மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்., ஜி.விசுவநாதன், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், விலை 150ரூ. விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், மக்கள் போற்றும் தலைவரான எம்.ஜி.ஆரின் வரலாறு, அவருடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கியபோது, அவரை மலையாளி என்று வர்ணித்தார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு எம்.ஜி.ஆர்., “யார் தமிழர் என்பதற்கு நீங்களே விளக்கம் சொல்லுங்கள். தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூராரின் தாய்மொழி தெலுங்கு, ஆனால் அவர் தமிழ் மீது வைத்திருந்த பற்றினை நாடே அறியும். முதல்வராக […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்கு பதிப்பகம், விலை 350ரூ. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் நன்மைகளை பாராட்டும் நூல்கள் பல இருக்கின்றன. ஆனால் காலனி ஆதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும், இந்தத் தேசத்தை எப்படி பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூல் நம்முடைய கடந்த காலம் குறித்த பிழையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கிய ஆவணமாகவே இருக்கிறது. ஜாலியன் […]

Read more

அம்மாவின் கதை

அம்மாவின் கதை, எஸ்.கிருபாகரன், விகடன் பிரசுரம், விலை 175ரூ. தமிழகத் திரை உலகிலும், அரசியலிலும் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா. பேராசிரியராக விரும்பிய ஜெயலலிதா, “வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர். மூலம் அரசியலுக்கு வந்தார். தமிழக முதல் – அமைச்சர் ஆனார். எதிர்நீச்சல் போட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் எஸ்.கிருபாகரன்.பலரும் அறிந்திராத ஜெயலலிதா வாழ்க்கையின் ஆரம்பகால நிகழ்ச்சிகள், அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்ப்புகள் என அனைத்து சம்பவங்களையும் விரிவாகவும், […]

Read more

ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 208, விலை 200ரூ. இது தந்தையர் நாடு ஹிட்லர், கார்ல் மார்க்ஸ், ஜன்ஸ்டைன் இவர்களை நினைக்கும்போது, ஜெர்மனியை நினைக்காமல் இருக்க முடியாது. ஜெர்மனி இயற்கை வளம் மிக்க நாடு. ரைன், டான்யூப் நதிகளாலும், கருங்காடு போன்ற இயற்கைச் செல்வங்களாலும் தன்னிறைவும் தன்னம்பிக்கையும் பெற்ற நாடு. எல்லை அற்ற தொழில் வளம் அதன் முதுகெலும்பு. கால தேச வர்த்தமானங்களால், வாழ்வியல் போக்குகளால், இரு பெரும் உலகப் போர்களுக்கு ஒரு வகையில் காரணமாகவும், பேரளவுக்குக் களங்கமாகவும் […]

Read more

மறக்கமுடியாத மாபெருந்தலைவர்

மறக்கமுடியாத மாபெருந்தலைவர், திருவாரூர் இரா. தியாகராஜன்(சின்ன குத்தூசி), சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கர்மவீரர் காமராஜருடனான அனுபவ நிகழ்வுகளை பிரபலங்கள் பலரிடம் கேட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. காமராஜரின் கண்ணியம், உதார குணத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

தமிழ்நாட்டு நீதிமான்கள்

தமிழ்நாட்டு நீதிமான்கள், கோமல் அன்பரசன், சூரியன் பதிப்பகம், விலை 190ரூ. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறை வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

மார்க்ஸ் எப்படி இருப்பார்?

மார்க்ஸ் எப்படி இருப்பார்?, எஸ்.தோதாத்ரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.120. 2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை. மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் கொண்டிருந்த ஆழமான காதல் என முதல் நான்கு கட்டுரைகள் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றியவையாக உள்ளன. மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த அவருடைய […]

Read more

தேர்தல் வழிகாட்டி,

தேர்தல் வழிகாட்டி, வி. சிதம்பரநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. சோழர் காலத்திலேயே தேர்தல் முறை இருந்தது. காலத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் ஊரக, உள்ளாச்சி தேர்தல்கள் நடைபெற இருப்பதால், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் வி.சிதம்பரநாதன். வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள், மனுவை வாபஸ் பெறுதல், சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்கு எண்ணிக்கை பற்றிய விதிமுறைகள்… இப்படி வாக்காளர்களும், வேட்பாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் இப்புத்தகத்தில் […]

Read more

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம்

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம், முதல் தொகுதி. இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.224, விலை ரூ.150. மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூறும் நூல். கான் அப்துல் கஃபார் கான், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூ கி, லான்சா டெல் வாஸ்டோ (சாந்திதாஸ்), சீசர் எஸ்ட்ரடா சாவெஸ், லெக் வலெசா ஆகியோர் மக்களுக்காக உலக அளவில் போராடியவர்கள். அவர்கள் பல்வேறு போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலும் […]

Read more

வியப்பின் மறுபெயர் வீரமணி

வியப்பின் மறுபெயர் வீரமணி, மஞ்சை வசந்தன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 250ரூ. திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். ஒரு காவிய நாயகரின் வரலாற்றை, காவியமாகவே படைத்திருக்கிறார் மஞ்சை வசந்தன். புத்தகத்தை கையில் எடுத்தால், கீழே வைக்க மணம் வராது. அந்த அளவுக்கு சுவை, விறுவிறுப்பு. புத்தகத்தில் உள்ள மறக்க முடியாத சில தவல்கள் பிறந்து 11 மாதமே ஆகி இருந்த நிலையில் வீரமணியின் தாயார் மறைந்தார். அதன் பின் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் சாரங்கபாணி. […]

Read more
1 8 9 10 11 12 44