நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?

நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?, டாக்டர் ஏ.ஈ. செல்லையா கல்வி அறக்கட்டளை, ஏபி147, மூன்றவாது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 40, விலை 75ரூ. திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகுவது அதிகமாகிவிட்டது. இதற்கு தீர்வு காண்பது எப்படி? என்று கேள்வி எழுப்புகிறார் சி. வசந்தகுமாரி செல்லையா அவர் வழக்கறிஞராக இருப்பதால் தான் சந்தித்த பல வழக்குகளை மேற்கோள் காட்டி, பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார். வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல்வேறு வழிமுறைகளையும் கூறுகிறார்.   […]

Read more

வெள்ளந்தி மனிதர்கள்

வெள்ளந்தி மனிதர்கள், ஆ. அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை 64, விலை 50ரூ. சூதுவாது இல்லாத விவரங்கள் தெரியாது வாழ்ந்து வரும் மனிதர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட 8 சிறுகதைகள்.   —-   ஸ்ரீ அதிசங்கரர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 30ரூ. ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றையும், தொண்டுகளையும் கூறும் சில நூல்.   —-   இந்திய விஞ்ஞானிகள், […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்)

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (மூன்று பாகங்கள்), பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், சென்னை 33,  முதல்பாகம் (பக்கம்-256, விலை-140ரூ), இரண்டாம் பாகம் (பக். 224, விலை 125ரூ), மூன்றாம் பாகம் (பக். 272, விலை 160ரூ). தினமணி கதிரில் வெளிவந்த ஆயுர்வேதம் தொடர்பான வாசகர்களின் கேள்வி பதில்கள் மூன்று பாகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வெளியானபோது அதைப் படிக்கத் தவறியவர்கள், படித்தும் பாதுகாக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்காக அனைத்து கேள்வி பதில்களும் முழுமையாக இம்மூன்று பாகங்களில் இடம்பெற்றுள்ளன. திக்குவாய், அலர்ஜி, மாதவிடாய், ஒற்றைத் தலைவலி, […]

Read more

வாக்ரிகளின் வாழ்வியல்

வாக்ரிகளின் வாழ்வியல், ஆ.குழந்தை, பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 248, விலை 150ரூ. தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் வாக்ரி சமுதாயத்தினருடன் பல ஆண்டுகள் உடனிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலான தேடலை எழுத்து வடிவமாக்கியுள்ளார் நூலாசிரியர். வாக்ரிகளின் வாழ்வியலை பண்பாட்டு வாழ்வியல், அரசியல் வாழ்வியல், பொருளாதார வாழ்வியல், வாய்மொழி வழக்கான வாழ்வியல், சமூக, சமய வாழ்வியல் எனப் பல கூறுகளாக பகுத்து ஆராய்ந்துள்ளார். மேலும் கூடி வாழ்வதிலும், உறவு ஏற்படுத்துவதிலும், அன்பு […]

Read more

பணம் பணம் பணம்

பணம் பணம் பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 75ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0000-834-2.html எங்கு பார்த்தாலும் பணம்… பணம்… பணம்… என்று பணத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் இயங்கி வருகின்றன. ஆனால், பணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் படும் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் இல்லாமல் மனிதன் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, பதற்றமற்று வாழ்க்கையைத் தள்ள முடியுமா? முடியும் என்கிறார் நூலாசிரியர். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் பொதுவாக இருந்து, எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் […]

Read more

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி, ச. பொன்ராஜ், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆவடி, சென்னை 600054, பக். 34+230. நம் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பணிகள் பற்றி, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. அர்ஜுன் போர் ஊர்தி பற்றியும், அதன் வடிவமைப்பு முறைகள் பற்றியும், சாதாரணமானவர்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நூலாசிரியர் விளக்கியுள்ளார். தரம் மிக்க தாளில், வண்ணப்படங்கள் சிறப்புடன் அச்சிடப் பெற்றுள்ளன. மாணாக்கர்கள் பாதுகாப்பு துறைப் பணிகளில் ஈடுபட, இந்நூல் […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம்

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 1, சைவ-சமய-தமிழகம், முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வ சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 895, விலை – 10 தொகுதிகளும் சேர்த்து 15000ரூ. சைவ சமயம், தமிழகம் என்பதாக அமைந்துள்ள கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது. கலைக்களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை […]

Read more

தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2

தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2, கே. ஏ. ராமசாமி, சாதுராம் பதிப்பகம், முதல் தொகுதி விலை 300ரூ, இரண்டாம் தொகுதி விலை 230ரூ. ராமபிரானுக்க அனுமனும், பாண்டவர்களுக்கு கண்ணனும் தூது சென்றது வரலாற்றில் சிறப்பானவை. ஒப்புமை கூற இயலாதவை. நவீன அரசியலுக்கும் வழிகாட்டும் வகையில் நுணுக்கங்கள் கொண்டவை. இந்த நாட்டின் பாரம்பரியத்தில் அரசு, ஆளுமை, நிர்வாகம், நிதி என்று எல்லா துறைகளுக்கும் முன்னோடி கருத்துக்கள், இலக்கியத்தில் உள்ளன. தமிழில் தூது, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்றவை, தமிழை உயிரோட்டத்துடன் […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், தொகுப்பாசிரியர்-கோபிநாத் மொகந்தி, தமிழில்-ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 208, விலை 125ரூ. ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பில், மலைகளில் ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் ஜீவ மரண போராட்டங்களும், அங்கு வாழும் பெண்களின் சுய கௌரவமும், சங்கடமான நிலைமைகளும், சுதந்திரத்துக்குப் பிறகான ஒரிய கிராமப்புற வாழ்வில் ஏற்பட்ட அரசியல் தாக்கங்களும் என்று பல கருப்பொருட்களைத் தாங்கி 13 அற்புதமான சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன. உதாரணமாக எறும்பு என்ற சிறுகதையில் ஓர் […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more
1 2 3 4 5 6 11