சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 440, விலை 200ரூ. மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், 19ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். இவர் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், கலை, பெண்கள் முன்னேற்றம், பாமரர் முன்னேற்றம், மானிட முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், அரசியல் சிந்தனைகள், தேச முன்னேற்றம், விடுதலை வேட்கை, உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு… போன்ற உயர்ந்த சிறந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கொண்ட வேதாந்தி. […]

Read more

இந்திய விடுதலைப் போரில் சென்னை

இந்திய விடுதலைப் போரில் சென்னை, வி.சீ.கமலக்கண்ணன், விழிகள் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 200ரூ. சென்னை நகரில் நடந்த விடுதலைப் போர் நிகழ்வுகளே நூலின் மையப் பொருளாக இருந்தாலும், சென்னை மாநகர உருவாக்கம், சென்னையில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என நிறைய விஷயங்களை இந்நூல் பேசுகிறது. விடுதலைப் போராட்டத்தின் வீச்சு சென்னையில் வாழ்ந்த எல்லாத் தரப்பு மக்களையும் எந்த அளவுக்கு ஈர்த்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் வந்தேமாதரம் என்று […]

Read more

காமராஜ்

காமராஜ், டி.எஸ். சொக்கலிங்கம், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-2.html காமராஜ் டி.எஸ். சொக்கலிங்கம் இருவருமே இருதுறை ஆளுமைகள். இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். இருப்பினும்கூட, புத்தகத்தின் ஒரேயொரு இடத்தில், “நானும் சென்றிருந்தேன்” என்று கூறுவதைத் தவிர, வேறு எந்த இடத்திலும் தன்னைப் பற்றிப் பேசாததே டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பெருமை. தமிழ்நாட்டில் ஏன் நீதிக்கட்சி உருவானது என்பதையும், அரசியலில் பிராமணர் அல்லாதார் தலைமேயேற்கும் நிலையையும் முதல் அத்தியாயத்தில் விவரித்து, அதன் பிறகு காமராஜர் வரலாற்றை […]

Read more

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள்

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள், ஜெ.எச். செல்வராஜ், வெய்தல் வெளியீடு, நாகர்கோவில், விலை 85ரு. மகாகவி பாரதியின் சமகாலப் பண்டிதரும், இதழாளருமான மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன், செல்வராஜ் மிராந்தா, 80. அவர் தற்போது தூத்துக்குடியில் வாழ்ந்து வருகிறார். கடந்த 1900ம் ஆண்டில் இருந்து, 1950ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில், தூத்துக்குடியில் பரவர்கள் வாழ்க்கையின் முதன்மையான சமூகவியல் பொருளியல் கூறுகளை இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். சுவையான பாரதி ஆய்வாளர்கள் கூட அறிந்திராத ஒரு நிகழ்வு பற்றிய […]

Read more

அயல் பசி

அயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-7.html உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.   —- டாக்டர் உ.வே.சா. வாழ்க்கையும் தொண்டும், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. தமிழிலக்கியக் கருவூலங்களை, அரும்பாடுபட்டு, அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து நுணுகி ஆராய்ந்து அச்சேற்றிப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும், குறிப்பிடத்தக்க தொண்டுகளையும், முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்தளித்திருக்கிறார் […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, நிழல் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ் சினிமா உலகில் வரலாறு படைத்த சிறந்த நடிகர் டி.எஸ். பாலையா. தொடக்கத்தில் வில்லனாக நடித்து வந்த பாலையா, பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றார். அவ்வளவு ஏன்? சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் அவருக்கு ஜோடி பத்மினி. சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார் பாலையா. எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள பாலையா இளைய தலைமுறையுடனும் நடித்துள்ளார். 100 படங்களுக்கு […]

Read more

புதையல் ரகசியம்

புதையல் ரகசியம், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களும், ராணிகளும் தலைநகர் கெய்ரோவுக்கு 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்சார் என்ற இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்கள் மரணத்திற்குப் பிறகும் சொர்க்கத்தில் வாழ்வார்கள் என்று எண்ணி அவர்கள் உடலோடு விலை மதிப்பில்லாத புதையல்களும் புதைக்கப்பட்டன. இத்தகைய கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிப்பை தரும் பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இளம் வயதில் அரியணை ஏறிய மன்னர் டூடங்காமுன் […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-377-2.html வாழ்ந்த மண்ணில் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து, வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறிந்த இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கல்வியை பூங்கா என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுமையான கருத்துக்களுக்கும், நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குரு வணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக் கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more
1 62 63 64 65 66 104