முதல் கோணல்

முதல் கோணல், ஏ.எஸ். பன்னீர்செல்வன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ. பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் வாழும் மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படும் மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்பதை நூலாசிரியர் விளக்கமாக அளித்துள்ளார். சுற்றும் முற்றும் தொகுப்பின் 2ம் பாகமான முதல் கோணல் நூலில் ஒபாமா முதல் இலங்கை பிரச்சினை வரை அனைத்து தகவல்களும் அலசப்பட்டுள்ளது. முதல்கோணலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கு ஒரு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. […]

Read more

சங்கீத சற்குரு தியாகராஜர்

சங்கீத சற்குரு தியாகராஜர், ஜெ. அரவிந்த்குமார், லதா பதிப்பகம், ஜி3, பத்மா காம்ப்ளெக்ஸ், 2, கன்னியப்பன் தெரு, வடபழனி, சென்னை. பக். 344, விலை 200ரூ. கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரின் வாழ்க்கைச் சரித்திரச் சுருக்கம், அவர் இயற்றிய நௌகா சரித்திரம், பிரகலாத பக்தி விஜயம், இவற்றோடு தியாகராஜரின் கீர்த்தனைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் அவற்றுக்கான தமிழ்மொழிபெயர்ப்பு, தியாகராஜர் கையாண்ட ராகங்கள், தாளங்களின் பட்டியல் போன்ற தியாகராஜர் பற்றி அனைத்தும் அடங்கிய அருமையான நூல். […]

Read more

மணிமேகலை காட்டும் மனித வாழ்வு

மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, சாமி சிதம்பரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-4.html ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை நூலுக்கு விரிவுரை-பதவுரை-உரைச்சுருக்கம்-பொழிப்புரை என்று பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், சாமி சிதம்பரனாரால் இந்நூல் சற்றே வித்தியாசமானதாக எழுதப்பட்டிருக்கிறது. மணிமேகலையின் மாண்பு என்ற தலைப்பில் துவங்கி, சிந்திக்க வேண்டியவை என 23 தலைப்போடு நூல் நிறைவடைகிறது. பசிக்கொடுமை (பக்.54), பிற மத வெறுப்பு (பக். 87), ஊழ்வினையும் பிறப்பும் […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 70ரூ.   To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html களம் புகுந்து போரிடும் கரி, பரி, தேர், காலான் என்ற நாற்படையினும், அந்நாற்படையைக் காலமும், இடமும் அறிந்து, களம் புகுந்து வெற்றி கண்ட தமிழர் தளபதிகள், அதியன் துவங்கி, குதிரை மலைப்பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், வில்லவன் கோதை, பரஞ்சோதியார், கருணாகரன் இவ்விதமாக 16 தளபதிகளின் சுருக்க […]

Read more

மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு

மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-4.html ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை 8ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சமுதாய அரசியல் நிலைமைகள் எப்படி இருந்தன என்பதை அறிவதற்கு உதவும் நூல். அதில் கூறப்படும் புத்த மத கருத்துகள். தமிழ்நாட்டின் நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள், இலக்கியச் சுவை போன்றவற்றை ஆசிரியர் சாமிசிதம்பரனார் ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/2/2014. […]

Read more

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், பேராசிரியர்கள் வி.மரிய அந்தோணி, க. திருமாறன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. தமிழ் இலக்கண விதிகள் எளிய நடையில் சான்றுகளோடு விளக்கியிருப்பதோடு பேச்சு வழக்கில் உள்ள ஏராளமான பிழையான சொற்களும் தரப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்களும் தமிழை பிழையின்றி பேச, எழுத நினைப்போருக்கும் உகந்த நூல். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.   —-   நகைச்சுவைச் சக்கரவர்த்தி ஜே.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், சென்னை, பக். 408, விலை 300ரூ. திரை உலகினரே மறந்துவிட்ட […]

Read more

நாலடியார்

நாலடியார், புலியூர் கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 208,விலை 120ரூ. திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினென்கீழ்கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி, பெருமை, மானம், சுற்றந்தழால், நட்பு ஆராய்தல் முதலிய பல அதிகாரங்கள் திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ. கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற […]

Read more

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள்

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ. இந்திய சிம்மாசனத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்து ஆட்சி புரிந்த குத்புத்தீன் ஐபக் முதல் முகலாய அவுரங்கசீப் வரையிலான இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். குறிப்பாக இந்தியா வரலாற்றில் இடம் பெற்றுள்ள அரசியல் சாணக்கியர் முகம்மது பின் துக்ளக், தாஜ்மகால் நாயகன் ஷாஜகான், முகலாய ராஜதந்திரி அக்பர் உள்ளிட்ட 25 இஸ்லாமிய மன்னர்கள் குறித்த செய்திகளை அனைவரும் […]

Read more

வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ. தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது […]

Read more
1 5 6 7 8 9 10