வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள்

வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள், அர்துர் எம்.சிசிங்கர், ஹங்டன் மிவ்லின் பதிப்பகம் அமெரிக்காவின் இடதுசாரிகள் அர்துர் எம்.சிசிங்கர் எழுதி, ஹங்டன் மிவ்லின் பதிப்பகம் வெளியிட்ட வெள்ளை மாளிகையில் ஜான் எப் கென்னடியின் ஆயிரம் நாட்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். அமெரிக்காவில் நிலவும் மேல்தட்டு பொருளாதாரம் – ஆயுத அரசியல் – பெரும் முதல் என்ற கொள்கையில் இருந்து மாறுபட்டு சிந்தித்தவர், கென்னடி. அவர் இடதுசாரி கொள்கையாளர் அல்லர். ஆனால் அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கையில் இருந்து மாறுபட்டதால், அந்த […]

Read more

நேனோ ஓர் அறிமுகம்

நேனோ ஓர் அறிமுகம், அருண் நரசிம்மன், தமிழினி, பக். 96, விலை 75ரூ. இயற்கை நிகழ்வுகளில் புதைந்திருக்கும் நேனோ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும் திருப்தியும், இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், நேனோ சார்ந்தவை. எவை நேனோ அல்லாதது என்ற […]

Read more

புறநானூறு (பழைய உரையுடன்)

புறநானூறு (பழைய உரையுடன்), டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 806, விலை 400ரூ. சங்க இலக்கியம், எட்டுத்தொகையில் ஒன்று புறநானூறு. அதன் முதற்பதிப்பு, தமிழ்த்தாத்தா உ.வே.சா., வால், 1894ல் வெளியிடப்பட்டது. அந்த பதிப்பு, புதிய பல இணைப்புகளுடன், எட்டாவது பதிப்பாக 2014ல் வெளிவந்துள்ளது. புறநானூறு மூலம் மட்டும், புறநானூறு மூலமும் உரையுமென்று, எத்தனை எத்தனையோ பதிப்புகள், வேறு வேறு நிறுவனத்தாரால் வெளிவந்துள்ளன. பழந்தமிழகத்தின் வரலாறு, கலை, தொழில், வாணிகம், கல்வி, ஆட்சி, பழக்க வழக்கம், பண்பாடு போன்ற பலவும் புறநானூற்றில் பொதிந்து […]

Read more

பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more

பெரிய புராணத்தில் திருக்குறளின் தாக்கம்

பெரிய புராணத்தில் திருக்குறளின் தாக்கம், என். கே. அழகர்சாமி, கிருஷ்ணா பப்ளிகேஷன்ஸ், பக். 252, விலை 150ரூ. சேக்கிழார் பெருமாள் தாம் எழுதிய பெரியபுராணத்தில், திருக்குறளின் தாக்கத்தால், அதன் அறக்கருத்துக்களை, அடியார்களின் வரலாற்றுடன், இரண்டற கலந்து, வழங்கியுள்ளார். பெரியபுராணம், சமய கருத்துகளை மட்டும் கூறவில்லை. சமுதாய நிலைகளையும், அரசியல் சூழ்நிலைகளையும் கூறுகிறது என்பதை, திருக்குறள் கூறும் சமுதாய, அரசியல் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார். தற்காத்து தற்கொண்டாற் பேணி என்று துவங்கும் திருக்குறளை திருநீலகண்டர் வரலாற்றுடன் ஒப்பிடுவதும் (பக். 37). மனத்துக்கண் மாசிலன் […]

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், பக். 168, விலை 120ரூ. சமகால நிகழ்வுகள் குறித்த, இந்நூல் ஆசிரியரின் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையாக, 2011 செப்டம்பர் 11ம் தேதி நடந்த, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆய்வுக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. மதுரை மாவட்டம், யானைமலையை வெட்டி, கோவில் அமைக்க முயன்ற வழக்கில், இயற்கை செய்து வைத்திருக்கும் கலையைக் காட்டிலும் அழகானது வேறு எதுவுமில்லை என்கிறார் நூலாசிரியர். ஓவியர் எம்.எப். ஹூசைன் பற்றிய […]

Read more

ஆசிரியர்களே அச்சாணிகள்

ஆசிரியர்களே அச்சாணிகள், தொகுப்பாசிரியர் சுவாமி வி. மூர்த்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 216, விலை 75ரூ. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர்கள் மாணவர்கள். அந்த மாணவர்களை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக எளிமையாகக் கூறும் நூல். உண்மையான கல்வி எது? என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. கல்வி – சமூகம் – ஆசிரியர் – மாணவர் தொடர்பான 36 கட்டுரைகளை பல்துறை அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். பிள்ளைகளை எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம், ஆனால் தண்டிக்கவே கூடாது. […]

Read more

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், க. சிவாஜி, அலைகள் வெளியீட்டகம், பக். 312, விலை 200ரூ. நாட்டின் கிராமப்புற முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வரும் கூட்டுறவு இயக்கம் குறித்தும், தமிழ்நாட்டில் அவ்வியகத்தின் முன்னோடிகளான பிட்டி தியாகராயர், எல்.கே. துளசிராம், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், பி.டி.இராசன், வே.வ. இராமசாமி, மேடை தளவாய் குமாரசாமி முதலியார் பி.எஸ். குமாரசாமி ராஜா, டாக்டர் பி. நடேசன், கே.ஏ. நாச்சியப்ப கவுண்டர், எம்.பி. நாச்சிமுத்து, பி.எஸ். இராஜகோபால் நாயுடு, கே.எஸ். சுப்ரமணியக் கவுண்டர் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்பு, பணிகளை […]

Read more

கௌடலீயம் பொருணூல்

கௌடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம் முதல் பகுதி), மொழிபெயர்ப்பாளர் மு. கதிரேசச் செட்டியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 664, விலை 400ரூ. ஆட்சியியல் என்ற மையக் கருத்தின் அடிப்படையில், ராஜதந்திரி என்று அழைக்கப்படும் கௌடில்யரால் உருவாக்கப்பட்ட இந்நூல், அன்றைய இந்தியாவிலிருந்து பலதுறைசார் அறிவியலையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவின் சிறந்த பகுதிகளை மட்டுமன்றி இருண்ட பக்கங்களையும் அறிய உதவுகிறது. அர்த்த சாஸ்திரத்தின் முதல் பகுதியான இந்நூலில் அரசியல், தொழிற்தலைவர் செயன்முறை, ஒற்றாடல், உழவிலா நிலத்தைப் பயனுற அமைத்தல், கடன் கோடல், தண்டக் […]

Read more

சமுதாய வரலாற்றுச் சுருக்கம்

சமுதாய வரலாற்றுச் சுருக்கம், தி.கே. மித்ரோபோல்ஸ்கி, தமிழில் கார்த்தி, ப. விருத்தகிரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 518, விலை 350ரூ. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற மரபீனீ அறிவியலில் தொடங்கி, மனதின் எவ்வாறு குழுக்களாகச் செயல்பட்டான், எவ்வாறு மனிதனை மனிதன் அடிமையாக்கினான், உழைப்புச் சுரண்டல், நிலப்பிரபுத்துவமுறை, தொழில்புரட்சி, முதலாளித்துவம் என பன்முகத் தன்மை கொண்ட சமூக வளர்ச்சியை கால வரிசைப்படி விளக்கிச் செல்கிறது இந்நூல். இது முழுக்க முழுக்க பொதுவுடைமைவாதியின் பார்வையில் முன் வைக்கப்படும் வரலாறு என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. […]

Read more
1 2 3 4 5 6 8