ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழில் மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 270, விலை 180ரூ. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழர்களின் தொன்மையை நிலை நிறுத்துவது, போலவே நூலாசிரியர்கள் முயற்சி அமைந்திருப்பதைப் பாராட்டலாம். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என தமிழில் பாட்டி கால கதைகளை ஞாபகமூட்டும் வகையில் நூலின் முதல் கதையான கடவுளை நோக்கி ஒரு பயணம் அமைந்துள்ளது. பெரியதும், சிறியதுமான 94 […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ம் முதன்மைச்சாலை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ, சென்னை 68, விலை 200ரூ. 150 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் முஹம்மது நபி குறித்து, இங்கிலாந்தில் வரலாற்று ஆசிரியரும், ஆங்கில அறிஞருமான தாமஸ் கார்லைல் பேசிய பேச்சுக்கள் அடங்கிய ஆங்கிலநூல், அழகிய எளிய தமிழில், படிப்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உபயோகமான குறிப்புகளோடு தூது வந்த வீரர் என்ற மிகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. இதில் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற தலைப்பில் […]

Read more

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண்

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, பக். 224, விலை 175ரூ. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்பு நிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட பெண் பாத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை விளக்கியிருப்பதோடு, தொடர்புடைய கதைகளில் இருந்து ஓரிரு […]

Read more

முதல் விடுதலைப்போர் 1800-1801

முதல் விடுதலைப்போர் 1800-1801, டாக்டர் கே. ராஜய்யன், ஜெகமதி கல்வி அறக்கட்டளை வெளியீடு, விலை 500ரூ. வெள்ளையர்களே போற்றிய விடுதலை வீரர்கள் அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய முதல் போராட்டம் எது? 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்று வழங்கப்படும் போராட்டத்தையே அப்படி அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிரத்துப் போராடி 1799இல் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கூட்டத்தார், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1801இல் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட 543க்கும் மேற்பட்ட மருதுபாண்டியர் அணியினர் என்று தமிழ்நாட்டு […]

Read more

பாரதத்தின் விஸ்வரூபம்

பாரதத்தின் விஸ்வரூபம், ஐ. மாயாண்டி பாரதி, பாரதி பதிப்பகம், பாரதமாதா இல்லம், 13/10ஏ, சுப்பராயர் அக்ரஹாரம், காக்கா தோப்பு, மேலமாசி வீதி, மதுரை, விலை 100ரூ. தியாகத்தை நேரில் பார்க்க வேண்டுமா? வாழும் வரலாறாக மதுரையில் வசித்துக் கொண்டிருக்கிறார் ஐ.மாயாண்டி பாராதி. பழகிய தோழர்கள் அனைவருக்கும் அவர் ஐ.மா.பா. இந்திய விடுதலை வேள்விக்கு விறகு சுமந்த ஐ.மா.பா. அதனை தனது பெரும் சாகசமாகக் கருதாமல், தனது கடமையாக நினைத்துச் செயல்பட்ட நினைவுகளுடன் 97 வயதைத் தாண்டி வாழ்ந்து வருகிறார். 15 வயதில் பட்டாளத்தில் சேராதே, […]

Read more

வேதமும் பண்பாடும்

வேதமும் பண்பாடும், ஸ்ரீசர்மா சாஸ்திரிகள், ஆர் மீடியா, 37/55, சிவில் ஏவியேஷன் காலனி, நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. தொன்மை வாய்ந்த ஹிந்து மதத்திற்கு சனாதன தர்மம் என்றும் ஒரு பெயர் உண்டு. இதன் நெறிமுறைகள், வைதீக கர்மாக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் வேதங்களும், வேதாந்தங்களும் அடக்கம். அவை தனிநபர் மற்றும் உலக நலன்கள் அனைத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டவை. இத்தகைய சனாதன தர்மத்தின் சிறப்பு, வைதீக நுணுக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், கலாசாரங்களைப் பற்றிய விளக்கங்களை இந்நூலாசிரியர், தமிழில் பல […]

Read more

சர்க்கரை மனிதர்கள்

சர்க்கரை மனிதர்கள், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், பிறருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் இருப்பார்கள். எல்லோருக்கும் பத்திரிகைச் செய்திகளை படித்துச் சொல்வதுடன், பிழையின்றி செய்திகளைப் படிக்கும் சிறவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும், பேப்பர் பெருசு, எதிர்பாராமல் பிரச்சினைகளில் சிக்குவோருக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவும் சிறுவாட்டு லட்சுமி. இப்படி பெரிய மனம் படைத்த எளிய மனிதர்களை கண்டுபிடித்து சந்தித்திருக்கிறீர்களா?என்ற தலைப்புடன் […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.சு. இளங்கோ, இசையமுது பதிப்பகம், பி3, சுங்கவரி அலுவலர் குடியிருப்பு, 75, தேவாலய முதன்மைச் சாலை, பெருங்குடி, சென்னை 96, பக். 488, விலை 180ரூ. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததைப்போல பாரதி வழித்தடத்தில் பாரதிதாசன் தோன்றினார் என்ற நூலாசிரியரின் முன்னுரையே நூலுக்கு ஒரு கம்பீரம் தருகிறது. பாரதிதாசனின் திரைத்தமிழ் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. அவர் எழுதிய ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்களை வைத்து ஆய்வு செய்துள்ளார் […]

Read more

தரிசனம்

தரிசனம், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 88, விலை 75ரூ. மலைமேல் பயணம் செய்ய வேண்டும். பயணத்தை எங்கிருந்து தொடங்குவது சிஷ்யன் கேட்டான். ஞானி சொன்னால் மலை உச்சியிலிருந்து தொடங்கு என்று. பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, இந்நேரம் நீ மலை உச்சியில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் ஞானிகளின் எண்ண தரிசனம். ஆழ்மனத்திற்குள் புதைந்திருக்கும் அந்த அனுபூதி தன்மையை தரிசிக்க முடிந்தவர்களுக்கு இது எளிது என்கிறார்கள் ஞானிகள். இறையன்பும் அப்படித்தான் பேரண்டத்தைக் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி4, குருவைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 600117, பக். 266, விலை 180ரூ. உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமான சீனப் பயணி யுவான் சுவாங்கின் இந்திய பயணம்தான், அசோகன் நாகமுத்துவின் இந்த நாவல். நாட்டைவிட்டு இன்னொரு […]

Read more
1 744 745 746 747 748 841