தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ. ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-148-9.html இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம், மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத்கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. […]

Read more

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்

இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும், மா.ந. திருஞானசம்பந்தன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 270, விலை 120ரூ. தமிழர்களின் ஐவகை நிலங்களுக்குரிய தெய்வம், உணவு, பறவை, மலர், பண், தொழில் போன்றவற்றை விரிவாகப் பட்டியலிடுவதில் தொடங்கி சங்க காலத்தில் இசைத்தமிழ், சோழர்கள் காலத்தில் தமிழிசை, தமிழிசை வளர பாடுபட்டவர்கள், கூத்துக்கலையின் வகைகள், நாடகக்கலையை வளர்த்தவர்கள், நாடகத்தால் வளர்ந்தவர்கள், நாடக சபாக்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆப்ரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார், பாரதியார், பாரதிதாசன், கண்மணி […]

Read more

புகை நடுவில்

புகை நடுவில், கிருத்திகா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 254, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-0.html மனித உறவுகளை அரசியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் விவரிக்கும் நாவல்தான் புகை நடுவில். இந்த நாவல் கோர்வையாக, சம்பவங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், விவரங்களின் தோரணமாக அமைந்துள்ளது. நடுத்தர வர்கக்த்தின் குறிப்பாக அந்த வர்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை, கலாசாரத்தை பிரதிபலித்துள்ளது.‘ ஆண், பெண் உறவு குறித்து பல்வேறு தளங்களில் நாவல் அலசுகிறது. அது சில இடங்களில் தனிமதவாதமாகவும், […]

Read more

வாழும் தெய்வம் மகாத்மா

வாழும் தெய்வம் மகாத்மா, நா. பெருமாள், ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், பிளாட் எண் 46, 2வது குறுக்குத் தெரு, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, பக். 224, விலை 130ரூ. இப்படியொரு மனிதர் தசையும், தோலுமாய், ரத்தமும், நரம்புமாய், எலும்புமாய் வாழந்தார் என்று வருங்கால உலகம் நம்ப மறுக்கும் காந்தியடிகளை பற்றி பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கருத்து தெரிவித்திருக்கிறார். இப்படியொரு மாமனிதர் உலகில் வாழ்ந்தது உண்மைதான் என, எதிர்கால சந்ததியினர் அனைவரும் நம்பும் வகையில், காந்தியின் பிறப்பு முதல் மறைவு வரை, முக்கியமான நிழற்படங்களையும், […]

Read more

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

கோபிகிருஷ்ணன் படைப்புகள், கோபிகிருஷ்ணன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 1022, விலை 800ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-6.html   மறைந்த கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் முழுமையாக இந்த தொகுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடவே கோபிகிருஷ்ணனை யூமா. வாசுகி எடுத்த நேர்காணலும். கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் இருவிதத் தன்மைகளைக் காணலாம். ஒன்று, மொழியைக் கையாளும் விதம். அவருக்கே உண்டான திருகல் மொழித் தன்மை அதாவது மொழியை திருகித்திருகி பயன்படுத்தும் லாவகம் (உ-ம்) வார்த்தை உறவு போன்ற கதைகள். இரண்டு, உரித்துப்போட்டது போன்ற அப்பட்டமான […]

Read more

வானம் தொடு தூரம்தான்

வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்தினம், பிருந்தா ஜயராமன், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங், 47, NP ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, பக். 248, விலை 90ரூ குழந்தை சிறந்து விளங்காவிட்டால் பெற்றோர் சரியில்லை என்று சொல்லும் உலகம் இது. அதனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம் என்றே பெற்றோர் நினைக்கின்றனர். அவர்களுடன் எப்படி பழகுவது, எப்படி உறவை மேம்படுத்துவது, சிறந்தவர்களாக வளர்க்கும் முறைகள், பிரச்னைகளைத் தீர்க்கும் முறைகள், குழந்தைகள் மன உலகம் எப்படி […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் சாமி சிதம்பரனார், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 14, பக். 142, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-4.html சித்தர்கள் என்றதும் சித்த வைத்தியம் பதினெண் சித்தர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட எண் வகைச் சித்தர்கள், அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள் என்ற வகையில்தான் எண்ணங்கள் ஓடும். ஆனால் சாமி சிதம்பரனார் எழுதியுள்ள சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் என்ற நூலைப் படிக்கும்போது சித்தர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் […]

Read more

இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்

இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள், மலையமான், அன்பு பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. நாய்க்கு நன்றி சொல்லவும், பூனைக்கு கோபத்தை வெளிப்படுத்தவும், அதன் வால்கள் பயன்படுவதைப்போல, ஆடு, மாடு, அணில், நாய், பூனை, குதிரை, குரங்கு, கங்காரு உள்ளிட்டவை அதன் வால்களை என்னென்ன காரணங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன? எந்தெந்த உயிரினங்கள் தனது உணவுத் தேடலையும் தண்ணீர்த் தாக்கத்தையும் எப்படி பூர்த்தி செய்து கொள்கின்றன? என நூலில் சொல்லப்பட்டிருக்கும் விதம் அற்புதம். சூரியப்பறவை தவிட்டுக்குருவி உள்பட 5 பறவை இனங்கள், கடல் குதிரை, கடல் […]

Read more
1 167 168 169 170 171 180