இசையில் நனையும் இறைவன்

இசையில் நனையும் இறைவன், டாக்டர் பாரதி மாடசாமி, சபரீஷ் பாரதி வெளியீடு, சென்னை, பக். 144, விலை 100ரூ. சிலப்பதிகாரத்தில் இசை வழிபாடு, ஆழ்வார்கள் வளர்த்த இசை வழிபாடு, பக்தி இயக்க வரலாறு, திருவிளக்கு வழிபாட்டில் பஜனை, இக்காலப் பஜனை ஒலி நாடாக்களில் பஜனை, என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளில் இசையால் எப்படி இறைவனை வழிபடுகின்றனர் என்பதை, ஆசிரியர் அழகுறச் சொல்லிச் செல்கிறார். இசை இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 18/5/2014.   —- ஸந்தேக நிவாரணி பாகம் 7, ராஜகோபால கனபாடிகள், […]

Read more

கொதிக்குதே கொதிக்குதே

கொதிக்குதே கொதிக்குதே, (புவி வெப்பமடைதலும் நாமும்), ஆதி வள்ளியப்பன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-0.html இயற்கையின் சதிக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு இருப்பதுதான் இன்றைய வாழ்க்கை. மழைக் காலத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயில் காலத்தில் மேகம் கருக்கிறது. கரைபுரண்டு ஓடிய காவிரி வறண்டுகிடக்கிறது. மலைப் பகுதிகள் தங்களது ஈரப்பதத்தை இழந்துகிடக்கின்றன. காலைக் காற்றையும் காணோம். மாலைத் தென்றலையும் காணோம். இரவின் குளுமையும் பறந்துவிட்டது. இதுதான் இயற்கையின் சதி என்றால், ஏன் சதி […]

Read more

ஜென்னல்

ஜென்னல், சத்குரு, எழுத்தாக்கம் சுபா, தங்கத் தாமரை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. ஸெங்காய் என்னும் ஜென் குருவிடம் குடும்பத்தோடு போய் ஆசி வேண்டினான் ஓர் அரசன். உன் தந்தை இறப்பார், நீ இறப்பாய், உன் மகன் இறப்பான், உன் பேரக்குழந்தை இறக்கும் என்று ஆசி வழங்கினாராம் அந்த ஞானி. மனம் நொந்துபோன அரசன் நல்ல வார்த்தையாகச் சொல்லக் கூடாதா? என்று கேட்டபோது, இதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்? என்று வேறு அவர் கேட்டாராம். இந்த ஜென் கதையை […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா வெளியீடு, சென்னை, பக். 172, விலை 180ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html இமையத்தின் கதையுலகம் தரும் வாழ்வின் சித்திரங்கள் இமையம் என்னும் கலைஞனின் இருப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன. இமையத்தின் கவிதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது என்பது அவரது படைப்புகளின் மதிப்பைக் கூட்டுகின்றன. அனுபவங்கள் கலை நோக்குடனும் செய்நேர்த்தியுடனும் மறுஆக்கம் செய்யப்படும்போது நிகழும் மாயம் இது. வஞ்சிக்கப்பட்டதன் ஆத்திரமும் பழிவாங்கும் வன்மமும் மனித மனங்களை ஆக்கிரமித்துக் […]

Read more

நக்சல்பாரி முன்பும் பின்பும்

நக்சல்பாரி முன்பும் பின்பும், சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர் 15, விலை 350ரூ. இந்திய அரசியல் நகர்வில் இறுதியாக நடந்த அரசியல் எழுச்சி நக்சல்பாரி புரட்சி. ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் மக்கள் அடைவதற்கு மார்க்சியமும் லெனினியமும்தான் சரியான பாதை என்பதை உணர்ந்தது, அந்த எழுச்சிக்குப் பிறகுதான். இமயமலையின் அடிவாரத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றிய விவசாயிகளின் எழுச்சி, பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் அசைத்துப் பார்த்தது. இந்தியா அப்படியே தலைகீழாக மாறிப் போய்விடவில்லைதான். […]

Read more

உச்சிமுகர்

உச்சிமுகர், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்கள், விழியன், புக்ஸ் பார் சில்ட்ரன் வெளியீடு, பாரதி புத்தகாலயம், சென்னை. குழந்தைகளுக்காக கதைகள் எழுதிவரும் விழியன் தன் குட்டி மகளுடன் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதியிருப்பதே உச்சி முகர் என்ற இந்நூல். குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை எழுத்தின் மூலம் அவர் வாழ்ந்து பார்க்கிறார். இதை வாசிக்கும் ஒவ்வொரு தகப்பனும் தாயும் தங்கள் குழந்தைகளுடனான மெல்லிய தருணங்களை நினைவுகூர்வார்கள் என்பதே இதன் வெற்றி. தந்தை விழியனுக்கும் குழந்தை குழலிக்கும் இடையிலான தருணங்கள்தான் எத்தனை அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. குழலி […]

Read more

கவிதைகளின் கால்தடங்கள்

கவிதைகளின் கால்தடங்கள், அகநாழிகை பதிப்பகம், சென்னை. தமிழின் முக்கியமான 50 கவிஞர்களின் 400 கவிதைகளை ஒரே நூலில் காணும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன். அந்திமழை இணையதளத்தில் வாரந்தோறும் வெளியான தொடர் இப்போது அகநாழிகை பதிப்பகம் மூலமாக நூல் வடிவம் பெற்றுள்ளது. நீண்டகால கவிதை வாசகர் ஒருவரின் நோக்கில் இந்த கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் படித்த கவிதைகளைத் தாண்டி சுதந்திரமாக எழுதப்படும் நவீன புதுக்கவிதை உலகுக்கு ஓர் இளைஞன் வருவது தற்செயலாக நிகழ்வது என்பதைவிட ஒரு வழிகாட்டியின் மூலமாகவே […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி, சென்னை, விலை 270ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-201-0.html பெற்றெடுத்த பிள்ளைகளில் இருவரைக் களத்தில் பலிகொடுத்துவிட்டு, பேரப்பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அடிக்கடி இடம்பெயர்ந்து, கடைசியில் அயல்மண்ணில் மனம் கூசி நிற்கும் அறுபதைக் கடந்த ஓர் அம்மாவின் கதையைச் சொல்கிறார் தமிழ்க் கவி. குழந்தைகளை மட்டும் தூக்கிக் கொண்டு முதியவர்களையும், ஆடு, மாடுகளையும் அப்படியே கைவிட்டுச் செல்ல நேரும் துயரம். உணவுப் பொருட்களையும், எரிபொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல். கைகால்களை நீட்டிப் […]

Read more

கடலில் வசிக்கும் பறவை

கடலில் வசிக்கும் பறவை, நிலாரசிகன், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டிணம் 635 112, விலை 60ரூ. யதார்த்தமும் மிகுபுனைவும் நிலா ரசிகன் நிலாவை மட்டும் ரசிப்பவர் அல்ல. பிரபஞ்சம் மொத்தத்தையும் மொழியில் ரசிக்க எத்தனிக்கிறார். 90களுக்குப் பிறகு தேவதைக் கதைகளாகவும், உருவக் கதைகளாகவும் கவிதைகளில் எழுதிப் பார்க்கும் போக்கு வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நிலா ரசிகனின் கவிதைகளைச் சொல்லலாம். கடலில் சிக்கும் பறவை தொகுப்பில் நிலா, எண்ணற்ற குட்டிக்கதைகளை உருவாக்குகிறார். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் நவீனக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் தனது […]

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், சென்னை, விலை 120ரூ. மந்திரச் சிமிழில் வெளிப்பட்ட கனல் ஓர் எழுத்தாளர் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிவுசெய்வது அரசியல் அறம் சார்ந்த சிறப்பம்சம். அது எழுத்தாளரைக் கூர்மைப்படுத்தும் ஓர் அறமும் ஆகும். அதே சமயம் அரசியல் ஆதாரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு இது ஒரு கெட்ட கனவு. இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அர்ஷியா அந்த பாவனைகளைக் களைந்து தன்னைப் பாதிக்கும் பல […]

Read more
1 680 681 682 683 684 841