இது. துறைசார்ந்த எண்ணற்ற சொற்கள், அறிவியல் பார்வை, சுவாரசியத் தகவல்கள் அடங்கிய அற்புத நூல். நன்றி: தி இந்து, 22/4/2014.   —- ஏழாவது ஊழி, பொ. ஐங்கரநேசன், சாளரம். தற்காலச் சூழலில் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளின் அடிப்படையில் எழுதும் பொ. ஐங்கரநேசன், தற்போது இலங்கை வடக்கு மாகாணத்தின் […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 120, விலை 70ரூ. அமெரிக்காவில் ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு […]

Read more

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், க. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை, விலை 150ரூ. விரதங்கள் என்பது இறைவனை நினைப்பதற்காகவே தோன்றியது என்பதும், ஒரு காரணமாகும். அந்த விரதங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதுகூட தெரியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இந்த நூலில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களைப்பற்றி, ஆசிரியர் கூறியிருக்கிறார். விரதங்களின் மகிமை, விரதம் தோன்றிய விதம், இந்த விரத நாட்களில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கிறது. நன்றி: தினத்தந்தி.   —- மனோரமா இயர்புக் 2014, மலையாள மனோரமா, சென்னை, விலை […]

Read more

ஆரியம் திராவிடம் இந்தியம்

ஆரியம் திராவிடம் இந்தியம், வ. பாரத்வாஜர், காவ்யா, சென்னை, பக். 376, விலை 340ரூ. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின், வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நம் நாட்டில் ஆரியம், திராவிடம் என இரு பிரிவுகளாக இந்தியத் தத்துவ மரபுகள் விரிந்துகிடக்கின்றன. இந்நூல் கட்டுரைகளில் ஆரியம் குறித்தும், திராவிடம் குறித்தும் பேசப்படுகின்றது. இந்தியாவின் சமூகம், அரசியல், சமயம், கலாசாரம், மொழிகள், இனம், வரலாறு என எது குறித்தும் பேசினாலும் ஆரியம், திராவிடம் என இந்தியம் அதில் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, டிராட்ஸ்கி மருது, தொகுப்பு-அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 280, விலை 300ரூ. தமிழ் ஓவிய மரபில் நெடுவழிப்பாதை ஒன்றை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஆளுமையைத் தொகுத்துத் தரும் நூல். விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, அழுத்தமான தன்னுடைய கோடுகளின் மூலம் தமிழ்க் கலை உலகை அடையாளப்படுத்துவதில் முன் நிற்கும் மருதுவின் வாழ்க்கைப் பதிவுகள், ஒரு ஆவணப் பதிவாக மட்டுமாகிவிடாமல், உயிரோட்டத்துடனான செயலாகவும் ஆக்கியதில் அ.வெண்ணிலாவின் பங்கு அதிகம். கட்டுரைகளை வாசிக்கும்போது கண்முன் வந்து […]

Read more

கம்பனில் சங்க இலக்கியம்

கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ. கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் […]

Read more
1 51 52 53 54 55 88