தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், விலை 360ரூ. பண்டைய தமிழ் நூல்களில் கொட்டிக்கிடக்கின்ற தாவரத் தொடர்புடையத் தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூல். நிலத்திணைகளின் பெயராக இடம் பெற்ற தாவரங்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) போர் முறை, போர் நிகழ்வு மற்றம் போர் வீரர்களுக்கு அடையாளமாக பயன்படுத்தும் தாவரங்கள் (வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி) மருந்தாக பயன்படுத்தும் வேம்பு, […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-4.html ஷாஜஹானின் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் அந்தப்புரத்தின் தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் இரண்டு இளவரசிகளின் போராட்டம் பற்றிய 17ஆம் நூற்றாண்டின் வரலாற்று புதினம். சக்கரவர்த்தி ஷாஜஹான், தன் காதல் மனைவி மும்தாஜின் நினைவாக நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சமாதியின் (தாஜ்மகால்) பின்னணியில், சக்கரவர்த்தியின் புதல்விகள் ஜஹனாராவும், ரோஷனாராவும் எல்லாவற்றிற்கும் போட்டியிடுகின்றனர். அந்தப்புரத்தின் ஆட்சி, சாம்ராஜ்யத்தின் எதிர்காலம், […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கையில் பிறந்த தனிநாயகம் அடிகளார், நெல்லை மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தபோது, தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு, 1941ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயின்றார். தமிழின் சிறப்பை நன்கறிந்த அவர், தமிழில் சிறந்த நூல்கள் பலவற்றை எழுதினார். மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி புகழ் பெற்றார். அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற […]

Read more

எதற்குள்ளும் எதுவும் இல்லை

எதற்குள்ளும் எதுவும் இல்லை, மேனகா பதிப்பகம், 375/23, கங்கா காவிரி குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ. அற்புதமான கருத்துக்களோடு 76 தலைப்புகளில் கவிதைகளை படைத்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் ம.இரவிபாரதி. இவரது கவிதைகள் இன்றைய சமூக சூழலை பாடங்களாக மனதில் பதியவைக்கின்றன. இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தாலும் சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார் என்பது இந்த நூலை படைத்திருக்கும் முறையில் தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 11/9/2013.   —-   ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை […]

Read more

நமது சினிமா (1912-2012)

நமது சினிமா (1912-2012), கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-8.html இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமா படம் ராஜா ஹரிச்சநதிரா இந்திய சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் பால்கே, 1913ம் ஆண்டில் இதைத் தயாரித்தார். எனவே இந்தியாவில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நமது சினிமா (1912-2012) என்ற இந்தப் புத்தகத்தை சிவன் சிறந்த முறையில் எழுதியுள்ளார். […]

Read more

தரிசனம்

தரிசனம், குமுதம் பு(து)த்தகம், 308, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-1.html தரிசனம் என்ற பெயரை கேட்டவுடனேயே, ஏதோ இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு இறைபக்தி தொடர்பாக எழுதியிருப்பாரோ? என்ற எண்ணத்துடன் இந்த புத்தகத்தை திறக்கக்கூடாது. முழுமையாக கவிதை நடையில் இல்லாமல், அதே நேரத்தில், கவிதையின் சுவையை ஒரு உரைநடையில் ருசிக்கும்வகையில், கடவுளை காண்பது மட்டும் தரிசனம் அல்ல, உன்னையே நீ ஆழ்ந்து உணர்வதுதான் உண்மையான தரிசனம் […]

Read more

பெரியார் பாதை

பெரியார் பாதை, நிலா சூரியன் பதிப்பகம், 27/2, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 75ரூ. சாதிமுறையை ஒழித்துத் தீண்டாமை அகற்றி, திராவிடனின் பெருமையை வரலாற்று வழியாக நிலைநிறுத்தி, பகுத்தறிவு மிக்க, கல்வியறிவு மிக்க சமுதாயம் உருவாக்க வேண்டுமென கடுமையாக உழைத்தார் தந்தை பெரியார். சமுதாயத்துக்காக அவர் ஆற்றிய தொண்டும், சேவையும், புரட்சியும் ஈடு இணையற்றது. அத்தகைய புகழ்பெற்ற பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக புதுக்கவிதை நடையில் படைத்திருக்கிறார் நூலாசிரியர் பேரா. செ. ஏழுமலை.   —-   […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. தமிழ் மன்னர்கள் பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் அரிய கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெரிதும் உதவுகின்றன. நாம் அச்சில் படிக்கும் தமிழ் எழுத்துக்களும், கல்வெட்டு எழுத்துக்களுக்கும் பெரிய மாறுதல் காணப்படும். கல்வெட்டைப் படிக்க மிகுந்த திறமையும், பயிற்சியும் வேண்டும். பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய இப்புத்தகத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கல்வெட்டுகள், பற்றி அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. இப்புத்தகத்தை […]

Read more

போராளியின் காதலி

போராளியின் காதலி, வெற்றிச்செல்வி, சோழன் படைப்பகம், எண்10, 6வது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை 78, விலை 120ரூ. தமிழ் ஈழப்போரின் இறுதி நாட்களில் இலங்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நாவலாக அளித்துள்ளார் ஆசிரியர். எத்தனை எத்தனை இடர் இன்னல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் அடைந்துள்ளனர். படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தரையில் கிடப்பதில் பிணங்கள் எவை? உயிர் இருக்கும் உடல்கள் எவை? என கண்டுபிடிப்பதே சிரமமாகிப்போனது என்ற வரிகள் அடங்கிய கடைசி அத்தியாயங்களை படிக்கும்போது இதயம் கனக்கிறது. அழகான காதலோடு தொடங்கி, […]

Read more

ஐயம் அகற்று

ஐயம் அகற்று, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-3.html கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று என்ற பெயரில் இப்போது புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளிவந்துள்ளது. காரசாரமான பதில்கள், நகைச்சுவையான பதில்கள், இலக்கியச்சுவையான பதில்கள்… இப்படி பலவிதமான பதில்களை கவிஞர் அளித்துள்ளார். படித்து […]

Read more
1 195 196 197 198 199 223