என் உயிரே என் உறவே

என் உயிரே என் உறவே, (நாவல் பாகம் 1, 2) பிரவீணா, அருண் பதிப்பகம், பக். 492, 412, விலை தலா 200ரூ. சினிமா ரசிகர்களுக்கு உகந்த நாவல், ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா. கதாநாயகி கீர்த்தனா, பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய்விடுகிறாள். எனவே கீர்த்தனாவை மணமுடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு. தன் தந்தைக்கு பாலா பண உதவி செய்கிறான் […]

Read more

நக்சல் பாரி முன்பும் பின்பும்

 நக்சல் பாரி முன்பும் பின்பும், ஆங்கில மூலம் சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன் விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். ஒரு கம்யூனிஸ்ட் வாக்குமூலம் இந்திய மக்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் துர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பல்வேறு வண்ணங்களில் அரசியல் இயக்கங்களைச் சமுதாயத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் நக்சல் பாரி இயக்கமும் ஒன்று. அதன் முக்கிய பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ். சில மாதங்களுக்கு முன்புதான்96 வயதில் அவர் காலமானார். அவர் தனது இறுதிக் காலத்தில் […]

Read more

முப்பருவம்

முப்பருவம், எஸ்.ஏ.வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து, கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, […]

Read more

அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இந்நூல் கேரளாவின் உயரிய விருதான வயலார் அவார்டும், மத்திய சாகித்திய அகாதெமி விருதும் பெற்ற நாவல். கனவைப் போன்றதொரு கதை சொல்லல் முறையில், வாழ்க்கையின் குழப்பமான புதிர்களை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. மனித உறவுகளில் உண்டாகக்கூடிய பிளவுகளை, தாய் பிரியம்வதா மூலமும் அந்தத் தாயிடமிருந்து விலகிக்கொண்டிருக்கும் மகள் மூலமும் நாவல்  விவரிக்கிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதையை தமிழில் […]

Read more

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-338-0.html பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பதற்கும், அப்படி ஏமாற்றப்பட்டால் அதற்கு தீர்வு காண்பது எப்படி? எங்கே முறையிடுவது? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள், தமிழகத்தில் உள்ள தன்னார்வ நுகர்வோர் மன்றங்கள் முதலான விவரங்கள் கொண்ட பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.   —-   மெழுகாய் கரையும் பெண்மைகள், வானதி பதிப்பகம், […]

Read more

பொன் அந்திச் சாரல் நீ

பொன் அந்திச் சாரல் நீ, ஸ்ரீஜா வெங்கடேண், வானதி பதிப்பகம், பக். 264, விலை 100ரூ. மாத நாவல் உலகில் கொடி போட்ட சாதனையாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ். நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பொன் அந்திச் சாரல் நீ என்ற அவர் எழுதிய நாவல், ஒரு தவறான தொலைபேசி அழைப்பால், ஒரு குடும்பம் சிதைவதையும், அதற்கு காரணமான மருத்துவரான தன் தாய்மாமனுக்காக, கதாநாயகன் தன் வாழ்க்கையே தியாகம் செய்வது பற்றியும் பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவல், நினைக்கவே […]

Read more

பனி

பனி, ஓரான் பாமுக், தமிழில் ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 575, விலை 450ரூ. To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-182-0.html இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் படைப்புகளில் அரசியலை வெளிப்படையாகப் பேசும் தனித்துவமான நாவல் பனி. துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸுக்கு ஒரு பனிக்காலத்தில் வந்து சேரும் பத்திரிகையாளன் காவின் அனுபவங்களே இதன் கதை. துருக்கியை மேற்கு நோக்கி நகர்த்த முனையும் மதச்சார்பற்ற நவஅடாதுர்க்கிய அரசுக்கும் மத அடையாளங்களைத் தமது சுயகௌரவத்தின் சின்னங்களாகப் பார்க்கும் பெண்களுக்கும் […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-229-9.html வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்தும் தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன். வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு. இது சரி-தவறு என்பது குறித்த தெளிவான நிலைபாடு, சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான […]

Read more

வண்டிப் பாதை

வண்டிப் பாதை, நாவல் குமாரகேசன், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 376, விலை 260ரூ. தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எடுத்துக் கொண்டு இந்தச் சரித்திர கதையை படைத்திருக்கிறார் குமாரகேசன். கதையின் களமாக வருவது ஒரு மலையடிவார பூமி. கொங்கு சீமையின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த மண்ணிற்கு வலிமையும், வன்மமும், வலியும் அதிகம். பாண்டிய நாட்டின் வடக்குப்புற எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் கருமலையும் தொடர்ச்சி ரங்க மலையும் கூட கதையில் வருகின்றன. கொங்குப் பகுதி மக்களின் கிராம வாழ்வை, […]

Read more

சமுதாய வீதி

சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி, சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கி நம் கண் முன் நடமாட விட்டவர் தீபம் நா. பார்ததசாரதி. சினிமா உலகில் நுழைய விரும்பி, சினிமா துறையில் அடியெடுத்து வைத்து, நல்ல மனிதனாக வாழ்ந்த கதாபாத்திரத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை.  நா.பா.வின் இந்த சமுதாய வீதி அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த நாவல். தற்போது அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- வரலாற்று நாயகர் தந்தை பெரியார், […]

Read more
1 42 43 44 45 46 66