நானும் மனிதனும்

நானும் மனிதனும், இளஞ்சேரன், சம்பிரித்தி பதிப்பகம், 10, ஜானகிராம் காலனி விரிவு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 184, விலை 120ரூ. மனுநீதிச் சோழன், பசுக்கன்றைக் கொன்ற தன் மகனை அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றான். இது நீதி. மனிதர்கள் ஒவ்வொரு நாளும், ஆடு, மாடு,  கோழியென நூற்றுக்கணக்கானவற்றைக் கொன்று தின்கிறார்களே. மனுநீதிச் சோழனை முன் மாதிரியாகக் கொண்டு இந்த மனிதர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க முடியுமா? இதுபோன்ற படிப்பினை வழங்கும் 48 சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தனையும் மனிதம் பற்றி உணர்த்துபவை. […]

Read more

இடிந்த கரை

இடிந்த கரை, குட்டி ரேவதி, ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-0.html  இது ஒரு கவிதை நூல். புத்தகம் முழுவதும் இடம்பெற்றுள்ள கவிதைகள் கடல் மற்றும் பெண்கள் பற்றி புனையப்பட்டுள்ளது. எளிய நடையில் உவமைகளோடு கவிதைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 14/8/2013   —-   முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, […]

Read more

புறநானூறும் திருக்குறளும் ஒப்பாய்வு

புறநானூறும்  திருக்குறளும் ஒப்பாய்வு, ஒளி பதிப்பகம், 4-63, டாக்டர் ரங்கா சாலை, சென்னை 18, விலை 150ரூ. புறநானூறு, சங்க கால மன்னர்களின் வீரத்தை உணர்த்த வந்த நூல். திருக்குறள் மக்களுக்கு அறம் உணர்த்த வந்த நூல். இந்த இரு நூல்களின் அறிமுகம், தொடர், ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் புதிய கருத்துக்களை சிறப்புகளைப் பட்டியலிட்டு காட்டுகிறது இந்நூல். புறநானூற்றில் அமைந்துள்ள வரலாற்றுக் களஞ்சியங்கள், கவின் தொடர்கள், உள்ளம் கவர் அறக்கருத்துகள் ஆகியவை படிப்போரின் […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், பேட்ரிஷியா பப்ளிகேஷன், 2/40பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ராஜீவ்காந்தி படுகொலை பின்னணியில் தனக்கு தெரிந்த விஷயங்களை வெளியிட்டு உள்ளார், திருச்சி வேலுசாமி. திடுக்கிடும் தகவல்கள் பல இடம்பெற்று இருக்கின்றன. ராஜீவ் கொலை, தொடர்பாக அவர் எழுப்பிய வினாக்கள் இன்னும் விடைகாண முடியாமலே இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது. அத்துடன் அன்பு கணவரை பறிகொடுத்த சோனியாகாந்தி, பாசத் தந்தையை இழந்த பிரியங்கா காந்தி ஆகியோர் வேதனைகளின் மவுன வெளிப்பாடுகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது. நன்றி: தினத்தந்தி, […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்,

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப்பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் (வழி), அரியலூர் மாவட்டம் – 612901, விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாற்றைப் பண்பாட்டை புலவர்களும் அறிஞர்களும் பலவிதங்களில் ஆய்ந்து எடுத்துரைத்துள்ளனர். அவ்வரிசையில் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதியிருக்கும் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் என்ற நூலும் ஒன்றாக இருக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக கரிகால்ச்சோழனின் வரலாற்றையும் கலிங்கத்தில் இருந்து காரவேலன் படையெடுப்பையும் விளக்கும் அவர் கரிகாலனின் வீரத்தைப் […]

Read more

ஆக்கமும் பெண்ணாலே

ஆக்கமும் பெண்ணாலே (பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்), ஏ. இராஜலட்சுமி, முரண்களரி படைப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 58, பக்.144, விலை 100ரூ. காலம் காலமாக சமூகத் தளைகளால் கட்டுண்ட பெண்கள், இலக்கிய மரபுகளை மீறி தம் உணர்வுகளைச் சுதந்திரமாகப் படைப்பிலக்கியத்தில் வெளியிட்டுள்ளனர். அதற்கு பெண் புலவர்களின் பாடல்களே சான்றாகத் திகழ்வதை சான்றுகளோடு எடுத்தக் காட்டியுள்ளார் ஆய்வாளர். புறப்பாடல்களைவிட அகப்பாடல்களை அதிகம் பாடியுள்ள பெண் புலவர்கள் ஆண்களை மையப்படுத்தியே பாடியுள்ளனர் என்றும், பெண் புலவர்கள் பாடிய புறப்பாடல்கள் […]

Read more

ஜெயகாந்தன் சிறுகதையில் பெண்

ஜெயகாந்தன் சிறுகதையில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், 1603, ஆரோக்கிய நகர் ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613006, விலை 175ரூ. ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகளில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். பெண்களும் – குடும்பம், ஆண்-பெண் உறவுநிலை, பெண் தொழிலாளர் நிலை, மரபு வழிப்பட்ட பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் உள்ளிட்டவை மூலம் சிறுகதைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நூல் மூலம் ஜெயகாந்தனின் பெரும்பாலான […]

Read more

ராமனும் ராமசாமியும்

ராமனும் ராமசாமியும், ம. பிரகாஷ், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-313-6.html ராமாயணத்தை பெரியார் எதிர்த்ததற்கான காரணங்கள் குறித்து நூலில் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். கந்தபுராணத்தை அடிப்படையாக வைத்தே ராமாயணமும் எழுதப்பட்டுள்ளத என்றும் அவர் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.பெரியாரைத் தொடர்ந்து எம்.ஆர்.ராதா, பாரதிதாசன் உள்ளிட்டோர் ராமாயணத்தை எதிர்த்து வெளியிட்டுள்ள கருத்துக்களையும் நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினதந்தி,11/9/2013.   —-   இலக்கிய நுகர்ச்சி, இரா. குமரவேலன், […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 144, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழகத்தின் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கிராமத்து மணம் மாறாத எளிமையான சுவையான கட்டுரைகள் இந்நூலில் பளிச்சிடுகின்றன. மண்ணும் மருத்துவமும் என்ற பகுதியில் அனைவருக்கும் பயனளிக்கும் இயற்கை மருத்தவத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்களுக்கு கை வைத்தியம் முதல் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் பண்புகள் நகைச்சுவை கட்டுரைகளாக, […]

Read more

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 225ரூ. சித்தர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம் முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், தங்கள் பாடல்களின் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவக் குறிப்புகளை விபரம் அறிந்தவர்கள் மட்டுமே புரியக்கூடிய பரிபாஷைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் என்றும், இவர்களைப் பற்றி பலவாறு கூறப்படுவதுண்டு. சித்தர்கள் என்றாலே திருமூலர் முதல் கோரக்கர் வரையிலான பிரசித்தி பெற்ற 18 […]

Read more
1 196 197 198 199 200 223