பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. 1820களில் அடிமைகளாக இலங்கைக்குச் சென்ற மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு சொல்கிறது. வாய்மொழிப் பாடல்கள் மூலம் அவர்களின் துயரங்களையும் இழப்புகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. -தொகுப்பு: கவின்மலர், கௌரி. நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   ஆ. பத்மநாபன் – ஆளுமையின் அரிய பரிமாணம், பசுபதி தனராஜ், தாய்த்தமிழ் பதிப்பகம், 1/4, துளசி அடுக்ககம், 7ஆவது […]

Read more

புனையா ஓவியம்

புனையா ஓவியம், அநன், காவ்யா, சென்னை 24, பக். 210, விலை 180ரூ. சங்கத் தமிழ் நூல்கள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது இந்நூல். மடல், மன்றல், காஞ்சி, நடுகல், வையை, யானைக்கொடி, மருதம், பாலை, கோ, உணவு, உடை, புனையா ஓவியம், வி, நீர் மேல் எழுந்த நெருப்பு, அகத்தில் வரலாறு என சின்னச் சின்னத் தலைப்புகளிலான 15 கட்டுரைகளின் அணிவகுப்பு. அழகிய தொகுப்பு. தலைப்புகளில்தான் சொற்சிக்கனம். ஆனால் கட்டுரைகள் விரிவாகவும், ஆழமாகவும், […]

Read more

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கேவை 45, பக், 322, விலை 275ரூ. புத்தகம் எழுதுவது முதல் தொகுத்தல் அச்சிடுதல், பதிப்புரிமை பெறுதல், காப்புரிமை பெறுதல், வாசகர்களிடம் புத்தகத்தை அறிமுகம் செய்தல், இணைய புத்தகம் உருவாக்குதல் என அறிமுக எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தாளர்களுக்குவரை அரிய தகவல்களை அள்ளித் தரும் வித்தியாசமான நூல் இது. இந்தப் புத்தகத்தை படித்தால் புத்தகம் எழுதும் ஆசை நிச்சயம் தூண்டிவிடும். புத்தகம் தோன்றிய வரலாறு, […]

Read more

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-6.html சத்தமே இல்லாமல் சாதனை படைக்கச் சிலரால்தான் முடியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செ.திவான். மறைக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தோண்டி எடுத்துவந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றிய ஒரு சிலரில் திவான் குறிப்பிடத்தக்கவர். முஸ்லிம் மன்னர்கள் என்றாலே… கொள்ளையடிக்க வந்தவர்கள், இந்துக்களுக்கு வரி விதித்தவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள்-என்பதே வரலாறாக திணிக்கப்பட்ட சூழ்நிலையில், அவர்களின் இன்னொரு பாகத்தைக் காட்டியவர் திவான். […]

Read more

கடைசிக்கோடு

கடைசிக்கோடு, இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை, ரமணன், கவிதா வெளியீடு, விலை 80ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-187-6.html பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம் நில அளவைத்துறை என்கிறார்கள் இன்றைக்கு சங்கிலிப் பிடித்து நூறு நூறு அடியாக இந்தத் தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வே துறையில் பிள்ளையார் சுழியிட்ட இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள். 1802ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரினா கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் […]

Read more

தேவாரத்தில் தொன்மம்

தேவாரத்தில் தொன்மம், முனைவர் வே. சேதுராமன், சேது பதிப்பகம், சிந்தாமணி இல்லம், 27, விஸ்வநாதன் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, விலை ரூ1350 (நான்கு பாகங்கள்). கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரான இந்நூலாசிரியர், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். இவர் தேவாரத்தில் காணப்படும் தொன்மம் குறித்து, பல ஆண்டுகள் திறனாய்வு செய்து, நான்கு பாகங்களாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பாகமும் சுமார் 400 பக்கங்களுக்கு மேலுள்ள தனித்தனி நூல்களாகும். இந்நூலின் ஆரம்பத்திலேயே தொன்மத்திற்கும், புராணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறும் ஆசிரியர், […]

Read more

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல், பேரா. குருசண்முகநாதன், சங்கீதா, பக். 202, விலை 120ரூ. 8903678644. தொல்காப்பியம் பற்றிப் பலரும் அறிவர. தமிழின் தொன்மையான இலக்கண நூல் அது.  நாட்டுப்புறவியல் என்பதும் பலரும் அறிந்ததே. ஆனால் இது, நாட்டுப்புலவியல், புதுமையான சொல்லாக்கம். நாட்டுப்புறவியல் என்பது குறையுடைய சொல்லாட்சி என்றும், தொல்காப்பிய வழியில் ஆராய்ந்து புதிதாக இந்தப் புலவியல் ஆக்கப்பட்டது என்றும் ஆசிரியர் எழுதியுள்ளார். புலம் என்னும் சொல், இடத்தை நிலத்தை, ஊரைக் குறிக்கும் சொல். ஆதலின் புறம் என்பதனிலும் புலம் என்பது சரியாகப்படுகிறது. நாட்டார் பாடல் […]

Read more

கலங்கிய நதி

கலங்கிய நதி, பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், பக். 334, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-2.html தமிழிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச்சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் பி.ஏ.கிருஷ்ணன் முதல் நாவல் புலி நகக் கொன்றை. இந்த நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998ல் வெளிவந்தது. அதன்பின் கலங்கிய நதி கிருஷ்ணணின் இரண்டாம் புதினம். இதையும் முதலில் தி மட்டி ரீவர் என்று ஆங்கிலித்தில் எழுதினார். அவரே இதைத் […]

Read more

இவர்கள் நோக்கில் கம்பன்

இவர்கள் நோக்கில் கம்பன், சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக். 352, விலை 200ரூ. மதுரை கம்பன் கழகம், 2012ல் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவுகளின் சாரம் இந்நூல். கம்பனும் திருமூலரும் (சொ.சொ.மீ. சுந்தரம்), கம்பனில் காலமும் கணக்கும் (தெ. ஞானசுந்தரம்), கம்பனும் வில்லியும் (ம.பெ. சீனிவாசன்), கம்ப ராமாயணமும் நாலடியாரும் (இளசை சுந்தரம்), கம்பனில் அங்கதன் (கு. ராமமூர்த்தி), கம்பனும் பைபிளும் (எஸ். ராஜா), கம்பனும் உரையாசிரியர்களும் (மு. அருணகிரி), கம்பரும் கிறிஸ்தவக் கம்பரும் […]

Read more

108 திவ்ய தேசம் திருயாத்திரை

108 திவ்ய தேசம் திருயாத்திரை, சூலூர் கலைப்பித்தன், கலைப்பித்தன் இலக்கிய, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, 33, பழனியப்பத் தேவர் சந்து, சூலூர் அஞ்சல், கோயமுத்தூர் 641402, விலை 300ரூ. இந்தியாவில் உள்ள 108 திவ்ய தேசங்கள் பற்றிய அருமையான குறிப்புகளுடன் இந்த கோவில்கள் அமைந்து இருக்கும் ஒவ்வொரு ஊருக்கும் எப்படி செல்வது? எங்கே தங்குவது? போன்ற பயனுள்ள குறிப்புகளையும் தாங்கி இருக்கும் இந்த புத்தகம் 108 திவ்ய தேச யாத்திரை செல்ல முடியாதவர்களுக்கும், செல்ல விரும்புகிறவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 729 730 731 732 733 841