கடந்து போகிறவர்களின் திசைகள்

கடந்து போகிறவர்களின் திசைகள், ஆசு, இருவாட்சி, பக். 160, விலை 100ரூ. வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வாழ்க்கையை உணர்ந்து, சமூக அக்கறையுடன் எழுதும் கதைகளில்தான் உயிர்ப்பு இருக்கும். இப்படிப்பட்ட கதைகளை எழுதுவதற்கு வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் தேவை. நூலாசிரியருக்கு அத்தகைய அனுபவங்கள் இருப்பதை இந்நூலில் உள்ள சிறுகதைகளைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இந்நூலில் உள்ள சிறுகதைகளில் மிகவும் இயல்பாக, உயிர்ப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நாம் அன்றாடம் சந்திக்கும் பல மனிதர்களை […]

Read more

வரலாற்று நாயகர் முகம்மது நபி

வரலாற்று நாயகர் முகம்மது நபி, அ. முகம்மது ஜமால், பஷாரத் பப்ளிஷர்ஸ், விலை 220ரூ. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். உலக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் ஆன்மிகம், சமூக சீர்திருத்தம், நீதி மிக்க ஆட்சி ஆகிய மூன்று துறைகளிலும் வெற்றி பெறவில்லை. வாழ்நாளில் 23 ஆண்டுகளில் இந்தச் சாதனையை அவர்கள் நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று நாயகர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அ. முகம்மது ஜமால், எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் […]

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், விலை 100ரூ. மகாகவி பாரதியாரின் வரலாற்றை பலரும் எழுதியுள்ளனர். இது, பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதிய புத்தகம், எனவே தனிச்சிறப்பு வாய்ந்தது. “பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினdை முடிந்தது. அப்போது எனக்கு வயது ஏழு” என்று கூறும் செல்லம்மாள் பாதி, மதம் பிடித்த யானையால் பாரதியார் தாக்கப்பட்ட சம்பவத்தையும், அவர் மறைவையும் படிப்போர் கண்களில் நீர் வரும் விதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம். நீண்ட இடைவெளிக்குப் பின் […]

Read more

காலம்தோறும் நரசிங்கம்

காலம்தோறும் நரசிங்கம் – பண்பாட்டுக் கட்டுரைகள், ஜடாயு, தடம் பதிப்பகம், பக். 204, விலை 130ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025223.html பண்பாட்டுக் கட்டுரைகள் என்ற உபதலைப்புக்கு ஏற்ப, பாரத ஹிந்துப் பண்பாடு தொடர்பான விழுமியங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. வாழும் பிள்ளை என்ற தலைப்பிலான முதல் கட்டுரை, மகாகவி பாரதியின் விநாயக தரிசனத்தை விண்டுரைக்கிறது. அடுத்த கட்டுரை, அமெரிக்க எழுத்தாளர் மார்க் மார்ஃபோர்டு வியந்து போற்றும் அம்பலவாணனாகிய நடராஜர் பற்றியது. மகாத்மா […]

Read more

குமரி கண்டமா? சுமேரியமா?

குமரிகண்டமா? சுமேரியமா?, பா. பிரபாகரன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. தமிழகத்தை நிர்மாணித்த சுமேரியர்கள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788184937909.html பா. பிரபாகரன் எழுதிய ‘குமரி கண்டமா? சுமேரியமா?’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கோவையில், 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டில், இது தொடர்பாக அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் நீட்சியாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழர்கள் எழுதிய நூல்கள் மிகக் குறைவுதான் என, சமஸ்கிருதத்தை ஒப்பிட்டு சில தகவல்களை சொல்கின்றனர். ஆனால், தமிழர்கள் அதிகளவில் நூல்களை […]

Read more

உணவில் உறையும் வாழ்வியல் அறம்

உணவில் உறையும் வாழ்வியல் அறம், சாவித்திரி கண்ணன், மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உணவு தேர்வில் நிலவும் அறியாமை உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன. விவாதங்களும் துவங்கி உள்ளன. நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும்தான். அவற்றை கிட்டத்தட்ட இழந்த நிலையில்தான் தமிழகம் உள்ளது. இதை பெருகிவரும், நட்சத்திர அந்தஸ்திலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையை முன் வைத்தே நிரூபித்து […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஏழ்மையின் செல்வாக்கு! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024759.html பழமொழி என்ற சொல், சொலவடை என, புதுக்கப்பட்டது. நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது. நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற […]

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம் (ஒரு வரலாற்று கண்ணோட்டம்), ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 208, விலை 120ரூ. சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் மேடைகளில் எதிரொலித்த வந்தே மாதரம், மதச்சாயம் பூசப்பட்டு நிறுத்தப்பட்டது. ஆனாலும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரத்தின்’ தாக்கம், மற்ற மொழி கவிஞர்களிடம் கொஞ்சமும் குறையவில்லை. வந்தே மாதரத்தின் உள்வாங்கல், தமிழ் கவிஞர்களிடமும், திரை இசைப் பாடல்களிலும் இருப்பதை உணர முடியும். வந்தே மாதரத்தின் வரலாற்றை, சுதந்திர போராட்டத்தின், பின்னி பிணைந்துள்ள அதன் வரலாற்றை விளக்கியுள்ளார். சுதேச இயக்கத்திற்கு வலுகொடுத்த […]

Read more

சீதாவின் பதி

சீதாவின் பதி, யத்தனபூடி, சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 312, விலை 250ரூ. இல்லற வட்டத்திற்க வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லும் நாவல் இது. வித்யாபதி, இந்திரா ஆகியோர், ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். சூழ்நிலையால், பெற்றோர் நிச்சயித்த சீதாவை மணம்புரிகிறான் வித்யாபதி. ஆனால், வித்யாபதியால் இந்திராவை மறக்க முடியவில்லை. இந்திராவாலும் வித்யாபதியை மறக்க முடியவில்லை. சீதா, தான் கணவனின் முதல் காதலைப் பற்றி, திருமணம் ஆன அன்றே தெரிந்து […]

Read more

மாற்றம்

மாற்றம், மோ – யான், தமிழில் பயணி, காலச்சுவடு பதிப்பகம், பக். 87, விலை 80ரூ. மாற்றம் என்ற இந்தப் படைப்பு, நாவல் வடிவில் எழுதப்பட்ட சுயசரிதை, நாயகனின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் துவங்குகிறது கதை. நாயகன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கில் பயணித்து, எங்கெங்கோ அலைந்து, இலக்கியவாதியாகி, அவனுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, பிரபலமாகி கடைசி அத்தியாயத்தில் அதே கிராமத்துக்கு வந்து சேர்வதுடன், கதை முடிகிறது. நூலின் இடையிடையே பழமொழிகள், தத்துவங்கள் போகிறபோக்கில் இரைந்து கிடக்கின்றன. சீன வழக்குமொழி நடையில் எழுதப்பட்டிருப்பது சுவையாக […]

Read more
1 507 508 509 510 511 841