பாலி முதல் மியன்மார் வரை

பாலி முதல் மியன்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக்.280, விலை ரூ.180. தமிழில் பயண இலக்கியத்தை சுவாரசியமான முறையில் எழுதுபவர்கள் குறைவு. பாலி முதல் மியன்மார் வரையிலான நூலாசிரியரின் பயண அனுபவங்கள் இந்நூலில் சுவையாகப் பதிவாகியிருக்கின்றன. பண்டைய காலத்திலேயே நமது பண்பாடு, மதம் கடல் கடந்து சென்ற நாடுகளில் பாலித்தீவு, தாய்லாந்து, பர்மா, கம்போடியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை. பாலித்தீவிலும், தாய்லாந்திலும் சாதிப் பிரிவுகள் உள்ளன; ஆனால் அங்கு சாதி மோதல்கள் இல்லை. கோயில்கள் அந்த நாடுகளில் இன்றும் பாரம்பரிய சின்னங்களாகப் பராமரிக்கப்படுதல், […]

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, பக்.373, விலை ரூ.350. ஈழப் போரின்போது இலங்கை அரசால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்நூல். மீள்குடியேற்றம் முழுமையாக நடந்துவிட்டது என்றும் தமிழர்களின் நிலம் திருப்பியளிக்கப்பட்டு விட்டது என்றும் இலங்கை அரசு கூறி வருவது முழுவதும் உண்மையில்லை என்பதை நேரடி அனுபவத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர். தாய் நிலத்தை இழந்துவிட்டு வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் வலிகளை உணர்த்தும் பதிவாக இந்நூல் உள்ளது. பிறந்த நாட்டுக்குள் […]

Read more

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள், மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவான் வரை, தொகுப்பும் பதிப்பும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தமிழில் மு.இரா.பெருமாள் முதலியார், அடையாளம், பக்.520, விலை ரூ.390. மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான நூலாசிரியர் தொகுத்தளித்திருக்கும் இந்நூல் தென்னிந்திய வரலாற்றில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது.இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் பலரின் குறிப்புகளை இப்போது படிக்கிறபோது, வியப்பு ஏற்படுகிறது. சிலநேரங்களில் அதிர்ச்சியும். உதாரணமாக, கி.பி.673 இல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த இட்சிங் அன்றைய கல்விமுறையை இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு இந்தியா வழிவழியாகக் கடைப்பிடிக்கும் முறைகள் […]

Read more

முத்துவைக் கேளுங்கள்

முத்துவைக் கேளுங்கள், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், பக்.152, விலை ரூ.150. நூலாசிரியர் கலந்து கொண்ட கூட்டங்களில் மாணவ, மாணவியர் எழுத்து மூலம் தொகுத்து அளித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், பல்வேறு நாளிதழ்களில், இதழ்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நூலாசிரியர் அளித்த பதில்கள், நூலாசிரியரின் நேர்காணல் அனைத்தும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. வானவியல் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமல்ல, அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் தொடர்பான பல கேள்விகளுக்கும், எளிமையாகவும், தெளிவாகவும் அறிவியலில் ஆர்வமற்றவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூலாசிரியர் பதில் அளித்துள்ளார். ‘ஏன் செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு […]

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சிரியாவில் பிறந்து வளர்ந்த சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச்சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஈரமுடைய எவர் மனசுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது. சொந்தநாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் […]

Read more

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், விலை 240ரூ. திருக்குர்ஆன் அறிவியல் சார்ந்த கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய கருவூலமாகத் திகழ்கிறது. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனில் உள்ள அறிவியல் சார்ந்த கருத்துக்களைத் திரட்டி அவற்றோடு இன்றைய அறிவியல்   சிந்தனைகளைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சகோதரர் முத்து மீரா லெப்பையின் மகள். இந்த நூலில் அவர் திருக்குர்ஆனின் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், இறைமறையும் […]

Read more

நேபாளமும் பண்டரிபுரமும்

நேபாளமும் பண்டரிபுரமும், வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 46ரூ. திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவை கேட்டவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ அவ்வளவு மகிழ்ச்சியை அவருடைய புத்தகங்களைப் படிப்பவர்களும் பெறுவார்கள். வாரியார் சுவாமிகள் நோபாளத்துக்கும், பண்டரிபுரத்துக்கும் சென்று வந்தது பற்றி அவர் எழுதிய புத்தகம் இது. படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, தாஜ்மகாலுக்கும் வாரியார் சென்று வந்திருக்கிறார். அதுபற்றியும் விவரித்திருக்கிறார். அரிய கருத்துக்கள் நிறைந்த சிறிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

திட்டங்களின் நாயகன் மோடி

திட்டங்களின் நாயகன் மோடி, மானோஸ், புத்த யோகா டிரஸ்ட், விலை 150ரூ. ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகி, அரசியலில் மெல்ல மெல்ல முன்னேறி குஜராத் முதல் மந்திரி ஆனார் நரேந்திர மோடி. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று பிரதமரானார். அது முதல் இந்த நாள் வரை அவர் அறிவித்த திட்டங்களையும் அதன் சிறப்புகளையும் இந்த நூலில் எழுத்தாளர் மனோஸ் விரிவாக எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கை ஏற்படுத்தும் திட்டமான ‘ஜன்தன் யோஜனா’, சிறுதொழில் முனைவோருக்கு கடன் […]

Read more

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும்

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும், அரிமா கே. மூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. மேடைப் பேச்சாளர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும்போது, இடையிடையே குட்டிக் கதைகள் சொன்னால்தான் கூட்டம் கலையாமல் இருக்கும். அத்தகைய குட்டிக்கதைகளுடன், சுவையான துணுக்குச் செய்திகளும் இதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள குட்டிக்கதைகளும், துணுக்குகளும் மொத்தம் 339. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விஷயங்கள். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், விலை 200ரூ. “டீன் ஏஜ்” பெண்களுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது அவர்களை தாய்மார்கள் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும், பெண்களுக்கான உடற்பயிற்சிகள் எவை, கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன… இப்படி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் அர்ச்சனா நடராஜன். பெண்களுக்கு அவசியமான அனைத்து விஷயங்களையும் ஒன்று திரட்டி, அவற்றை ஒரே புத்தகத்தில் அடக்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more
1 405 406 407 408 409 841