தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ. பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —-   ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ. ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் […]

Read more

நெருப்புப் பொறிகள்

நெருப்புப் பொறிகள், அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள், பேராசிரியர் மு. நாகநாதன், கதிரொளி பதிப்பகம், விலை 150ரூ. ஆழமும் விரிவும் தமிழ்நாட்டில் வாழும் முக்கியமான பொருளாதாரம், மாநில சுயாட்சியில் அறிஞரான பேராசிரியர் நாகநாதனின் கருத்துக்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கன. திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கூட அவரது கருத்துகளில் துணிச்சலும் தனித்துவமும் இருக்கும். அவர் சிந்தனையாளன் இதழில் குட்டுவன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் பத்தியிலும் இந்த தனித்துவம் இருந்தது. இந்திய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், மதம், நீதித்துறை, சாதியம், மத்தியில் ஆளும் கட்சிகள் […]

Read more

விசும்பின் துளி

விசும்பின் துளி,  நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம்,  பக்.344, விலை ரூ.220. இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான நூலாசிரியரின் […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., நன்னூல் அகம், விலை 160ரூ. சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றிய ஏ. நடராஜன், எல்லோராலும் அன்புடன் “ஏ.என்.” என்று அழைக்கப்பட்டவர். எழுத்தாளர், இசை ஆர்வம் மிக்கவர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவர். அவரால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். நடராஜனின் சிறப்புகளை பல்வேறு கோணங்களில் பாராட்டியுள்ள பல வி.ஐ.பி.கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. ஏ. நடராஜனுடன் நெருங்கிப் பழகியவரான நல்லிகுப்புசாமி செட்டியார் இந்த நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை, துரை.குணசேகரன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.148. விலை ரூ.140. இலக்கியப் பணிகள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை), இலக்கணம் (தொல்காப்பியம்), யாப்பிலக்கணம்(யாப்பருங்கலக்காரிகை), அகப்புற நூல்கள் (கலித்தொகை, புறநானூறு), அறநூல்கள் (நான்மணிக்கடிகை, ஏலாதி), பதிப்புப் பணிகள் (ச.மெய்யப்பன்), வள்ளுவம் (மூன்று கட்டுரைகள்), ஐக்கூ (கவிதை) எனப் பல்வேறு துறைகளில் அமைந்த, பல்வேறு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட பன்னிரு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இலக்கியப் பணிகள், தொல்காப்பிய மொழிமரபு, கலித்தொகையின் கருத்தும் காட்சியும், வள்ளுவத்தில் காணப்படும் ‘உடைமை 39‘, பண்புகள், நான்மணிக்கடிகை […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. எத்தனை நிறங்களைப் பூசி இதை இந்திய தேசம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், நாட்டு நடப்புகள் அத்தனையும் இதை, ‘சாதி தேசம்’ என்றுதான் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கோயில் முதல் கொலைகள் வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, கிராமத்துப் பள்ளிகள் முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நடக்கும் சம்பவங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘சாதி தேசம்’ என்ற அடையாளத்தைத்தான். அதற்கான ‘எவிடென்ஸ்’தான், கதிர் எழுதியுள்ள இந்தப் புத்தகம். சிலரைப் […]

Read more

கண்ணோட்டம்

கண்ணோட்டம், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 160, விலை 120ரூ. பத்திரிகைகளில் வரும் மிக அரிதான செய்திகளையும், நம்மை கடந்துபோகும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதுவது ஜீவபாரதியின் தனித்தன்மை. அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வந்தே மாதரம் வந்த கதை, வேலுநாச்சியார் பற்றிய கட்டுரை, கோதையம்மாளுக்கு தியாகி பென்சன் கிடைக்க காரணமாக இருந்த கட்டுரை என்று அத்தனையும் பல்நோக்கு கொண்டு பயனளிப்பதாக உள்ளன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

படித்தாலே இனிக்கும்

படித்தாலே இனிக்கும், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள், நூல்களுக்கு வழங்கப்பட்ட அணிந்துரைகள், கலை. இலக்கியம், இசை, நாடகம் என்று பன்முக நோக்கில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், அருட்செல்வர், நா. மகாலிங்கம், பேராசிரியர் க. வெள்ளைவாரனார், ஏர்வாடியார் என்று பலரின் ஆளுமையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் நூல்களை தேடிப்பிடித்து படிக்க வைக்க உதவும் கட்டுரைகள் இவை. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

ஜெய்ஸ்ரீராம்

ஜெய்ஸ்ரீராம், மஞ்சுளா ரமேஷ், ஸ்ரீபப்ளிகேஷன்ஸ், பக். 664, விலை 600ரூ. ஞான ஆலயம், சினேகிதி ஆகிய மாத இதழ்களின் ஆசிரியரான இவர், குங்குமம், தினமலர், சாவி, மங்கையர் மலர் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். தவிர, இயல், இசை, நாடக மன்றம், திரைப்படத் தணிக்கைக் குழ, திரைப்படத் தேர்வுக்குழு, தொலைக்காட்சியின் தேர்வுக்குழு போன்ற அரசு சார்பான குழக்களிலும் செயலாற்றியதோடு, யோகக்கலையைப் பயின்று பலருக்கு யோகா பயிற்சிகளையும் கற்றுத் தருகிறார். இவர் இதற்கு முன் பாரத கண்டம் (பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நேபாளம், திபேத், பங்களாதேஷ், […]

Read more

சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா, தொகுப்பு நீலன், பேசா மொழி பதிப்பகம், விலை 170ரூ. பாட்டி கதைகளை தொலைத்துவிட்ட இன்றைக்கு, தும்பிகளைத் துரத்தும் குழந்தைகளைத் தொடுவானம் ஏந்திக் கொள்வது நல்ல சினிமாக்களாலும், புத்தகங்களாலும் சாத்தியம். பள்ளிப் புத்தகங்களில் கருக்கொள்ளும் மயிலிறகுகள் குட்டிகளை ஈனும் பால்யத்தில் நமக்கு அறிமுகமாகிற அம்புலிமாமா கதைகளில், நீண்டு கிடக்கும் அரண்மனைத் தெருக்களில், இரும்புக்கை மாயாவி பறந்து வரும் கனவுக்காடுகளில், 007 துப்பறியும் தங்கத் தீவுகளில், கெளபாய் சண்டை நடக்கும் மெக்ஸிகன் மலைப் பாதைகளில் மனம் மாய வண்டாகப் பறக்கிற அனுபவத்தை இன்றைய சிறுவர்கள் […]

Read more
1 74 75 76 77 78 88