இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், பக். 160, விலை 125ரூ. பெண்களுக்கு மகுடம் சூட்டும் நூல்! சங்க காலத்தில், 45 பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில், காரைக்கால் அம்மையார், ஆண்டாளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கல்வி ஏன் மறுக்கப்பட்டது? இதை விரிவாக ஆய்வு செய்து, சாதனை செய்த ஒன்பது பெண்களின் சரித்திரத்தை அழகாகவும், ஆழமாகவும் இந்த நூலில் தந்துள்ளார் நூலாசிரியர், பாராட்டத்தக்கவர். அந்தண விதவைப் பெண்கள், ஆவுடையக்காள், துளசி அம்மாள், சுப்புலட்சுமி அம்மாள், லட்சுமி அம்மாள், செல்வம்மாள் போன்ற, 40க்கும் மேற்பட்ட கவிதாயினிகளை, கலங்கரை […]

Read more

கும்பகோணத்தில் உலா

கும்பகோணத்தில் உலா, வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன், யுனிவர்சல் பப்ளிஷிங், பக். 376,விலை 270ரூ. சோழ வளநாட்டின் சரித்திரத்தை குடந்தை நகருக்குச் சிறப்பான ஒரு பெரும் பங்குண்டு என்று கூறுவர். குடந்தையின் பெருமையை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார் போன்றோர் போற்றிப் பாடியுள்ளனர். மகாமகக் குளத்தின் சிறப்பு, திருக்கோயில்களின் சிறப்பு போன்றவற்றைக் கல்வெட்டுச் சான்றுகளுடனும், தேவாரப் பாடல்களுடனும் புராணக் குறிப்புகளுடனும் தந்திருப்பது சிறப்பு. குடந்தை மட்டுமின்றி, குடந்தையைச் சுற்றியுள்ள திருவலஞ்சுழி, சுவாமிமலை, பட்டீஸ்வரம், திருபுவனம், திரவிடைமருதூர் முதலிய ஊர்களில் உள்ள […]

Read more

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம்

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம், குருமலை சுந்தரம் பிள்ளை, பதிப்பாசிரியர் செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 124, விலை 90ரூ. புதிய விழிப்பின் ஆதின கர்த்தர்களில் ஒருவர் என்று பாரதியால் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஒரே நேரத்தில் அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என பல நிலைகளில் செயல்பட்ட முன்னோடி. சமூக சீர்திருத்தத்தை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, நடைமுறை வாழவிலும் கடைப்பிடித்தவர். மூத்த மகள் தம் பன்னிரண்டாவது வயதில் கணவனையிழக்க அதே ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு அவர் மறுமணம் செய்து […]

Read more

சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்

சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர் பா. வீரமணி, சாகித்திய அகாதெமி, பக். 288, விலை 155ரூ. வழக்கறிஞர், தொழிற்சங்கவாதி, பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர், பொதுவுடைமைச் சிந்தனை உடைய போராளி எனப் பன்முகத்தன்மை கொண்ட சிங்காரவேலர், குடி அரசு, புதுவை முரசு, புரட்சி, புதுஉலகம் முதலிய இதழ்களில் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட 43 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எனினும் குடி அரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் அதிக அளவில் தொகுக்கப்பட்டு உள்ளன. கடவுள், மதநம்பிக்கை, சாதிப்பற்று, பய சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, அறிவியல் அடிப்படையிலான கருத்துகளை […]

Read more

விளம்பர வீதி

விளம்பர வீதி, ந. அருள், கௌதம் பதிப்பகம், பக். 88, விலை 45ரூ. நூலாசிரியர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதுடன் நியூசிலாந்து, லண்டனில் விளம்பர வகைப்பாடுகள் மற்றும் விளம்பர உத்திகள் குறித்து பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் நூல் முழுவதும் தெரிகிறது. கல்வெட்டுகள், மரசறைதல், தண்டோராபோடுதல் போன்ற விளம்பரங்கள், கால மாற்றத்துக்கு ஏற்ப சுவரொட்டி, விளம்பரத்தட்டி, பதாகைகள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்கள் என விரிவாக்கம் பெற்று வளர்ந்ததை தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன்முதலாக 1878இல் விளம்பரம் இடம்பெற்றது என்பன போன்ற […]

Read more

ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள், (சரித்திர நாவல்), நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. தென்னாட்டின் ஒரே பெண்ணரசியாக, வீரதீர பெண்மணியாக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்து இன்றளவும் மக்கள் மனதில் அபிமானத்தைப் பிடித்திருப்பவர் ராணி மங்கம்மாள். கணவனை இழந்த பிறகு தன் திறமையாலும், புத்திசாதுர்யத்தாலும் பதினெட்டு ஆண்டு காலம் சிறப்பாக மதுரையை ஆண்ட அவருயை தீரத்தை அழகாக எடுத்துரைக்கிறது ‘ராணி மங்கம்மாள்’ வரலாற்று நாவல். மேலும் ராணி மங்கம்மாள் செய்த தான தருமங்களையும் எடுத்துரைக்கிறது. மறவர் நாட்டு மன்னர் கிழவன் […]

Read more

அணுத்துகள்

அணுத்துகள், க. மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 196, விலை 160ரூ. அறிவியலை மிக எளிமையாக எழுத முடியும் என்பதற்கு இந்நூலே சான்று. உலகின் எல்லாப் பொருட்களுக்கும் அடிப்படையான அணுவைப் பற்றி மிக விரிவாக இந்நூல் கூறுகிறது. அணுவோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் எளிமையாக, சுவையாக நூல் விளக்குகிறது. உதாரணமாக ‘ரயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும்போது நிற்காமல் படுவேகத்தில் கடந்து செல்லும் ரயிலின் சங்கொலி படிப்படியாகச் சுருதி குறைந்து கீழ் ஸ்தாயிக்கு நகர்வதை ஒலியியலில் டாப்ளர் விளைவு என்பார்கள். ‘விசைத்துகள்களை தாதுத் […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் பயன்பாட்டுக்கு வரும்போது பழைய பொருட்களில் பல காணாமற் போய்விடுகின்றன. எவ்வளவுதான் வாழ்க்கை மாறி வந்தாலும் சில பண்பாட்டு வழிமுறைகள் தொடர்ந்து வருகின்றன. சிறு தெய்வ வழிபாடு, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு, கண்ணேறு கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் இன்றைய வாழவிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழர்களின் அன்றாட வாழ்வில் புழங்கிய பொருட்கள், […]

Read more

உருள் பெருந்தேர்

உருள் பெருந்தேர், கலாப்ரியா, விகடன் பிரசுரம், பக். 262, விலை 130ரூ. படைப்பாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நாமும் உணர்வது நமக்கு புது அனுபவத்தைக் கொடுக்கிறது. நூலாசிரியர் கலாப்ரியா தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் சுவாரஸ்யங்களையும் மிகவும் ஆழமாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார். தனது இளமைப் பருவத்தை வாசகர்களின் நெஞ்சில் பதிய வைத்துச் செல்லும் வரிகள் ஏராளம். தன் பதின் பருவத்தைச் சொல்லிச் செல்லும்போதுதான் வாழ்க்கை முறை குறித்தும், சமூகத்தின் வரலாறு குறித்தும் அழகாக எடுத்துரைத்துள்ளார். கலாப்ரியாவின் […]

Read more

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில், மாலன், சாகித்ய அகாதெமி, பக். 176, விலை 110ரூ. புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்டுச் சென்று இனிமையான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. புதிய சூழலில் எழுதும் எழுத்தாளர்களின் கதைக்கரு, சிறுகதை கட்டமைப்பு, சொற்றொடர்கள் புதியனவாக இருக்கின்றன. ‘இரண்டு வால் கிடைத்த […]

Read more
1 506 507 508 509 510 841