சான்றோர் கவி

சான்றோர் கவி, முனைவர் அ. பாண்டுரங்கன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 192, விலை 120ரூ. ஆராய்ச்சி எண்ணமுடையோர்க்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் ஏழினைக் கொண்டது இந்நூல். ஆய்வரங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளையும், ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் செம்மைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியரை பாராட்டலாம். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ள முறை சிறப்பானது. எட்டுத்தொகை நூல்களை படிக்க விழைபவர்களுக்கு, முதல் நான்கு கட்டுரைகள் வழிகாட்டியாய் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் […]

Read more

புறநானூறும் திருக்குறளும்

புறநானூறும் திருக்குறளும், முனைவர் சரளா ராசகோபாலன், ஒளிப்பதிப்பகம், எண் 4(63), டாக்டர் ரங்கா சாலை, சென்னை 6000018, பக். 232, விலை 150ரூ. சிறந்த புலமையும் எழுத்தாற்றலும் உடைய, நூலாசிரியரின் 74வது நூல் இது. இந்நூலுள் புறநானூறு அறிமுகம், திருக்குறள் அறிமுகம், தொடர் ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை, வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன. இரு நூல்களையும் பலமுறை ஆழ்ந்து கற்று, ஒப்புமைகளைக் கண்டு ஆராந்து, நுட்பமாக இந்நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். சொல்லாய்வுகளும் இடம் பெற்றுள்ளன. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் […]

Read more

ஆன்மிக சாண்ட்விச்

ஆன்மிக சாண்ட்விச், மு. கோபி சரபோஜி, வானவில் பதிப்பகம். நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால், சுவாரஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு, ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கியிருக்கிறார். எல்லா கதைகளுக்கும், அருமையான ஓவியங்களையும் இணைத்து, நூலை மிக நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம். தலைப்பில் உள்ள சாண்ட்விச்சுக்கு பதிலாக, தேன் துளிகள் என்றோ அமிர்தத் திவலைகள் என்றோ வைத்திருக்கலாம். -ஜனகன். நன்றி: தினமலர், 12/5/2013.   —-   ஸ்ரீமாகம் […]

Read more

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் வெளியீடு, காமராஜர் தெரு, பண்ருட்டி 607106, பக். 272, விலை 300ரூ. குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 112 தாவரங்கள், கபிலர் தொகுத்து வழங்கயி, 102 பூக்கள் ஆகியவற்றை இலக்கியப் புலமையோடும், அறிவியலின் அடிப்படையில் தாவரவியல் பெயரீட்டு முறையிலும் அணுகி, மிக அருமையானதொரு பணியினைத் தாவரத் தகவல் மையம் செய்துள்ளது. குறிஞ்சிப்பாட்டில் உள்ள தாவரங்கள் பட்டியல், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்கணக்கு போன்ற இலக்கியங்களில் இடம் பெறும் தாவரம் எனப் பட்டியலிட்டு அதன் வகைப்பாடு, தாவர […]

Read more

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி. சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 168, விலை 60ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-039-0.html உலகம் கோடி ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கடவுள் படைத்த உலகம், உயிரினங்கள், மனிதன், விலங்கு, செடி கொடிகள், ஒழுக்கம் பற்றிய மெய்ஞானிகள் கருத்து என்ன? 200 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகம் உருவானது பற்றிய விஞ்ஞானிகள் விளக்கம் என்ன? இலக்கியப் பாடல்களுடன் சாமி. சிதம்பரனார் இந்நூலில் […]

Read more

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தனலட்சுமி பதிப்பகம், எஸ்-17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. ஆண்டவனிடம் வியாபார புத்தியுடன் பக்தி செய்வதால் எந்தப் பயனும் இல்லை. கடவுளை கடவுளுக்காகவே காதலித்து, அன்பு செலுத்துபவர்களின் பக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்? மரணம் என்பது நம் முடிவில்லை. ஜனனம் என்பது நம் தொடக்கமும் இல்லை. இந்த ஞானத்துடன் கடவுளின் செயல்களைக் காண்பவர்களுக்கு அன்பைத் தவிர, வேறு எதுவுமே தெரியாது. பாரசீகக் கவிஞன் ஜலாலுதீன் […]

Read more

சட்டச் சொல் அகராதி

சட்டச் சொல் அகராதி, வீ. சந்திரன், புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. நீதிமன்றங்களில் வழக்காடும் தமது வக்கீல்கள் என்ன சொல்லி வாதாடுகிறார்கள் என்பது குறித்து அந்த வழக்குக்கு உரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது சட்டத்துறையில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியின் காரணமாக, சட்ட நுணுக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் சட்டக்கலை சொற்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர் […]

Read more

கல்கியின் சிறுகதைகள்

கல்கியின் சிறுகதைகள், நக்கீரன், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை மூன்று புத்தகங்களும் முறையே 100ரூ, 120ரூ, 130ரூ. சரித்திரக் கதைகள் எழுதுவதில் ஈடுஇணையற்றவராகத் திகழ்ந்த கல்கி சிறுகதைகள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். காதல், வீரம், சோகம், நகைச்சுவை… இப்படி நவரசங்களும் கலந்தவை அவருடைய சிறுகதைகள். கல்கியின் மிகச்சிறந்த 55 கதைகளை தேர்ந்தெடுத்து 3 புத்தகங்களாக வெளியிட்டுள்ளது நக்கீரன். கல்கியின் மிகப் பிரபலமான வீணை பவானி, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, கேதாரியின் தாயார், அமரவாழ்வு, பொங்குமாங்கடல், புவிராஜா, சுபத்திரையின் சகோதரன் ஆகிய கதைகளும் […]

Read more

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும்

வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும், முனைவர் ம.இசக்கியப்பன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 78, விலை 105ரூ. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நூலை முனைவர் ம.இசக்கியப்பன் எழுதியுள்ளார். கவிஞர் ஒரு அறிமுகம், உருவகக் கொள்கை, கரு ஒரு பகுப்பு, மொழிப் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் கவிஞரின் கவிதையாற்றலையும், மொழி ஆளுமையையும் அருமையான வகையில் புலப்படுத்தியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் கற்பனை, சொல்லாட்சி, அணிநயம், பழமொழியை ஆளும் திறன், ஓசை நயம் போன்றவை பரவிக் […]

Read more

திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள்

திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள், முனைவர் ந. வேலுசாமி, லியோ டால்ஸ்டாய் பதிப்பகம், சென்னை 10, பக். 344, விலை 250ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளை மையப்படுத்தி எத்தனை ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்து கொண்டே இருக்கலாம். திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள் என்ற இந்நூல் கவனிக்கத்தக்க படைப்பாகும். அன்னை, தந்தை, ஆசிரியன், குடிமகன், நண்பன், மனைவி, அமைச்சன், சான்றோன், நீதிபதி, ஆட்சியாளன் போன்றோர் வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களைப்பற்றி திருவள்ளுவர் பல்வேறு பரிமாணங்களுடன் அணுகியிருப்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். திருவள்ளுவர் அன்னை பற்றிக் கூறிய கருத்துகள் […]

Read more
1 78 79 80 81 82 84