முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ.நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், திருப்பூர், சென்னை, விலை 100ரூ. முதியோர் நல மருத்துவரான நூலாசிரியர் முதியோர்கள் தங்களை உணர்ந்து கொள்ளவும், தங்கள் வீட்டிலுள்ள முதியவர்களை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாகவே இதனை தொகுத்துள்ளார். அத்துடன் முதியோருக்கு தேவையான மனநல ஆலோசனைகள், முதிய பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி கடைபிக்க வேண்டிய உணவுப்பழக்கம், நோய்களைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை, ஏற்கனே வந்துவிட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், குறிப்பாக முதிய வயதில் பெண்களைத் தாக்கும் பிரத்யேகப் பிரச்சினைகள் என […]

Read more

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள்

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள், டாக்டர் ஜெ. ஜெயலட்சுமி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 975, விலை 750ரூ. இவ்வளவு பெரிய நூலா என்று மலைப்பு ஏற்பட்டாலும் புரட்டிப் பார்த்தவுடன் முழுவதையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. காரணம், பைசா செலவில்லாமல் நமது நோய்களை நாமே தீர்த்துக் கொள்ளும் எளிய மருத்துவ முறைகளை வரைபடம், புகைப்படம், செய்முளை என்று மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி, அக்குபங்சர், அக்குபிரஷர், யோகா, முத்திரைகள், நேச்சுபதி, ஆரிகுலோதெரபி, பிரானிக் ஹீலிங், ரெய்கி என்று […]

Read more

செம்மண் மடல்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்), இரா. மீனாட்சி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, பக். 452, விலை 300ரூ. ஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாஈடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி […]

Read more

பேரறிஞர் அண்ணா களஞ்சியம்

பேரறிஞர் அண்ணா களஞ்சியம், குமுதவல்லி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. அப்பாவித் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன், சி.என்.ஏ. என்னும் மூன்றெழுத்தால் அறிமுகமான அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைக் களஞ்சிய நூல். இந்நூல் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று சுருக்கக் குறிப்பும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அண்ணா பற்றி எழுதிய புகழ்மாலை தொகுப்பும், கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும், அண்ணாவின் மறைவுக்குப் பின் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் உரைகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. திறனாய்வுச் செம்மல் எம்.எஸ்.தியாகராஜன் இத்தொகுப்பை செம்மைப்படுத்தியிருக்கிறார். […]

Read more

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம், குமுதம் பு(து)த்தகம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-361-2.html நோய் வருவதற்கு முன், அந்நோயை வரவிடாமல் தடுப்பது எப்படி என்பதை விளக்கும் நூல். தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், கெட்ட பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை, அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆட்படுதல், தேவையற்ற உடல் பருமன் இவையே நோய்களுக்கான மூலமுதற்காரணம் என்பதை விளக்கியுள்ளார் டாக்டர் போத்தி. டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட குழந்தைகளுக்கான நோய்கள், மாரடைப்பு போன்ற […]

Read more

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள்

மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள், ஜான் முருக செல்வம், ஜாய்ஸ் முருக செல்வம், பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. பாலுணர்வு என்றாலே, வெளிப்புறத்தில் முகம் சுளித்தும், உள்ளுக்குள் ரசத்தும் பழகிப்போன மனித இனத்துக்கு, மனவளர்ச்சி குன்றியோரின் உணர்ச்சிகள் புரியுமா என்பது தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்காகவே ஜான் முருக செல்வமும், ஜாய்ஸ் முருக செல்வமும், மிகத் தெளிவாக இந்த நூலை எழுதியுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய ஆண், பெண்கள் பருவ வயதை எட்டும்போது உடலில் எற்படக்கூடிய மாற்றங்கள், பாலுணர்வால் அவர்கள் ஆட்கொள்ளப்படும் […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், எத்திராஜன் ராதா கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-338-4.html பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பானுக்கு சென்று வந்தவர். எனவே ஜப்பான் பற்றிய பயனுள்ள தகவல்களைக் கூறும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஜப்பானில் மேலை நாட்டு நாகரிக்த்தின் தாக்கம் மிகுந்து வந்தாலும், ஜப்பானிய பெண்களிடம் பெண்மைக்கே பெருமையும், அழகும் சேர்க்கும் மென்மையும், நளினமும் நிறைந்து காணப்படுகின்றன என்கிறார் ஆசிரியர். ஜப்பானிய கல்வி முறையைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் […]

Read more

அதிகாரத்தின் மூலக்கூறுகள்

அதிகாரத்தின் மூலக்கூறுகள், எலியா கனெட்டி, தமிழில் ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-344-2.html 1905ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்பாடுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். க்ரவுட்ஸ் அண்ட பவர் என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக அதிகாரத்தின் மூலக்கூறுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும்போது அத்தனை […]

Read more

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி, டாக்டர் கீதா அர்ஜுன், ஹேமா நரசிம்மன், திருமகள் நிலையம், பக். 336, விலை 350ரூ. கர்ப்பத்தை ஒரு தாய் உணர்வது எப்படி? மகப்பேறு அடைவது, சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம், காற்று மாசு, மன அழுத்தம் உட்பட பல காரணங்களால், கர்ப்பம் தரிப்பதே தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி, கர்ப்பம் தரித்தால், அந்த சிசுவை வயிற்றில் பத்திரமாகப் பாதுகாத்து வெளிக்கொணர்வது, மறு ஜென்மம் எடுப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. இதனால் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண், பல கட்டப் போராட்டத்திற்கும், […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 140, விலை 120ரூ. இந்நூலின் மொழிபெயர்ப்பு ஆசிரியர், தமிழ் இலக்கியப் படைப்புப் பணிகளிலும், இலக்கிய வட்டப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நூலிலுள்ள சிறுகதைகள் அனைத்துமே உருது, கொங்கணி, பஞ்சாபி, ஆங்கிலம், ஒரியா, ஜாவா, அஸ்ஸாமி, மலையாளம், தெலுங்கு என்று பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் பலர், வாழ்க்கை தரும் நெருக்கடிகளுக்கும், உறவுகள் தரும் ஏமாற்றங்களுக்கும் இடையில் சிக்கித் தவிப்பவர்கள். இவர்களின் கதைகளே இந்நூலில் […]

Read more
1 19 20 21 22 23 32