உணர்ச்சிகளின் ஊர்வலம்

உணர்ச்சிகளின் ஊர்வலம், நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. வித்தியாசமான தலைப்பில் உணர்ச்சி பூர்வமாக எழுதப்பட்ட வரிகள் கொண்ட நாவல். பெண்ணின் மனநிலையை அற்புதமாக நூலாசிரியர் படம் பிடித்து காட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   நலமா? நலமே!, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 100ரூ. நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, முத்திரை பயிற்சி, ஆசனங்கள், தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் ஒரு மனிதன் நலமுடன் வாழ முடியும் என்பதை மருத்துவர் வே. வீரபாண்டியன் இந்த […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, கோவன் பதிப்பகம், சென்னை, விலை120ரூ. பத்திரிகைகளில் சிறுகதை வெளிவருவது குறைந்துவிட்டது. ஆனால் சிறுகதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. அப்படிப்ட்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும், தெவிட்டாத இன்பமும் அளிக்கக்கூடியது பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான முகிலை இரா. பாண்டியனின் குருவிக்கூடு சிறுகதைத் தொகுதி. கதைகள் ஒவ்வொன்றும் மனதை வருடுகின்றன. எனினும் பாரம் என்ற சிறுகதை புதிய உச்சத்தைத் தொடுகிறது. ஜான் என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றிய கதை. பிறருக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட தங்களுக்கு இக்குழந்தை ஏன் பிறந்தது? தங்களுக்குப் பின் அக்குழந்தையைக் காக்கப்போவது […]

Read more

மருத்துவ அகராதி

மருத்துவ அகராதி, முனைவர் மு. பொன்வைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், விலை 800ரூ. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். மருத்துவம் பற்றிய சொற்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கும் அகராதி அது. நீண்ட காலம் பாடுபட்டு உருவாக்கிய இது, அக்காலத்திலேயே மிகுந்த பாராட்டு பெற்றது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அந்த நூலை, நவீன வடிமைப்புடன், மிக பிரமாண்டமானதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பாக விளங்கும் “தமிழ்ப் பேராயம்” வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி இறுதியில் தெய்வநிலை பெற்றாள். கேரள மாநிலம் மங்கல தேவி மலையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி தேவி கோவிலைக் கட்டினான். மேலும் இதுபோல பல்வேறு பெயர்களில் கண்ணகி கோவில்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவரால் கண்ணகி வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் ‘பகவதி’ என்று பயபக்தியோடு வணங்கப்படுகிறாள். இதேபோல் தமிழகத்திலும், ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்று கூறுகின்ற இந்த நூலாசிரியர் […]

Read more

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2)

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2), ஹெச். வசந்தகுமார், வசந்த அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. தொழில் அதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான எச். வசந்த்குமார் தொலைக்காட்சியில் 5 நிமிட நேரம் சின்ன சின்ன குட்டிக்கதைகளைக் கூறி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை எடுத்துரைத்தார். அவை இப்போது ‘வெற்றிப் படிகட்டு பாகம் 2’ என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களைக் கவரும் வகையில் தன்னம்பிக்கைக் கதைகளை எளிய நடையில் எடுத்துச் சொல்கிறார். வெற்றிப் படிக்கட்டுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். வாழ்வில் […]

Read more

மனவளர்ச்சி குன்றுதல்

மனவளர்ச்சி குன்றுதல், ந. செந்தில் குமார், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 204, விலை 130ரூ. மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மனநலக் குறைபாடு வேறு என்பதை ஆசிரியர் நூலின் ஆரம்பத்திலேயே விளக்கிவிடுகிறார். மனவளர்ச்சிக் குறைபாடு என்பது முழுக்க முழுக்க மூளையின் செயல்பாடுகளில் உண்டாகும் குறைபாடாகும். இந்த அடிப்படையில் மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கான பல்வேறு காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது வரை ஒவ்வொரு வயதிலும் என்னென்ன வளர்ச்சிப் படிநிலைகளை அடையுமோ, அவற்றை அடையாவிட்டால் அக்குழந்தை மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். […]

Read more

மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம், டாக்டர் பி.எஸ். லலிதா, மயிலை முத்துக்கள் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. டாக்டர் பி.எஸ். லலிதா கால்நடை மருத்துவத் துறைப் பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் மருந்தில்லா மருத்துவம் என்ற சிகிச்சை முறையில் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ரெய்கி, அக்குபஞ்சர், அக்குபிரஷர் ஆகிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பவர் இவர். சர்வதேச அளவில் புகழ்பெற்றவரான இவர் எழுதியிருக்கும் இந்நூல் மருந்தில்லா மருத்துவம். ரெய்கி சிகிச்சையின் அடிப்படை அம்சங்களை இந்நூலில் விளக்குகிறார். அத்துடன் தன்னிடம் […]

Read more

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்)

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்). ப. கலாநிதி, செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 80, விலை 70ரூ. பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயமா? இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கால்மாட்டில், விளக்கேற்றி வைத்து விட்டதால், ஆங்கில மருத்துவ முறைகள், அரியணையில் அமர்ந்துவிட்டன. பெரும்பாலான பிரசவங்கள், அறுவை சிகிச்சையில் முடிகின்றன. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமானதற்கு கூட்டுக்கு குடும்ப வாழ்வு சிதைந்ததும் ஒரு காரணம். இன்றைய நிலையில் மீண்டும், மரபு வழி மருத்துவ முறைகளின் […]

Read more

இந்த விநாடி

இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ. கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை […]

Read more

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்,

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும், இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் ச. சங்கர சரவணன், விகடன் பிரசுரம், விலை 195ரூ.‘ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., TNPSC முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும்வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. இந்தியாவை வெள்ளையர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆண்ட காலகட்டத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி.    —-   இறைவழி மருத்துவம், ஹெல்த்டைம் பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-310-5.html […]

Read more
1 17 18 19 20 21 32