நன்றி ஓ ஹென்றி

நன்றி ஓ ஹென்றி, எஸ். சங்கரநாராயணன், பொக்கிஷம் புத்தக அங்காடி, பக். 208, விலை 150ரூ. உலகப்புகழ் கதை சொல்லி ஓ. ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும், ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிபப்திலாகட்டும், வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்து உணர்வுகளைச் சொல்லி விரக்தி […]

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. நவீன தமிழிலக்கியத்தில், பயண நூல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளரான ஏ.கே. செட்டியார், 1937 மற்றும் 1939ல் தாம் மேற்கொண்ட கப்பல் பயணங்கள் மூலம் கண்டுகளித்த ஜப்பான், அமெரிக்கா, அயர்லாந்து, பாரிஸ், டென்மார்க், ஜெர்மன், இத்தாலி, தென்னாப்ரிக்க நாடுகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதிய பயணக் குறிப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளுக்கு உலக நாடுகளில் உள்ள பெருமைகளை விளக்குகிறது முதல் கட்டுரை. பீனிக்ஸ் பூங்கா அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலேயே மிகவும் […]

Read more

நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்

நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும், விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், வெளியீடு தமிழ் நாடு அறிவியல் இயக்கம், சென்னை, விலை 90ரூ. தேனியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசாங்கம் ரூ.1500 கோடி ஒதுக்கியுள்ளது என்ற செய்தி வந்தவுடனே அதை வரவேற்றும், இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது பாதிக்கும், மக்களுக்கு ஆபத்துக்களை ளவிளைவிக்கும் என்ற எதிர்ப்பு கருத்துக்களும் உருவாயின. ஆனால் இந்த ஆய்வுக்கூடத்தால் எந்த ஆபத்தோ, அச்சமோ இல்லை. உலகளவில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ஆய்வுக்கூடமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் […]

Read more

இலக்கிய மாண்புகள்

இலக்கிய மாண்புகள், செம்மூதாய் பதிப்பகம், ஒவ்வொரு நூலும் விலை 60ரூ. குறுந்தொகை காட்சிகள், சிற்றிலக்கியங்களில் வாழ்வியல், அனுமனின் வீரச்செயல்கள், பெரியு புராணத்தில் பக்தி, பாரதியின் பாஞ்சாலி போன்ற தலைப்புகளில் முனைவர் தா. நிலகண்ட பிள்ளை இந்த நூலில் இலக்கிய நயங்களை எழுத்தோவியங்களாக்கித் தருகிறார். இதேபோல அவர் எழுதிய சிலப்பதிகாரச் சிந்தனைகள், செம்மொழிச் சிந்தனைகள், செவ்விலக்கியப் பதிவுகள் ஆகிய நூல்களிலும் இலக்கிய மணம் வீசுகிறது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.   —- வெற்றி உங்களுக்காக, கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. வெற்றியை விரும்பாதவர்கள் […]

Read more

மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும்

மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும், வானதி பதிப்பகம், விலை 200ரூ. பல்லவ பேரரசின் சம்பவங்களின் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சரித்திர நாவல். இளம் சிற்பி மதிஒளியும் ஆடலரசி மலர்விழியும் முதற் சந்திப்பிலேயே மோதிக்கொள்கிறார்கள். கருத்துக்களால், கலைத்திறன் கொடுத்த துணிவால், இளமைத் துடிப்பால் அவர்கள் ஒருவரையொருவர் வெல்லப் பார்க்கிறார்கள். கடைசிக் கட்டத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தி வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்க முடியாமல், காதல் உள்ளங்களைப் பிரிக்காமல், திரைப்படத்திற்கு ஏற்றதாக இந்த சரித்திர நவீனத்தை அமைத்துள்ளார் பட அதிபர், டைரக்டர், கதை வசன கர்த்தா ஏ.வி. நாகராஜன். […]

Read more

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. மருத்துவக் கல்லூர மாணவர் நாவரசுவை சக மாணவர் ஜான் டேவிட் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர். அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜான்டேவிட் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இது குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டார், செந்தமிழ் கிழார். இதனால் […]

Read more

தெலுங்கு மொழிப் பெருங்காப்பியம்

தெலுங்கு மொழிப் பெருங்காப்பியம், தமிழ் மொழிபெயர்ப்பு நயவுரை நம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியார் பாடலுக்கிணங்க தமிழ் தாயின் சகோதரியான தெலுங்கு அன்னையின் மொழியின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் இயற்றிய ஆமுக்த மால்யத என்ற காப்பியத்தை சூடிக்கொத்தவள் என்று பைந்தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் ஆழ்வார்கள் ஆய்வு மைய தலைவரான முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் ஜெகத்ரட்சகன். திருமாலின் துணைவியான பூதேவி, தன் […]

Read more

மக்கள் கண்ட மகான்கள்

மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. (பக்தி வளர்த்த 31 ஹரிபக்த ரத்னங்கள்) இந்திய தேசத்தில் தோன்றிய மகான்கள் அனேகர். அந்த அருளாளர்களின் சதித்ரித்தை அறிவது, நம்மை நல்வழிப்படுத்தி, அறத்திலும், ஆன்மிக மேம்பாட்டிலும் நிச்சயம் உயர்த்தும். பக்தியால் மேம்பட்டு, பரமன் அருளைப் பெற்று, அற்புதங்கள் பல நிகழ்த்திய பத்ராசல ராமதாசர், கபீர்தாசர், கோராக் கும்பர், சோகாமேளர், கனகதாசர், பக்த மீராபாய், ராகவேந்திரர், புரந்தரதாசர் போன்ற 31 ஹரி பக்த சிரோன்மணிகளின் வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த […]

Read more

கிரவுஞ்சப் பட்சிகள்

கிரவுஞ்சப் பட்சிகள், கன்னட மூலம் வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 136, விலை 110ரூ. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான வைதேகி எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு.இச்சிறுகதைகள் எல்லாவற்றிலும் விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது. வாழ்க்கை மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிட்டிருக்கிறது, எத்தகைய மனோபாவங்களுடன் அலைய விட்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பில்  உள்ள சிறுகதைகளைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். பல ஆண்டுகள் வாழந்து ஒருவர் பெறும் வாழ்க்கை அனுபவங்களை இக்கதைகளைப் படிப்பதன் மூலம் ஒருவர் பெற முடியும். உட்கார இடம் கிடைக்குமா? என்று கேட்கும் […]

Read more

எங்கெங்கு காணினும் அறிவியல்

எங்கெங்கு காணினும் அறிவியல், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 128, விலை 60ரூ. நாற்பது அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல். புதுப்புது அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சுவாரசியமான தகவல்கள். ஜாவாத் துவில் கி.பி. 1891 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய இனத்தை அடையாளம் காட்டுகிறதாம். இதனை பித்திக்காந்த்ரோப்பஸ் எரக்டஸ் என்கின்றனர் மானிடவியலாளர். ஜாவா மனிதனும், பீப்கிங் மனிதனும் ஒரே மரபுடையவர்கள். இவ்வினத்தினை இன்றைய மங்கோலாய்டு என்று கூறலாம் என்ற தகவல்களை இந்திய […]

Read more
1 2 3 4 8