கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சுகன்யா பாலாஜி, அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 120ரூ. மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியோடு தொடங்கும் கதை, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு பக்கத்திற்கும் படிக்கத் தூண்டும் வகையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் சுவாரசியமாக அமைந்துள்ளன. புதுமணத்தம்பதிகள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈ.கோ. பிரச்சினைகள், கதாபாத்திரங்கள் வடிவில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. தன்னம்பிக்கையை ஊட்டும் வகையிலும் கதை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி; தினத்தந்தி, 20/3/13.   —-   சின்ன […]

Read more

மன்னிப்பின் மகத்துவம்

மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, தமிழில்-ஜார்ஜினா குமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html பொறாமை, கோபம் இவற்றால் அன்பான உறவுகளுக்குள் ஏற்படும் போராட்டங்களைப் பற்றித் தலாய்லாமா, தன்னுடைய சொற்பொழிவுகளில் சொன்ன கருத்துக்களை அவருடன் பயணம் செய்த விக்டன்ச்சான் நூலாகப் பதிவு செய்திருக்கிறார். தவறு எங்கிருந்து தோன்றுகிறது? தவறுக்கு தண்டனைதான் சரியான தீர்வா? அதற்கான மாற்று வழி எது? மன்னிப்பின் மகத்துவத்தால் நிகழும் அற்புதங்கள் எவை? போன்றவை இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. […]

Read more

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை)

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை), கோக்கலை ஜே. ராஜன், மகராணி, சென்னை 101, பக். 496, விலை 250ரூ. தேரையர் என்பவர் தருமசௌமியர் என்பவருடைய மாணக்கர் என்றும் அகத்தியருடைய மாணக்கர் என்றும் கூறுவர். ஆனால் இவருடைய இயற்பெயர் சரியாகத் தெரியவில்லை. இவர் காலத்தில் நீங்காத தலைவலி கொண்ட ஓர் அரசனின் தலைவலியைப் போக்க, அவருடைய கபாலத்தைத் திறந்து பார்த்தபோது அங்கு ஒரு தேரை இருந்ததாம். உடனே ஒரு பாத்திரத்தில் நீரை வைத்ததும், தேரை அந்த நீரில் குதித்து நீங்கியதாம். பிறகு மூலிகையின் […]

Read more

தமிழ்க் காதல்

தமிழ்க் காதல், தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம், மல்லிகா பதிப்பகம், 60/6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக். 424, விலை 200ரூ. உலக இலக்கியங்களில் இல்லாத தனித்தன்மை தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு. அது, அகம் புறம் என்று வாழ்க்கையை வகுத்து, அவற்றுக்கு அணி செய்வதாக அமைந்த சங்க இலக்கியங்கள்தான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர் வாழ்வை விளக்குபவை சங்க இலக்கியங்கள். இவற்றில் அகத்திணை இலக்கியங்களை மட்டும் ஆய்வுப்பொருளாகக் கொண்டு, பழந்தமிழர் வாழ்வில் அகத்திணை என்று குறிப்பிடப்படும் காதல் வாழ்வு […]

Read more

பணம் பணம் பணம்

பணம் பணம் பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 75ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0000-834-2.html எங்கு பார்த்தாலும் பணம்… பணம்… பணம்… என்று பணத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் இயங்கி வருகின்றன. ஆனால், பணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் படும் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் இல்லாமல் மனிதன் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, பதற்றமற்று வாழ்க்கையைத் தள்ள முடியுமா? முடியும் என்கிறார் நூலாசிரியர். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் பொதுவாக இருந்து, எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் […]

Read more

வாக்ரிகளின் வாழ்வியல்

வாக்ரிகளின் வாழ்வியல், ஆ.குழந்தை, பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 248, விலை 150ரூ. தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் வாக்ரி சமுதாயத்தினருடன் பல ஆண்டுகள் உடனிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலான தேடலை எழுத்து வடிவமாக்கியுள்ளார் நூலாசிரியர். வாக்ரிகளின் வாழ்வியலை பண்பாட்டு வாழ்வியல், அரசியல் வாழ்வியல், பொருளாதார வாழ்வியல், வாய்மொழி வழக்கான வாழ்வியல், சமூக, சமய வாழ்வியல் எனப் பல கூறுகளாக பகுத்து ஆராய்ந்துள்ளார். மேலும் கூடி வாழ்வதிலும், உறவு ஏற்படுத்துவதிலும், அன்பு […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்)

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்), பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், சென்னை 33,  முதல்பாகம் (பக்கம்-256, விலை-140ரூ), இரண்டாம் பாகம் (பக். 224, விலை 125ரூ), மூன்றாம் பாகம் (பக். 272, விலை 160ரூ). தினமணி கதிரில் வெளிவந்த ஆயுர்வேதம் தொடர்பான வாசகர்களின் கேள்வி பதில்கள் மூன்று பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வெளியானபோது அதைப் படிக்கத் தவறியவர்கள், படித்தும் பாதுகாக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்காக அனைத்து கேள்வி பதில்களும் முழுமையாக இம்மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. திக்குவாய், அலர்ஜி, மாதவிடாய், ஒற்றைத் தலைவலி, […]

Read more

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி, ச. பொன்ராஜ், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆவடி, சென்னை 600054, பக். 34+230. நம் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பணிகள் பற்றி, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. அர்ஜுன் போர் ஊர்தி பற்றியும், அதன் வடிவமைப்பு முறைகள் பற்றியும், சாதாரணமானவர்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நூலாசிரியர் விளக்கியுள்ளார். தரம் மிக்க தாளில், வண்ணப்படங்கள் சிறப்புடன் அச்சிடப் பெற்றுள்ளன. மாணாக்கர்கள் பாதுகாப்பு துறைப் பணிகளில் ஈடுபட, இந்நூல் […]

Read more

இலக்கியத் திறனாய்வும்

இலக்கியத் திறனாய்வும், படைப்பிலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி.கே.கே. பில்டிங், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ. படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்புதான். நூலைப் படைத்தவனைக் காட்டிலும், திறனாய்வாளன் புகழ்பெறும் அளவிற்கு, திறனாய்வு உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இலக்கியம் உணர்வினை வெளிப்படுத்தினால், அதில் அறிவினை செலுத்துவது திறனாய்வு. அறிவுக்கண் கொண்டு இலக்கியத்தை பார்த்து அதன் ஆழ, அகலப் பரிமாணங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலைதான் திறனாய்வுகலை. அந்த திறனாய்வு கலை நுட்பங்களை, இந்த நூல் அழகாக […]

Read more

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம்

வீணையின் குரல், எஸ். பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 440, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ். பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ். பாலசந்தர். சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்கத் திரும்பிவிட்டார். அவருடைய […]

Read more
1 166 167 168 169 170 180