சங்ககாலத் தொழில்நுட்பம்

சங்ககாலத் தொழில்நுட்பம், பேராசிரியர் த. சாமிநாதன், அன்னம், பக். 195, விலை 190ரூ. தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில் நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார். பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடறப்யணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். நிறைவு தலைப்பாக, […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை, விலை 145ரூ. மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.   —- சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ. இப்போது கடைகளுக்குச் […]

Read more

திருப்பாவை அமுதம்

திருப்பாவை அமுதம், தாடா. ஸுப்ரமண்யம், தாடா. ஸுப்ரமண்யம், கைத்தறி நகர், நிலையூர், மதுரை 625005, விலை 230ரூ. தமிழ் மறை எனப் பாராட்டப்படும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தின் ஒரு பகுதிதான் திருப்பாவை. ஸ்ரீமத் நாராயணனைத் துதித்துப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகிய திவ்யப்ரபந்தத்தை இயற்றிய 12 ஆழ்வார்களுள், குறிப்பிடத்தக்கவர் பெரியாழ்வார். இவரது பெண் பிள்ளைதான் ஸ்ரீ ஆண்டாள். இவர் ஸ்ரீ நாராயணன் மீது கொண்ட அளவிட முடியாத காதலால், அவனையே தனது கணவனாக மனதில் வரித்து, பக்தி பரவசத்துடன் பாடிய 30 பாடல்களின் தொகுப்பே திருப்பாவை. மாதங்களில் […]

Read more

நீ தெய்வீகமானவன்

நீ தெய்வீகமானவன், சுவாமி விவேகானந்தர், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பதிப்பகம், பக். 448, விலை 200ரூ. விவேகானந்தரின் 150வது அவதார ஆண்டில் வெளியான சிறப்பான தொகுப்பு நூல். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், சோர்ந்த தனிதனை எழுப்பி, சாதனை செய்ய வைக்கும் தீப்பிழம்பை எழுப்பும் சக்தி கொண்டவை. ராம கிருஷ்ணமடம் வெளியிட்ட எழுந்திரு விழித்திரு என்னும் 11 பாகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பரவசம் தரும் புதுநூல். இயற்கை, இறைவன், ஆன்மா பற்றிய விளக்கமும், படைப்பு என்ற தலைப்பில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பிராண சக்தி பிரபஞ்சம் முழுவதும் […]

Read more

நீரோட்டம் பார்ப்பது எப்படி

நீரோட்டம் பார்ப்பது எப்படி?, மு.லக்ஷ்மி, வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. கிராமப்புறங்களில் பெரியவர் ஒருவர், இளம் புளியங்க வட்டையைக் கொண்டு, நிலத்துக்கடியில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்து கூறும் வித்தையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மரபு வழியைச் சார்ந்த ஒரு பெண்டுலம் மூலம் நீரோட்டம் பார்ப்பது எப்படி என்ற ஆய்வு மற்றும் செய்முறை நூலை, வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர் இயற்றியுள்ளார். இவர் தனது பணி ஓய்வுக்குப் பின், பல வருடங்கள், இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 100ரூ. இந்து மதத்தின் வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் அருமை பெருமைகளை விளக்குவதோடு தனி மனித உயர்வுக்கும் நெறி சார்ந்த வாழ்க்கைக்கும் வேதங்களை மேற்கோள் காட்டி எழுதி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   தகவல்கள் 42, அமரர் கோ. தென்கச்சி சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலைநகர், அனெக்ஸ் பெருங்குடி, சென்னை 96, பக். 160, விலை 90ரூ. […]

Read more

சிலம்பம் படம் பாடம்

சிலம்பம் படம் பாடம், பூ. திருமாறன், டிரஸ்ட் நிறுவனம், 91ஏ, மேற்குத் தெரு, வெங்கடாம்பட்டி, கடையம் வழி, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், பக். 195, விலை 100ரூ. தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் தலையாயது சிலம்பம். பாரம்பரியமும் பழைமையும் கொண்ட இக்கலையின் நுட்பங்களையும் சூட்சுமங்களையும் நெறிமுறையையும் அதன் ரகசியங்களையும் நூல்வழி கற்றுத் தரும் புதிய முயற்சி இந்நூல். சிலம்பாட்டத்தின் வரலாற்றோடு அதன் நேர்த்தியைச் சொல்லும்போதே அக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. எதிரியின் தாக்குதல்களை சமாளிக்க உதவும் கருங்குருவி நிலை முதல் […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 160, விலை 170ரூ. மூலப் பொருட்களை அப்படியே வணிகம் செய்யாமல் யாரெல்லாம் மதிப்புக் கூட்டி வணிகம் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் பொருளாதார ரீதியில் சிறப்பாக உயர்ந்து வருகிறார்கள். அதற்கு உதாரணம் ஜப்பான். ஆனால் அனைத்து மூலப்பொருட்களும் நிறைந்து விளங்கும் நமது நாட்டில் மதிப்புக் கூட்டி வணிகம் செய்வதின் மகத்துவத்தை உணராதவர்களாக நாம் இருந்து வருகிறோம். அந்தக் குறையைப் போக்க மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன என்பதை எளிமையாக […]

Read more

நாட்டு வைத்திய களஞ்சியம்

நாட்டு வைத்திய களஞ்சியம், கொ.மா. கோதண்டம், நிவேதிதா பதிப்பகம்,சென்னை 94, பக். 304, விலை 175ரூ. எடுத்தற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக்கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல் வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற மிளகு, சுக்கு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்து கொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம் என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில் சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். தலைவலி, […]

Read more

உனக்காக காத்திருந்தேனே

உனக்காக காத்திருந்தேனே, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, விலை 250ரூ. இது புதுமையான கவிதை நூல். நூலாசிரியர் எஸ். விஜயராஜ், பத்திரிகையாளராக இருந்தவர். வானொலி நாடகங்களும்,மேடை நாடகங்களும் எழுதியவர். இதயம் தேடும் உதயம், சித்திரம் பேசுதடி என்ற இரண்டு திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன் இயக்கவும் செய்தவர். படங்களுக்கு எழுதிய கவிதைகளும், தனியாக எழுதிய கவிதைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் புதுமை என்னவென்றால், ஒவ்வொரு கவிதைக்கு முன்னாலும், கவிதை உருவான சூழ்நிலை, படத்தில் இடம் […]

Read more
1 6 7 8 9 10 12