தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, விலை 150ரூ. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைக் கூறும் நூல். சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் ஆகியோருடைய வாழ்க்கைக் குறிப்புகளும் உள்ளன. இளைய தலைமுறையினர், சுதந்திரப் போராட்டம் பற்றி சிறிதளவே அறிந்திருப்பார்கள். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் முழுமையாக அறிந்து கொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகம்.   —-   திருக்குறள் கூறும் […]

Read more

வானம் தொடு தூரம்தான்

வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன், கல்கி பதிப்பகம், 47 என்.பி.ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அரிய கலை. ஆனால் குழந்தைகளை வளர்ப்பதில் சென்ற தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சுட்டிகளாகவும் உள்ளனர். இக்கால குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதிர்காலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்குவது எப்படி என்பதை எல்லாம் இந்த நூலில் ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன் […]

Read more

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இரண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பதும், அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை, சொலவடையாக மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களோடு அடையாளப்படுத்தி இருக்கிறார். […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. பாரத நாட்டில் 1975 ஜுன் 25ந்தேதி நள்ளிரவு தொடங்கி 1977 மார்ச் 21ந்தேதி காலையில் முடிவடைந்த நெருக்கடிநிலையின் போது நடந்த போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நூல். நெருக்கடி நிலை அமுலாக்கப்பட்டது சுதந்திர பாரதத்தின் இருண்ட காலம். அடக்கு முறைக்கு எல்லையே இல்லாமல் இருந்து வந்த காலம் என்று வர்ணிக்கப்பட்டது. நாட்டில் புரட்சி பற்றி பேசியும், எழுதியும் வந்த கட்சிகள் இந்திரா காந்தியின் […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான சாலை, ராயப்பேட்டை, சென்னை 14,விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து 87 கவிஞர்கள் நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையில் படைத்த கண்ணீர்க் கவிதைகளின் தொகுப்பு நூல். பாலச்சந்திரன் தன் உயிரைக் கொடுத்து உலகின் பார்வையை தமிரீழத்தின் பக்கம் திருப்பியிருக்கிறான். அவர் மார்பைத் துளைத்த தோட்டாக்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்களைக் கொன்று குவித்த கொடுரத்தை உலகின் பார்வைக்குகொண்டு சென்றிருக்கிறது. அவனது ஒற்றை மரணம், ஒரு […]

Read more

சோழர் செப்பேடுகள்

சோழர் செப்பேடுகள், நடன. காசி நாதன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-8.html சோழப் பேரரசர்களான சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு அவரது மைந்தன் முதலாம் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்பேடு, அவரது மகன் முதலாம் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு, அவரது மகன்களில் ஒருவரான வீரராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பெயரனான முதலாம் குலோத்துங்கனின் சிறிய லெயிடன் செப்பேடு ஆகிய செப்பேடுகளின் தமிழ்ப் பகுதிகளின் மூலம் அடங்கிய நூல் இது. மேலும் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு மனிதராக, சீனாவிலிருந்து இந்தியா வந்து திரும்பியவர் யுவான் சுவாங். இவ்ர இந்தியா வந்தது, அத்தேடல் காரணமாகவும், பௌத்த தரிசனத்துக்காகவும், பௌத்தம் ஒரு மதமாக இந்தியாவை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் சமூகத்தின் அகமனதில் புத்தர் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் என்று முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. இந்தியா முழுவதும் பரவியிருந்த  பௌத்தத்தின் எச்சமே இப்போது நம்மிடையே […]

Read more

பிரபலங்களின் திருமண அனுபவங்களும் கருத்துக்களும்

பிரபலங்களின் திருமண அனுபவங்களும் கருத்துக்களும், பொன். முருகேசன், சஞ்சீவியார் பதிப்பகம், டி1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 11 கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15, விலை 150ரூ. பிரபலங்களே ஆனாலும் அவர்கள் பலரின் திருமண அனுபவங்கள் போராட்டம் நிறைந்தவைதான். சிலருக்கு காதலிக்கும் போதே எதிர்ப்பு. சிலருக்கோ காதல் கைகூடி திருமணம் வரை வந்தபின் எதிர்ப்பு. இந்த மாதிரியான தடங்கல்களை தாண்டி அவர்கள் எப்படி வெற்றிகரமாக தங்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்கள் என்பதை இந்த நூலில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். மேஜர் சுந்தர்ராஜன், வி.கே,ராமசாமி, தங்கர் […]

Read more

காஞ்சி

காஞ்சி, ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியர் அறிஞர்கள், மு. நஜ்மா, மு. கஸ்தூரி, அ.மோகனா, மு. காமாட்சி, பரிசல் புத்தக நிலையம், 96, ஜெ.பிளாக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி, அரும்பாக்கம், சென்னை 106, விலை 180ரூ. மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் தமிழ் மொழியில் மயங்கிய வரலாறு இது. இங்குள்ள மக்களை மனமாற்றமோ, மதமாற்றமோ செய்ய வேண்டுமானால் அவர்களது மொழியில் அதைச் செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து, தமிழுக்கான எழுத்துருக்களை உருவாக்குவது முதல் புத்தகங்கள் வெளியிடுவது வரை இந்தப் பாதிரியார்கள் இறங்கினர். ஏட்டுச்சுவடிகளாய் அழிந்து […]

Read more
1 93 94 95 96 97 104