அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம், ச.சிவ. வல்லாளன், விகடன் பிரசுரம், விலை 155ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-243-6.html வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் அது ரத்த உறைவைத் தடுக்கும். இஞ்சி சாப்பிடுவோருக்கு இதய நோய் ஏற்படுவது இல்லை. மஞ்சள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்களை எடுத்துக் கூறுகிறார் ச.சிவ. வல்லாளன். நன்றி: தினத்தந்தி.   —- காகிதப் படகில் சாகசப்பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, […]

Read more

ஜென் தொடக்க நிலையினருக்கு

ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில் சேஷையா ரவி, அடையாளம் வெளியீடு. எளிமையாய் ஓர் அறிதல் ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்ப கட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி […]

Read more

நமது பாரம்பரிய இசை

நமது பாரம்பரிய இசை, தொகுப்பாசிரியர்-சித்தார்த்தன், பண்மொழிப் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. இந்த நூல் கர்நாடக, இந்துஸ்தானி, பண் இசையின் இலக்கணத்தை விவரிக்கிறது. கோவிந்த தீட்சிதர், வேங்கடமி இருவரின் மேளகர்த்தா முறையில் ராகப் பெயர்களும், அவற்றின் ஜன்ய ராகங்களும், ஆராகண, அவரோகண வரிசைகளும் இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன. கர்நாடக, இந்துஸ்தானி இசையின் சமஸ்வரஸ்தான ராகங்கள், தமிழ்ப் பண்களுக்க இணையான ராகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 103 பண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய இசை என்ற தலைப்பில், தொகுப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை, இரண்டாயிரம் […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நீதியரசர் கற்பகவிநாயகத்தின் வாழ்வும், அவர் சமுதாயத்துக்கு காட்டி வரும் நல்ல வழிகளை மையமாக வைத்து வண்ண புகைப்படங்களுடன், 24 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நூலாகும். வீழ்வது கேவலம் அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம், விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை என்ற நீதியரசரின் வைரவரிகளை இளைஞர்கள் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நீதியரசரின் […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more

மனித நோய்கள்

மனித நோய்கள், அருள் செங்கோர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. மருத்துவ நூல்களில், குறிப்பிடத்தக்க சிறந்த நூல். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? தூக்கமின்மை, மனச்சோர்வு, ஜலதோஷம், தலைவலி, வாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, மஞ்சள் காமாலை முதலிய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும், இந்த நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்துவிட்டால் என்ன சிகிச்சை செய்வது என்பது குறித்தும் இந்த நூலில் விளக்கியுள்ளார் டாக்டர் அருள் செங்கோர். நோயின்றி வாழ வழி காட்டும் நூல் இது. நூலாசிரியர் அருள் செங்கோர் தமிழறிஞர் க.ப.அறவாணனின் […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ. நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், பக். 96, விலை 100ரூ. முதுமைப் பருவம் நம் வாழ்க்கைப் பயணத்தில் இயல்பானதுதான். ஆனால் நம் மனம், முதுமைப் பருவத்தை மட்டும் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக்கொள்கிறது. முதுவையில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளும், இந்த பருவத்தில் மரணம் குறித்து உண்டாகும் பயமும்தான் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும். முதுமையில் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், மரண பயத்தை வெல்வதற்கான சூட்சுமங்களையும் உள்ளடக்கிய நூல்தான் இது. முதுமையில், சர்க்கரை நோய், உயர் […]

Read more

வடலிமரம்

வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசவுந்தரி, இந்திய மருத்துவ மையம், பக். 1217, விலை 1000ரூ. குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல ஏன் பிறந்தோம் பெண்ணாய் என சலிப்புத் தட்டும் இந்தக் காலத்தில், பெண்ணாய் பிறக்க, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என பாரதியார் எதை உணர்ந்து சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால் டாக்டர் ஞானசவுந்தரியின் புத்தகத்தைப் படித்தபின் பாரதியாரின் கூற்று உண்மை என, நினைக்கத் தோன்றுகிறது. குழந்தை பெறுவது எளிதான காரியமல்ல என வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிட, அது எவ்வளவ கடினம் என்பதை, தன் கடிதங்களின் […]

Read more

கொண்டாடத்தான் வாழ்க்கை

கொண்டாடத்தான் வாழ்க்கை,  அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. மனித பிறவி எவ்வளவு இனிமையானது. அதை எப்படி கொண்டாடினால் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு சில கருத்துக்களையும், வழிமுறைகளையும் 34 அத்தியாயங்களில் தொகுத்து அளித்துள்ளார் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பளிச் பளிச் என்று சொல்லப்படும் குட்டிக் கதைகள் நூலை சுவாரஸ்யமாக ஆக்குகின்றன. நகைச்சுவையையும் ஒரு படிப்பினையையும் இணைத்தே சொல்லப்படும் அந்தக் கதைகள் தனி விறுவிறுப்பைத் தருகின்றன. படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் ஜனரஞ்சக நடையில் எல்லோரது மனதைத் […]

Read more
1 18 19 20 21 22 32