எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன்

எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன், முனைவர் என். பரசுராமன், மதிநிலையம், விலை 200ரூ. இந்தியாவில் இன்றைய இளைஞர்களின் பார்வை வேளாண்மை பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்தான். உலகில் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் தன்னை தேடி வந்த ஐ.பி.எஸ். பணியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, விவசாய வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற வகையில் அவர் விடும் ஒவ்வொரு மூச்சிலும் விவசாயம் விவசாயம் என்றே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவரது வாழ்க்கை […]

Read more

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை, ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், விலை 70ரூ. சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வீரவரலாற்றைக் கூறும் நூல். வ.உ.சி.யின் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றை திரளான சான்றுகளுடன் முனைவர் ப.செந்தில் நாயகம் திரட்டித் தந்திருக்கிறார். வ.உ.சி.யின் விடுதலை வாழ்க்கை, தொழிற்சங்க வாழ்க்கை, சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு அவரது சைவத் தொடர்புகள், சிறையிலும் வெளியிலுமான அவரது இலக்கிய பங்களிப்பு, இறுதி நாட்களில் அவர் வறுமையில் வாடியபோதிலும் தமிழ் […]

Read more

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. தலைச்சிறந்த விஞ்ஞானி, எளிமையும் புகழும் மிக்க குடியரசுத் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழில் அறிவியல் பயின்று உலக சாதனை படைத்தவர், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படும் தலைவர், உயர்ந்த பண்பாளர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, வாழ்க்கைப் பாடங்களை, அவரது உயர்ந்த சிந்தனைகளை, அவர் பிறந்த ராமேசுவரம் மண்ணில் தொடங்கி, அக்னிச் சிறகுகளாய் விண்ணில் சாதித்தது வரையான வரலாற்றை எளியமுறையில் தந்துள்ளார் ஆசிரியர். நன்றி: குமுதம், […]

Read more

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், குமரன் பதிப்பகம், விலை 50ரூ. இந்திய மக்கள் அனைவருடைய அன்பையும் பெற்று, மக்கள் ஜனாதிபதி என்று புகழ் பெற்றவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவர் திடீரென்று காலமானபோது, இந்தியாவே கண்ணிரில் மிதந்தது. இளமையில் ஏழ்மையில் எதிர்நீச்சல் போட்டு, கல்வியாலும், அறிவாற்றலாலும் அணுசக்தி விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்தார். ஏவுகணை வீச்சில் சாதனை படைத்து, இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்தார். உலகம் போற்றும் உத்தமத் தலைவரான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை, இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார், எழுத்தாளரும், […]

Read more

என் வாழ்வின் ஒளிவிளக்கு டாக்டர் எம். நடராஜன்

என் வாழ்வின் ஒளிவிளக்கு  டாக்டர் எம். நடராஜன், எம்.ஜே. மருத்துவமனை வெளியீடு, திண்டுக்கல் மாவட்டம், விலை 200ரூ. எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். நடராஜன் எலும்பு முறிவு சிகிச்சையில் அகில இந்திய புகழ்பெற்று விளங்கியவர் டாக்டர் எம். நடராஜன். அதன் மூலம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் என் வாழ்வின் ஒளிவிளக்கு டாக்டர் எம். நடராஜன் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். டாக்டர் எம். நடராஜனின் […]

Read more

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன்

அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன், இராம. குருமர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. கடந்த 45 ஆண்டுகளாக கண்ணியம் என்ற பத்திரிகையை நடத்தி வருபவர் முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன். 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இவர் தொழிற்சங்கவாதி. அதனால் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலை நீக்க உத்தரவை கொடுத்தனர். அது ஆங்கிலத்தில் இருந்ததால், அதை வாங்க மறுத்து தமிழ் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று போராடி, தமிழில் பெற்றார். இது இவருடைய தமிழ்ப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. அவரைப் பற்றி தமிழறிஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் […]

Read more

வீடுதோறும் வெற்றி

வீடுதோறும் வெற்றி, டாக்டர் ந. சேதுராமன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 375ரூ. ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து டாக்டராக, தொழில் அதிபராக, அரசியல் கட்சித் தலைவராக வாழ்க்கையில் வெற்றி பெற்ற கதையை டாக்டர் ந.சேதுராமன் இந்த நூலில் சுவைபடச் சொல்கிறார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டபோதிலும் நாணயமாக இருந்து நாணயம் சம்பாதித்ததைக் கூறுகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறார். இந்த நூலைப் படித்துப் பார்த்தால் ஒரு சாதாரண மனிதர் படைத்த சாதனையைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் […]

Read more

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 120ரூ. ஒரு நாட்டுக் கலாசார பண்பாட்டு வரலாற்றை கணிப்பதற்குத் தொல்லியல் ஆய்வுகள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. இதுகுறித்து குறிப்பாக தமிழகத்தில் பூம்புகார், காஞ்சி முதலான தொன்மைச் சிறப்புமிக்க நகரங்களில் கல்வெட்டு, நாணயம் பற்றியவை குறித்து செய்த அகழ்வராய்ச்சிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பூம்புகாரில் செய்த அகழ்வாய்வுகள், அந்நகரம் முழுமையும் அழிந்துவிட்டது என்ற எண்ணத்தைப்போக்கி, பல பகுதிகள் புதையுண்டுக் கிடக்கின்றன என்னும் உண்மையைக் காட்டுகின்றன. தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகள், தொண்டை மண்டலத்தில் […]

Read more

செங்கிஸ்கான் பேரர்கள்

செங்கிஸ்கான் பேரர்கள், தாழை மதியவன், தோணித்துறை வெளியீடு, தாழையான் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் சிலரைப் பற்றிய வரலாற்றை சிறுகதையாகத் தந்துள்ளார் நூலாசிரியர். முகம்மது பின் காசிம், கியாசுதீன் பல்பன், முகம்மதுபின் துக்ளக், ஜகாங்கீர், ஷாஜகான் போன்ற மன்னர்களின் அகம் புறம் பற்றி பேசும் கதைகள். படிக்கப் படிக்க புத்துணர்ச்சி. தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை என கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியவர்கள், நல்லதோர் வலுவான சமூகத்தைக் கட்ட முடியாதுபோனதைப் பற்றிய கவலை உண்டாக்கும் கதைகள். முகலாய மன்னர்களின் வரலாறு […]

Read more

சேதுபதியின் சேவைக்காரன்

சேதுபதியின் சேவைக்காரன், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ராமநாதபுரம் என்ற சேது சீமையை ஆண்டவர்கள் சேதுபதிகள். அவர்கள் வரலாற்றில் நடந்த போதைக் களமாகக் கொண்டு இந்த நாவலை க.மனோகரன் எழுதியுள்ளார். சடையக்கத்தேவர் காலத்தில் மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் படைகள் ராமநாதபுரத்தைத் தாக்கும்போது நடக்கும் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அதே மதுரையை மைசூர் தளபதி முற்றுகையிட்டபோது, சேதுபதி விஜய ரெகுநாத தேவரின் உதவியை திருமலை நாயக்கரின் நாடினான். அதன் விளைவாக நடந்த மூக்கறுப்பு போர் வரை கதை நீள்கிறது. சேதுபதி மன்னர்கள் மாவீரர்களாகத் […]

Read more
1 25 26 27 28 29 46