ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்

ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்?, ஓஷோ சித், ஓஷோ சாஸ்வதம், 3/184, கந்தம்பாளையம், அவினாசி 641654, விலை 200ரூ. ஓஷோ ரஜினீஷ் பேசியும் எழுதியும் வெளியான 600 புத்தகங்களில் 10க்கும் குறைவானவையே காமத்தைப் பற்றியவை. ஆனால் அவையே அவரது அடையாளமாகப் பரப்பப்பட்டன. உண்மையில் ஓஷோவின் தனித்தன்மை என்பது தர்க்கம். அமெரிக்கா முதல் கம்யூனிஸ்ட்கள் வரை, மகாவீரர் தொடங்கி போப் ஆண்டவர் வரை அனைத்தையும் தன்னுடைய விமர்சன அம்புகளால் ஓட்டை போட்டார் ஓஷோ. இத்தகைய ஓஷோவின் வழித்தடம் அவருக்குப் பின்னால் தொடரவில்லை என்பதே உண்மை. […]

Read more

பழமை ஆனாலும் புதுமை

பழமை ஆனாலும் புதுமை, அலைய்டு பப்ளிஷர்ஸ், 751, அண்ணா சாலை, சென்னை 2, விலை 250ரூ. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியார் பாடினார் அன்று. ஆனால் திருக்குறளின் பெருமையை இங்கிருந்து எட்டுத்திக்கும் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு எழுதிய ஆங்கில நூல்தான் என்சியன்ட் எட் மாடர்ன் (பழமை ஆனாலும் புதுமை). நிர்வாகவியல் கருத்துகள் திருக்குறளில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன? என்பதை யாரும் இதுவரையில் சொல்லியிராத புதுமையான ஆராய்ச்சிகளோடு எழுதியிருக்கிறார். இந்த நூலை அறிவாற்றலை வளர்க்கவும் படிக்கலாம், […]

Read more

அனுபவச் சுவடுகள்

அனுபவச் சுவடுகள், கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா வெளியீடு, சென்னை 17, பக். 192, விலை 125ரூ. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் நூல். தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம், எழுத்தாளர் ஜெயகாந்தன், பணி நிறைவு பெற்ற நீதிபதி சந்துரு, அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன் ஆகியோருடனான தனது நட்பு குறித்து நூலாசிரியர் விவரித்துள்ள சம்பவங்களின் மூலம் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதேபோல, பிலிப்பைன்ஸில் ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களையும் சுவைபட விவரித்துள்ளார். பிலிப்பைன்ஸ் […]

Read more

குறுந்தொகை உரை நெறிகள்

குறுந்தொகை உரை நெறிகள், ஆ.மணி, தமிழன்னை ஆய்வகம், 56, அன்பு இல்லம், 4ஆவது குறுக்குத் தெரு, அமைதி நகர், அய்யங்குட்டிப் பாளையம், புதுச்சேரி 605009, பக். 304, விலை 113ரூ. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைக்கு இதுவரை 19க்கும் மேற்பட்ட உரைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் இன்றியமையாத உரைகளாகக் கருதப்படும் தி.சௌ. அரங்கனார், உ.வே. சாமிநாதையர், ரா.இராகவையங்கார் ஆகியோரின் உரைகளைத் தொகுத்தும் வகுத்தும், விரித்தும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். கிடைக்கப்பெறாத உரைகளான பேராசிரியர் உரை, நச்சினார்க்கினியர் உரை பற்றிய குறிப்புகளும் உள்ளன. குறுந்தொகையின் முதல் உரையாசிரியரும் […]

Read more

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள்

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள், வாலி பதிப்பகம், 12/28, சவுந்தர்ராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 150+150ரூ. எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், திரை உலகில் புகழின் உச்சியில் இருந்தபோது, இருவருக்கும் பாடல்கள் எழுதிய பெருமைக்கு உரியவர் வாலி. எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆரின் கொள்கை விளக்கப் பாடல்களில் பெரும்பாலானவற்றை எழுதியவர். நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்(எங்க வீட்டு பிள்ளை), மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (தெய்வத்தாய்), வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் (தேடி வந்த மாப்பிள்ளை), நல்ல நல்ல […]

Read more

பாரதியின் புதிய ஆத்திசூடி சுவை புதிது

பாரதியின் புதிய ஆத்திசூடி சுவை புதிது, து. இராசகோபால், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 288,விலை 140ரூ. குழந்தைகளின் நாற்றங்கால் பருவம் ஆரம்பப் பள்ளிப் பருவம். இக்காலத்தில் அறவியல் கருத்தகளை எளிய பாடல்கள் மூலமாக நமது குழந்தைகளின் மனதில் விதைக்கும் அற்புதமான கல்விமுறை நம்மிடம் இருந்தது. ஒற்றை வரியிலான உபதேச மொழிகளாக அமைந்த நீதி நூல்கள் குந்தைகளின் மனப்பயிற்சிக்கும் வாக்குப் பயிற்சிக்கும் மிகவும் உதவின. அதில் ஒன்றுதான் ஔவையார் எழுதிய ஆத்திசூடி. மகாகவி பாரதி இத்தகைய நிதிநூல்களின் முக்கியத்துவத்தை மிகவும் உணர்ந்திருந்தார். அதனால்தான் […]

Read more

முரண் எங்கெங்கு காணினும்

முரண் எங்கெங்கு காணினும், சேஷ், வெங்க், XLOG, சென்னை 33, பக். 176,விலை 110ரூ. முரண்பாடுகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. வீட்டிலும் வெளியிலும் என எங்கெங்கு காணினும் முரண்கள். முரண்களைத் தவிர்க்கவும் முடியாது. எனவே முரண்களோடு வாழ்வதுதான் வாழ்க்கை என்று சொல்லும் நூல். ஆனால் வாழ்க்கையில் முரண்பாடுகள் மட்டுமே இருப்பதில்லை. ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன. இல்லையென்றால் வளர்ச்சி எப்படி ஏற்பட முடியும்? உலகம் எப்படி இயக்க முடியும்? ஒற்றுமைக்கும் இணக்கத்துக்கும் இந்நூல் அழுத்தம் தரவில்லை. தனிமனிதர்கள் சந்திக்க நேர்கிற முரணகள் மட்டுமல்ல, உலகு தழுவிய, […]

Read more

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்

1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள், திருவாரூர் அர. திருவிடம், நக்கீரன் பதிப்பகம், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்போது டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் சந்தித்த கொடூரம், வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களின் மனநிலை ஆகியவற்றை நூலாசிரியர் ஒரு திரைக்கதைபோல விவரித்துள்ளார். நூலின் ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பை விளக்குவதாக இருக்கிறது. நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி இந்திய அரசியலில் பெற்ற முக்கியத்துவம், அவர் எடுத்த முற்போக்கான நடவடிக்கைகள் விரிவாக […]

Read more

சரபேந்திர பூபால குறவஞ்சி

சரபேந்திர பூபால குறவஞ்சி, மணி மாறன், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், பக். 180, விலை 100ரூ. தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. இது நாடக வகையைச் சார்ந்தது. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவது இந்நூல். குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படுகிறது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பட்டதுதான் இக்குறவஞ்சி. இவர்கள் தண்டபாணி தேசிகரின் மகனாவார். இந்நாடகம் தஞ்சைப் பெரிய கோயிலில் நடைபெற்ற திருவிழாக்காலங்களில் […]

Read more

சிலம்பின் பரல்கள்

சிலம்பின் பரல்கள், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. சிலப்பதிகாரத்திலும், சிலம்புச் செல்வரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். சிலப்பதிகார காப்பியத்தின் சுவையையும், சிறப்புகளையும், கதைச் சுருக்கத்தையும் கொண்டது இந்நூல். சிலம்பினை கற்கச் சிறந்த நூல் இது என்று பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மதிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பரலும், ஒரு தொடுக்கப்பட்ட மாலைதான். பதினாறு தலைப்புகளில் சிலப்பதிகார தோட்டத்தில் மறைந்துகிடக்கும் மனோரஞ்சித மலர்களையும் வெளிக்கொணர்கிறார் ஆசிரியர் என்று முனைவர் தி. ராசகோபாலன் பாராட்டியுள்ளார். சிலப்பதிகார காப்பியத்தில் முத்தமிழும் கொஞ்சிக் குலவுகின்ற அழகையும், […]

Read more
1 2 3 4 5 6 10