சாண்டில்யன் எழுதுகிறேன்

சாண்டில்யன் எழுதுகிறேன், தெ. இலக்குவன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 248, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-2.html சரித்திர நாவலாசிரியராகப் புகழ் பெற்ற சாண்டில்யனின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கும் நூல் இது. சாண்டில்யனின் 35 சரித்திர நாவல்களில் முப்பத்து நான்கும், சரித்திர சிறுகதைத் தொகுப்பு இரண்டும், சமூக நாவல்கள் நான்கும் இதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு குறை, ஆய்வின் பெரும் பகுதி கதையை விவரிப்பதிலேயே போய்விடுகிறது. குறிப்பாக பாண்டியன் பவனி என்ற நாவலைப் […]

Read more

அவ்வையார் அருளிய நல்வழி

அவ்வையார் அருளிய நல்வழி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயர் நகர், சென்னை 17, விலை 150ரூ. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு அவ்வையார் கூறி சென்ற வழியில் தெளிவு காணத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் விடையளிக்கும் நூல் இது. பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் 41 தலைப்புகளில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சமுதாயம் சார்ந்த வாழ்வியல் செயல்களை எளிமையான நடையில் தந்துள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள தத்துவ கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனித மாண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அவ்வையார் பற்றி ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கும் […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 512, விலை 250ரூ. இந்து சுந்தரேசன், ஆங்கிலததில் எழுதிய ஷேடோ பிரின்சஸ் என்ற வரலாற்று நாவலை, அவரது தாயார் மதுரம் சுந்தரரேசன் மூலக்கதையை படிப்பது போன்றே, கற்பனை வளத்துடன் கூடிய, முகலாய சரித்திரக் காதல் கதையை, மிகவும் சாதுர்யமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார். பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகிய அறுவரும், முகலாய சாம்ராஜ்யத்தின் வரலாற்று நாயகர்கள் என்றால், நூர்ஜஹான், மெகருனிசா, மும்தாஜ், ஷாஜஹான்-மும்தாஜின் மகள் […]

Read more

நீரோட்டம் பார்ப்பது எப்படி

நீரோட்டம் பார்ப்பது எப்படி?, மு.லக்ஷ்மி, வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. கிராமப்புறங்களில் பெரியவர் ஒருவர், இளம் புளியங்க வட்டையைக் கொண்டு, நிலத்துக்கடியில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்து கூறும் வித்தையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மரபு வழியைச் சார்ந்த ஒரு பெண்டுலம் மூலம் நீரோட்டம் பார்ப்பது எப்படி என்ற ஆய்வு மற்றும் செய்முறை நூலை, வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர் இயற்றியுள்ளார். இவர் தனது பணி ஓய்வுக்குப் பின், பல வருடங்கள், இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, […]

Read more

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள், டாக்டர் கு. கணேசன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 85ரூ. வயிறு பற்றிய விவரங்களை, குறிப்பாக செரிமான மண்டல உறுப்புகள் பற்றிய விவரங்களை எளிமையாகக் கூறும் நூல். உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குறித்த விவரங்கள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், உணவு முறைகள் ஆகிய அனைத்தையும் விளக்கமாக கூறுகிறது இந்நூல். வயிறு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு இன்றைய நடைமுறையில் இருக்கும் அத்தனை நவீன மருத்துவ முன்னேற்றங்களை விளக்கமாகக் கூறுவது பயமுறுத்துவதற்காக […]

Read more

இதயம் இதயமாய் இயங்க

இதயம் இதயமாய் இயங்க, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21-10, லோகநாதன் நகர், 2ம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 200ரூ. இதயம் எப்படி நம் உடம்பில் செயல்படுகிறது என்பதை விரிவாக தெளிவாக விளக்குகிறது இந்த நூல். இதய அமைப்பு, இதய செயல் திறன், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள், கருவுற்ற நிலையில் நச்சுத்தன்மை, மாரடைப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? மாரடைப்பிற்கு எளிதில் யார் இலக்காகிறார்கள்? முன்னெச்சரிக்கை அறிகுறிகள், சிகிச்சை […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ. பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார். காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள். தந்தையை கவனித்துக் […]

Read more

துக்காராம்

துக்காராம், பாலசந்திர நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே.நாகு, சாகித்ய அகாடமி, டில்லி, விற்பனை-குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மராத்தி இலக்கிய படைப்பாளர்கள் சமய சீர்திருத்தமும், சமுதாயச் சீர்திருத்தமும் ஏற்பட நூல்கள் பல எழுதினர் என்பர். இந்நூல், துக்காராமின் காலச்சூழல், அவர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் திருத்தொண்டர் என்ற நிலையில் வாழ்ந்த துக்காராம் என்று பல தலைப்புகளில் விளங்குகிறது. துக்காராமின் மராத்தி பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. படிப்போருக்கு மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. நூலின் இறுதியில் […]

Read more

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 368, விலை 200ரூ. அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றையும், அவர் அருளிய திருஅருட்பாக்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் தாங்கிய விரிவான ஆய்வுப் புத்தகம் இது. வள்ளலார் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள், அவரது சத்திய ஞான வாக்குகள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இராமலிங்கர் சென்னை, ஏழுகிணறு, வீராசாமிப்பிள்ளை தெருவில் பழைய கதவு எண் 39இல் வசித்தது முதல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் உள்ள அறைக்குள் […]

Read more

சங்க இலக்கிய மாண்பு

சங்க இலக்கிய மாண்பு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 186, விலை 85ரூ. சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற பாங்கும், இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம். சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்கள், பொருள் கடினமாக, நடை சிரமமாக இருப்பதால், அதன் கருத்துக்கள் இன்றைய தலைமுறையை எளிதாக எட்டவில்லை. எனவே, அவை கூறும் அரிய கருத்துக்களை, எளிய தமிழ் நடையில் கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். ஆழிபெருஞ்சித்திரனாரின் சான்றாண்மையும், கோப்பெருஞ்சோழனின் கவித்திறமும், சங்க சான்றோர்களின் […]

Read more
1 17 18 19 20 21 22