அப்துல்கலாம் பொன்மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- […]

Read more

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள்

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள், செங்குயில் பதிப்பகம், விலை 150ரூ. 1932ம் ஆண்டு காந்தியடிகளும் டாக்டர் அம்பேத்கருக்கும் உருவான ஒப்பந்தம், புனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவருக்கு தனித்தொகுதி அமைப்பதே, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம். இது குறித்து 30 கட்டுரைகளில் முருகு.ராசாங்கம் எளிமையான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள், கவிஞர் தஞ்சை க. பத்மா, ஜெய்ஹிந்த் பதிப்பகம், விலை 100ரூ. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மவை […]

Read more

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 33ரூ. கனவின் பலன்களைக் கூறுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். கனவில் கழுதையைக் கண்டால், கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் நீங்கும். யானையைக் கண்டால் அதிர்ஷ்டம். புலிகள், சிங்கங்கள், கரடிகள் முதலிய கொடிய மிருகங்களைக் கண்டால் பலவான்களுடன் விரோதம் ஏற்படும். சிட்டுக்குருவி, வாத்து ஆகியவற்றைக் கண்டால் நல்லது நடக்கும். இப்படி பல பலன்களை சொல்கிறார் வாரியார் சுவாமிகள். புராணங்களிலும் இலக்கியங்களிலும் கனவு கண்டவர்கள் பற்றியும், அவர்கள் கண்ட கனவுக்கான பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]

Read more

பிராஜக்ட்

பிராஜக்ட், ஜீவா புத்தக நிலையம், விலை 200ரூ. மர்ம நாவல் என்ற குறிப்புடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. நாவலை எழுதியவர் பெயர் கவா கம்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி, அணிந்துரையில் “திருக்குறள் பாராயணம்” அமைப்பின் தலைவர் புதேரி தானப்பன் கூறுகிறார்- “இந்த நூலின் ஆசிரியர் ‘கவாகம்ஸ்’ ஸா? இப்படியும் ஒரு பெயரா? இவர் ஆணா, பெண்ணா? நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்கள் நிரம்பி வழிகின்றன…” இவ்வாறு தானப்பன் கூறினாலும் நாவல் சிறப்பானது என்று பாராட்டவும் செய்திருக்கிறார். என்ஜீனியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர […]

Read more

மனப்பலகை

மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]

Read more

ஆபரேஷன் நோவா

ஆபரேஷன் நோவா, தமிழ் மகன், உயிர்மை பதிப்பகம், விலை 150ரூ. விஞ்ஞானப் பின்னணியில் பிரபல எழுத்தாளர் தமிழ் மகன் எழுதிய நாவல். பூமி இரண்டாகப் பிளந்து உருகி ஓடப் போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால், உலக மேம்பாட்டுக் குழுவினர் கூடி, இன்னொரு கோளில் மனிதர்களை குடியேற்றி, இயன்றவரை மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. வில்லன் ஒருவன் குறுக்கே வருகிறான். இப்படி விறுவிறுப்பாகச் செல்கிறது கதை. விஞ்ஞானத்தைப் பின்னணியாகக் கொண்ட சினிமாப்படங்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன. கற்பனைக்கும் […]

Read more

தாய்மை

தாய்மை, லக்ஷ்மி, சந்தியா, விலை 140ரூ. ‘லக்ஷ்மி’ என்ற புனை பெயரில் பல அற்புத நாவல்களைப் படைத்த திரிபுரசுந்தரி, ஒரு டாக்டர் ஆவார். தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்தார். அவர் எழுதிய “தாய்மை:பூப்படையும் நாள் முதல் பிள்ளைப் பேறு வரை” என்ற மருத்துவ நூல் இப்போது வெளிவந்துள்ளது. இளம் பருவத்தில் இருந்து வயோதிகம் வரை, ஒரு பெண்ணுக்கு தன் உடல் பற்றிய அறிவியல் உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை இந்த நூலில் விரிவாகக் கூறியுள்ளார், டாக்டர் திரிபுரசுந்தரி. பெண்கள் கையில் […]

Read more

வ.உ.சி. வாலேஸ்வரன்

வ.உ.சி. வாலேஸ்வரன், செ.திவான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், சென்னை, விலை 100ரூ. “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் மகன் பெயர் வாலேஸ்வரன். அவரைப் பற்றிய புத்தகம் இது. இவருக்கு வாலேஸ்வரன் என்ற பெயர் வந்தது எப்படித் தெரியுமா? சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்ட வ.உ.சிதம்பரனாருக்கு வெள்ளையர் ஆட்சி “இரட்டை ஆயுள் தண்டனை” விதித்தது. அத்துடன் அவர் பெற்ற வக்கீல் பட்டத்தை ரத்து செய்து, கோர்ட்டில் வழக்காட முடியாதபடி தடை விதித்தது. விடுதலையடைந்தபின், வ.உ.சி. வறுமையில் வாடினார். கோர்ட்டிற்கு சென்று வக்கீலாக வாதாடவும் முடியவில்லை. […]

Read more

ஏகாதிபத்திய பண்பாடு

ஏகாதிபத்திய பண்பாடு, ஜேம்ஸ் பெட்ராஸ், தமிழில் க. மாதவ், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூக மாற்றத்துக்கான குரல் அமெரிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புகளுக்கு ஆதரவானவர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு செயல்படும் எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர். சிலி, கிரீஸ், வெனிசுலா நாடுகளின் அரசாங்கங்களின் ஆலோசகராக இருந்தவர். 70க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். 30க்கும் மேலான மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியம் இந்தியாவையும் விழுங்கிகொண்டிருக்கும் நேரத்தில் ஜேம்ஸின் கருத்துகள் இந்தியாவில் சமூக மாற்றத்துக்காக போராடுபவர்களுக்கும் பயன்படும். -த. நீதிராஜன். […]

Read more
1 509 510 511 512 513 841